இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்டவர்கள் தமிழர்கள். அப்படி அரும்பாடுபட்டு, அடிமையாக இருந்த இந்தியாவை சுதந்திர இந்தியாவாக மாற்றியவர்கள் தமிழர்கள். குறிப்பாக தலித்துகள். இப்பொழுது இந்திய தேசியம் தமிழ்த் தேசியத்தை நசுக்கிக் கொண்டு இருக்கிறது. அந்த தமிழ்த் தேசியத்திற்கு தன்னுயிரை துச்சமென மதித்துப் போராடிய தலித்துகளை தமிழ்த் தேசியவாதிகள் ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை! அவர்களின் இன்னல்களில் பங்கெடுப்பதில்லை!! அவர்களின் கண்ணீரைத் துடைக்க இவர்கள் கரங்கள் நீள்வதில்லை! போராட்டக் களங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள், எங்களது உடலில் ரத்தம் வடிந்தாலும், எங்கள் வாயில் ஆதிக்க சாதிகள் மலத்தை திணித்தாலும் கண்டு கொள்வதில்லை!!!
தமிழ் நாட்டின் இலக்கியத்தில், வரலாற்றில், தலித்துகளின் கனவுகளும் லட்சியங்களும் பேசப்பட்டிருக்கின்றன, போற்றப்பட்டிருக்கின்றன, சிறப்பிக்கப்பட்டும் கொண்டாடப்பட்டும் உள்ளன. அவர்களை கடவுள் அருள் பெற்றவர்களாக, அவரது கருணைக்குப் பாத்திரமான புண்ய புருஷர்களாக, மேல் தட்டுகளில் இருப்போரையும் உள்ளடக்கிய மொத்த சமூகத்தாலும் தொழத்தக்கவர்களாக காவியங்கள் பாடுகின்றன. கோவில்களில் அவர்கள் சிலைகள் ஆழ்வார்களாக, நாயன்மார்களாக வீற்றிருக்கின்றன. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சுந்தரமூர்த்தி நாயனார், அவர்தம் காலத்துக்கு முன் வாழ்ந்த நாயன்மார்கள் அனைவரையும் ஒவ்வொருவராகப் பெயர் சொல்லி அவர்கள் ஒவ்வொருவரும் தேவாம்சம் கொண்டவர்கள் என்றும் சிவனின் அருள் பெற்றவர் என்றும் அவர்களுக்கு முன் தாம் ஒரு எளிய தொண்டனே என்றும் தன் திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படும் நந்தனாரும் ஒருவர். புராணக் காலங்களில் மதிப்போடு இருந்த ஆதித்தமிழர்களான தலித்கள் பின்னாளில் சேரிகளில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்.
ஒடுக்கப்பட்ட மக்களை எவ்வாறு விடுவிப்பது, அவர்களை எப்படி அரசியல்படுத்துவது என சிந்தித்த அயோத்திதாச பண்டிதர், தன் தந்தை கந்தசாமியோடு ஊட்டி சென்றார். தன் 25 வயதில் “அத்வைதானந்த” சபையை 1860ல் உருவாக்கி நடத்தினார். நீலகிரியில் தேயிலைத் தோட்டப் பணியாளர்களையும் மலையின பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்தார். இதன் மூலம் சாதிபேத உணர்வை ஒழிக்க முற்பட்டார். இரங்கூனில் செல்வச்செழிப்பாக வாழ்ந்தாலும் தமிழின மக்கள் எப்படி சாதியால் ஒடுக்கப்பட்டார்கள்? தீண்டப்படாத மக்களாக ஒதுக்கப்பட்டது எப்படி? என்றும் அவர்கள் விடுதலை குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தார். மீண்டும் ஊட்டி வந்து, தன் உறவினரான ரெட்டமலை சினிவாசன் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு பட்டாபிராமன், மாதவராம், ஜானகிராமன், ராஜாராமன் 4 மகன்கள் பிறந்தனர். இந்நேரத்தில் ஊட்டிக்கு ஓய்வெடுக்க ஆல்காட் அவர்கள் வந்திருந்தார். பண்டிதரும் ரெட்டமலை சினிவசனும் ஆல்காட்டை சந்தித்துப் பேசினார்கள். பல முறை விவாதித்தனர்.
