ஈழத் தமிழர் மண்ணில் வாழ்வுரிமைக்கான குரல்

பேரெழுச்சி ஒன்றுகூடல் 2012 செப்டம்பர் 22ம் நாள்

சனிக்கிழமை நேரம் 14.00 – 18.30 மணி

ஈகைப் பேரொளி முருகதாஸ் திடல், உலக அவை (ஐ.நா) வளாகம் செனிவா

செனிவா செல்லாதவர்கள்- உங்கள் ஊரில்/ பகுதியில்  கூட்டம் நடத்துங்கள்! ஒன்று கூடுவோம்! தமிழால் இணைவோம்! தமிழராய் இணைவோம்! சாதி, மதம், கட்சி ஆகியவற்றைக் கடந்து உல்கத் தமிழர்களே ! ஒன்றிணைவோம்! வாருங்கள்!

நோக்கம்:

“நாம் ஒரு தேசிய விடுதலை இயக்கம். இனவாதக் கொடுமைக்கு எதிராக, அரச அச்சுறுத்தல்(பயங்கர)வாத வன்முறைக்கு எதிராக நாம் விடுதலை வேண்டிப் போராடி வருகிறோம். எமது போராட்டம் ஒரு தெளிவான, ஞாயாயபூர்வமான அரசியல் குறிக்கோளைக் கொண்டது. உலக அவைச் சட்ட்திடங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தன்னுறுதிசெய் (சுய நிர்ணய) கோட்பாட்டின் அடிப்படையில் எமது போராட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.”

- தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் -

எமது நிலம் எமக்கு வேண்டும்.

1.பல ஆண்டுகளாக இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் அவை மார்ச், 2011 இல் வெளியிட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் உசாவல் நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை

செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் தன்னுரிமையுடன் வாழக்கூடிய வகையில்ல் முதற்கட்டமாக அங்கு மீதூர்ந்துள்ள சிங்களப் படை வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.

3.இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்குப் பகுதிகளை தொல் நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை உலக நாடுகள் அவை (அனைத்துலகம்) ஏற்பளிக்கவேண்டும்.

4.பேச்சு மற்றும் ஊடகத் தன்னுரிமை வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் பெருவிருப்புக்களை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் உலகநாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பினையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.

5.முப்பதாண்டுக் காலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்;கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

Pin It