மதம், பவுத்த மதம் குறித்து நிறைய விவாதித்தனர். இச்சந்திப்புகள் பண்டிதரை இனொரு திசைக்கு இட்டுச்சென்றது .
சென்னையில் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்பதற்கு பள்ளி ஒன்றை துவக்கி நடத்திக்கொண்டிடுக்கும் அருட் பணியாளர் ஜான் ரத்தினம் அவர்களோடு பண்டிதருக்கு நட்பு ஏற்பட்டது. ஒத்த கருத்துகொண்ட இருவரும் சேர்ந்து பணியாற்றினார்கள். ஜான் ரத்தினம் 1882இல் திராவிடர் கழகம் என்ற ஒரு அமைப்பை நடத்திவந்தார்.
ஒடுக்கப்பட்ட மக்கள் விழிப்புணர்வு பெறவேண்டும் என்பதற்காக 1885இல் “திராவிட பாண்டியன்” என்னும் இதழை துவக்கினார். அந்த இதழின் துணை ஆசிரியராக பண்டிதர் பொறுப்பேற்றார். பின்னால் தமிழன் இதழ் சிறப்பாக நடத்தியதற்கு இந்தப் பின்புலமே காரணமாக இருந்தது. ஆல்காட் , ஜான் ரத்தினம் இருவருடைய தோழமையினால் பண்டிதரின் சிந்தனை விசாலமடைந்தது. தமிழின பூர்வகுடிகள் ஏன் தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள்? என்ற தேடுதலால் ஊர் ஊராக சுற்றித்திரிந்தார். அப்போதுதான் “நாராதீய சங்கைத் தெளிவு” எனும் ஓலைச்சுவடி கிடைத்தது. அதில் பவுத்தர்கள் எப்படி தீண்டத்தகாதவர்களாக ஆனார்கள் என்பதையும் சாதி பேத விவரங்களையும் விவரித்திருந்தது. அதன் 570 பாக்களையும் படித்துவிட்டு, தன் நெடிய ஆராய்ச்சியின் விளைவாக பவுத்தத்தின் அடிப்படையை தாம் வந்தடைந்ததாக பண்டிதர் குறிப்பிடுகிறார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் தொல்தமிழர்கள் சாதியற்ற திராவிடர்கள் உரிமைகளைப் பற்றி பேசி, வேத பிராமணீயத்தை எதிர்த்து, சாதி ஒழிப்பு, சுயமரியாதை, பகுத்தறிவு, பிரதிநிதித்துவம் போன்ற நவீன கருத்தாக்கங்களை உருவாக்கிய பண்டிதர் க.அயோத்திதாசரின் தமிழன் இதழ், 102 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. சென்னை இராயப்பேட்டையிலிருந்து புதன் தோறும் 19.06.1907 முதல் நான்கு பக்கங்களுடன் அன்றைய காலணா விலையில் “ஒரு பைசாத் தமிழன்” என்று தனித்துவமாய் பெயர் சூட்டப்பட்டு வெளிவந்தது. தமிழகத்தில் எந்த இயக்கமும் தோன்றாத காலத்தில் வேத மத, பிராமணீய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தமிழ் மொழியுணர்வு, பகுத்தறிவு, சமுக நீதி பிரதிநித்துவம், தலித் விடுதலை, சுயமரியாதை, இந்தி எதிர்ப்பு, பெண் விடுதலை போன்ற கருத்துகளை உரையாடல் செய்து பல இயக்கங்களுக்கு ஒரு முழுமையான அரசியல் கருத்துத் தொகுப்பை வழங்கிய தமிழன் இதழ் குறித்து யாரும் பேச தயக்கப்படுகிறார்கள்.
இதழியலிலும் அரசியலிலும் நவீனம் குறித்த கருத்தாக்கங்கள் தமிழன் இதழிலிருந்தே துவக்கம் பெற்றன என்று நாம் உறுதியாக கூறலாம். பண்டிதருடைய காலத்தில் இந்துத்துவம் மீட்டுருவாக்கம் செய்த காலம். பிரம்மா சமாஜம், ஆரிய சமாஜம் போன்ற அமைப்புகள் மூலம் அனைத்தையும் இந்துக்குள் வலிய திணித்த காலம். 1861 – 1891 வரை ‘யாரெல்லாம் கிறித்துவர்கள் இசுலாமியர்கள் இல்லையோ அவர்களெல்லாம் “இந்து” என பதிவு செய்த காலம். இதற்கிடையில் 1881களில் ஆங்கில அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளில் புகுந்து தலித்துகளுக்கு தனித்துவமான அடையாளத்தைப் பதிவு செய்கிறார். “ஆதித்தமிழன்” original tamils என்று பதிவு செய்ய வேண்டுமென வற்புறுத்துகிறார்.
அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்த காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக “பஞ்சமர்கள்” என்றும் Depressed Class என்று அழைப்பதை மறுத்து “ஆதித் தமிழன்” என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாகப் பதிவு செய்தார். இழிவான பெயர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழி என்றார். 1886 ஆண்டில் “ஆதி தமிழர்கள் (தலித்கள்) இம்மண்ணின் மைந்தர்கள், அவர்கள் இந்துக்கள் அல்ல” என அறிக்கை விட்டார். “நீண்ட காலத்திற்கு முன் நிலவிய பிராமணிய எதிர்ப்பு மரபின் வாரிசுகளே அவர்கள்” என்றார். தமிழ், தமிழன் அடையாளத்தை தலித் மக்களை மையமாகக்கொண்டு ஒரு தேசியத்தை கட்டமைக்க முயற்சிக்கிறார்.
இந்திய பாரம்பரியம் பௌத்தம் மதமாக இருந்தது என்பார். அதனை தன் தமிழ்ப் புலமை மூலம் விளக்குகிறார். இந்தியா என்ற சொல் ‘இந்திரம்’ என்பதின் திரிபு. இந்தியாவை புத்தனும் அவனைக் குருவாக கருதும் மக்களும் வாழும் நாட்டிற்கு ‘இந்திரதேசம்’ என்ற பெயர் வந்தது. ஆரியர் வருகைக்கு முன் இங்கே ஒரு தேசம் இருந்தது. இந்த தேசத்தை பவுத்தம் உருவாக்கியது. அதில் பகுத்தறிவு, மனித நேயம், சமயம், அறக்கருத்தொற்றுமை, மெய்யியல் மற்றும் நடைமுறை சார்பானதாகவே இருந்து வந்திருக்கின்றது. இதில் அந்நியரான வெளியாரின் ஊடுருவலால், படையெடுப்பால் காலப்போக்கில் அது மந்திர மாயத்தன்மையென திரிக்கப்பட்டது. அதாவது சொந்த நாட்டின் சாதியற்ற பண்பாட்டை அயல் சக்திகள், வெளியாட்கள் நசித்து திரித்துவிட்டார்கள்.
”மண்ணின் மைந்தர்களே இம்மண்ணை ஆளவேண்டும்” என்கிறார். 30-10-1912 தமிழனில் எழுதுகிறார், 'சுதந்திரம் அளித்தால் இம்மண்ணின் மைந்தரான தமிழருக்கே வழங்கவேண்டும்' என்றார். "தமிழ் மொழியில் பிறந்து, தமிழ் மொழியில் வளர்ந்து, தமிழ் மொழிக்குச் சொந்தமான பூர்வக்குடிகள் சுதேசிகளுக்கு வழங்கவேண்டும்”. மேலும் "கருணை தாங்கிய ஆங்கில ஆட்சியாளர்களே சுதேசிகள் மீது கருணை பாவித்து ஆட்சி அதிகாரத்தை இத்தேச பூர்வகுடிகளுக்கு அளிப்பதே கருணையாகும். நேற்று குடியேறி வந்தவர்களையும் முன்னர் குடியேறி வந்தவர்களையும் சுதேசிகள் எனக் கருதி அவர்களிடம் ஆட்சியை வழங்கினால், நாடு பாழாகி சீர்கெட்டுவிடும்” என நாடு விடுதலை பெற 35 ஆண்டுகளுக்கு முன்னரே எச்சரிக்கிறார். புரட்சியாளர் அம்பேத்கர் 1930களில் தலித்கள் ஒரு தேசத்தை ஆளுகிற வர்க்கமாக மாற வேண்டுமென்கிறார். இவ்வாறு பண்டிதர் அயோத்திதாசரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஆதிதமிழர்களான தலித்துகளை மையப்படுத்தியே ஒரு ஆளுமையை, ஒரு தேசத்தை உருவாக்க முயன்றார்கள்.
தமிழகத்தின் மற்றும் ஒரு புரட்சியாக அல்லது எழுச்சியாக பேசப்படுவது மொழிப்போராட்டம். அதில் தலித்துகளின் பங்களிப்பு அளப்பரியது. மொழிப்போரின் முதல் பலியே ஒரு தலித். 1937ல் நடைபெற்ற சென்னை மாகான பொதுத்தேர்தலில் நீதிக்கட்சி தோற்றது. அத் தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய தேசிய காங்கிரசு கட்சி இந்தி திணிப்பைத் தன்னுடைய கொள்கையாகக் கொண்டிருந்தது. சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் இந்தி மொழியைக் கட்டாயப்பாடமாக வைக்கப் போவதாக முதலமைச்சர் இராசகோபாலாச்சாரி அறிவித்தார். இந்தி மொழியை நம் மாணவர்களுக்கு பாடமாக வைத்தால் நம்முடைய தாய் மொழியாம் தமிழ் மொழிக்கு கேடு வரும், அதோடு நம்முடைய பண்பாடு, கலாச்சாரம் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த தமிழர்கள் கூட்டங்கூட்டமாக அணிதிரண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.
மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே. கரந்தைத் தமிழ்ச் சங்கம், திருவையாற்றுச் செந்தமிழ் கழகம், உலகத் தமிழ் மக்கள் தற்காப்பு பேரவை, நாமக்கல் தமிழ்ச் சங்கம், தென்காசி திருவள்ளுவர் கழகம், நெல்லைத் தமிழ்ப் பாதுகாப்பு சங்கம்….. போன்ற தமிழ் அமைப்புகளும், வேங்கடாசலம், உமாமகேசுவரனார், சோமசுந்தர பாரதியார், கா.சுப்பிரமணியம், கு.மு.அண்ணல் தாங்கோ போன்ற தமிழறிஞர்கள் தலைமையேற்று நடத்திய இந்தி எதிர்ப்பு ஊர்வலங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள், சாலை மறியல், உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களின் விளைவாக தமிழகம் முழுவதும் (ஆந்திரா, கேரளா, கர்நாடகம் உள்ளடக்கிய சென்னை மாகாணம் என்றாலும் அங்கெல்லாம் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெறவில்லை) தமிழர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில் குறிப்பாக தொல் தமிழர்கள் வாழ்ந்த பகுதியில் இந்தியெதிர்ப்புப் போர் கொழுந்துவிட்டு எரிந்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் மிக அதிகமாக தொல் தமிழர்கள் கலந்துகொண்டு சிறை சென்றனர். அதை "சிறையில் ஒழுங்காக சாப்பாடு கிடைக்கும் என்பதால் பல ஹரிசனங்கள் கைதாகியுள்ளார்கள்" என்று டாக்டர் சுப்புராயன் சட்டமன்றத்தில் தொல் தமிழர்களின் தமிழுணர்வைப் பகடி செய்தார். இதையே "அற்பக்கூலிகளுக்கு அமர்த்தப்பட்ட கூலிகள்" என முதலமைச்சர் இராசாசி கேவலப்படுத்தினார். இந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தமிழுக்காக முதன்முதலில் 15.01.1939ல் தன்னுயிரை ஈகம் செய்தவர் எசு.நடராசன் என்ற தொல் தமிழர். அவருக்கு அடுத்தே, மூன்று மாதங்களுக்குப் பின்னர் இடை நிலைச்சாதியைச் சேர்ந்த தாளமுத்து 11.03.1939ல் உயிர்த்தியாகம் செய்தார். ஆனால் ஏடுகளில் பெயர்ச் சூட்டலில் 'தாளமுத்து நடராசன்” என்று தாளமுத்து முன்பாகவும் நடராசன் இரண்டாவது இடத்திற்கும் ஒதுக்கியது. அதை உண்மையாக்கும் பொருட்டு அரசு மாளிகையொன்றிற்கு ‘தாளமுத்து நடராசன் மாளிகை’ என பிழையான வரிசையில் பெயர் சூட்டப்பெற்றுள்ளது.
தமிழ்மொழி காக்க உயிர்விட்ட நடராசன் பிணத்தை, மரணத்தை வைத்துதான் தமிழ்மொழி உணர்ச்சியை உசுப்பிவிட்டார்கள். "நடராசன் அவர் குடியில் ஒரே பிள்ளை. நம் மகன் சிறையிலிருந்து வருவான் அவனுக்கு திருமணம் செய்வோம் என் எண்ணிய நடராசன் பெற்றோர் ஏமாற்றமுற்றதையும் வருத்தமாகக் கூறி மணக்கோலத்தில் போக இருந்த நடராசன் அநியாயமாகப் பிணக்கோலத்தில் சென்று விட்டாரே” என்று நடராசன் இறுதி நிகழ்ச்சியில் கு.மு.அண்ணல்தங்கோ அவர்கள் உருக்கமாக பேசியுள்ளார். தமிழ்மொழிக்காக உயிர் விட்ட நடராசனின் மரணம் குறித்து விளக்கம் தந்த முதலமைச்சர் ராசாசி, "நடராசன் படிப்பறிவில்லாதவர், அதனால்தான் அவர் மறியலில் ஈடுபட்டார். அவரைப்போல படிப்பறிவில்லாத அப்பாவிகளை இந்தி எதிர்ப்பாளர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்” என்றார். அதற்கு கடுமையான கண்டனம் எழுந்தது.
நடராசனின் தந்தையார் முதல்வர் ராசாசியின் விளக்கத்தை மறுத்து, "இந்தி எதிர்ப்பிற்காக மறியலில் ஈடுபட்டு நடராசன் கைதானபோது அதற்காக வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கடிதம் எழுதிக்கொடுத்தால் விடுதலை செய்துவிடுகிறோம் என அரசு அதிகாரிகள் அவரிடம் வற்புறுத்தியுள்ளீர்கள். ஆனால் "கோழையாக வாழ்வதைவிட வீரனாக சாவதையே நான் விரும்புகிறேன்” என நடராசன் கூறியுள்ளார். அப்படியே வீரமரணமும் எய்துவிட்டார். இப்படியே தலித்துகளின் வரலாறு மறுக்கப்பட்டும், மறைக்கப்பட்டும் வருகிறது ...
இன்று சிலர் பேசுகிறார்கள் தமிழ்த் தேசியத்தை வீழ்த்தியது திராவிடமே. திராவிடத்தை வீழ்த்தினால் தமிழ்த் தேசியம் மலர்ந்து விடும் என்று. அந்த அறிவுஜீவிகளுக்கு ஒன்றை சொல்கிறேன். திராவிடம் என்பது பெரியாரின் புதிய கண்டுபிடிப்பு அல்ல. எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசனின் சித்தாந்தம். திராவிடம் என்பது அண்ணாதுரை, கருணாநிதி, வைகோ என்ற அரசியல்வாதிகளின் வெற்று முழக்கம் அல்ல. எங்கள் பாட்டன் அயோத்திதாசரின் கொள்கை முழக்கம். புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடன் வட்டமேசை மாநாட்டில் பேசிய எங்கள் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் கோலார் தங்கவயலில் பேசும்போது நாங்கள் கலப்படமில்லாத திராவிடர்கள் என்று பேசியிருக்கிறார்.
உதாரணமாக இன்று நகர்ப்புறங்களில் வாழ்பவர்கள் ரகசியமாகப் பேசு என்று சொல்லுவார்கள். ஆனால் சேரியில் வாழும் தமிழர்கள் கமுக்கமாகப் பேசு என்று தூயதமிழில் பேசுவார்கள். கமுக்கம் என்ற தூய தமிழை கமுக்கமாக சாதி இந்துக்கள் மறைத்து விட்டனர். புரட்சியாளர் அம்பேத்கர் தலித்துகள் யார் என்று குறிப்பிடும் போது இந்த மண்ணின் பூர்வீக குடிகள் நாகர்கள் தான். நாகர்கள் என்றால் யார்? இந்தியா முழுமைக்கும் சேரி என்ற சிறைச்சாலையில் வாழ்பவர்கள் தான் நாகர்கள். இவர்கள் தான் முற்காலத்தில் திராவிடர்களாக வாழ்ந்தார்கள், தமிழர்களாக வாழ்ந்தார்கள். தமிழர் என்பதுதான் திரமிளர், திராவிடர் என்று மாறியதாக சொல்கிறார். அதனால் தான் வடக்கே நாகலாந்த், மையத்தில் நாகபுரி கடைசியிலே நாகர்கோவில். ஆக நாகர்கள் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்தார்கள் என்றால், தமிழர்கள் இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்றுதான் பொருள். அவர்கள் திராவிடர்களாக இந்தியா முழுமைக்கும் வாழ்ந்தார்கள் என்று சொல்கிறார்.
இந்தியாவில் இரண்டே தேசியங்கள் ஒன்று இந்திய தேசியம், மற்றொன்று தமிழ்த் தேசியம். ஏன் மற்ற மொழிகள் எல்லாம் தேசிய இனங்கள் இல்லையா? என்றால் அவர்கள் எல்லோரும் இந்துத்துவத்தை ஏற்றுக்கொண்டார்கள், சமஸ்கிருத்தத்தை வழிபட்டார்கள். அவர்கள் மொழிவழி தேசியத்தை விரும்பவில்லை. இந்தியாவில் இந்திய தேசியத்தை எதிர்க்கும் ஒரே கருத்தியல் தமிழ்த் தேசியம் மட்டும் தான். தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க ஒரே வழி இதுதான் அது யாதெனில்:
இந்திய தேசியத்திற்கு எதிர்க்கருத்து தமிழ்த் தேசியம், தமிழ்த் தேசியத்தை வெல்ல ஏழை இந்தியாவை மாற்றவேண்டும், ஏழை இந்தியாவை மாற்ற சாதியத்தை ஒழிக்க வேண்டும், சாதியத்தை ஒழிக்க இந்துத்துவத்தை வேரறுக்க வேண்டும், இந்துத்துவத்தை வேரறுக்க அதைக் கட்டி காப்பாற்றும் இந்திய தேசியத்தை எதிர்க்க வேண்டும், இந்திய தேசியத்தை எதிர்க்க தமிழ்த் தேசியத்தை மீட்க வேண்டும். இதுதான் கருத்தியல். ஆக சாதியை ஒழிக்க தமிழ்த் தேசியம் தேவை, தமிழ்த் தேசியத்தை வெல்ல சாதியத்தை ஒழிக்க வேண்டும். இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளது. பிரித்துப் பார்ப்பது இரண்டுக்கும் குந்தகம், இரண்டையும் இழக்க நேரிடும் செயல். சாதி ஒழிப்புக்கான அல்லது ஆரியத்தை எதிர்ப்பதற்கான செயல்வடிவமாக விளங்கும் திராவிடத்தை எதிர்ப்பவர்களால் ஆரியத்தை எதிர்க்க முடியாது. ஆரியத்தை எதிர்க்க முடியாதவனால் இந்துத்துவத்தை வேரறுக்க முடியாது. இந்துத்துவத்தை வேரறுக்க முடியாதவனால் இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாது. இந்திய தேசியத்தை எதிர்க்க முடியாதவனால் தமிழ்த் தேசியத்தைக் கட்டி எழுப்ப முடியாது..
இன்றைய சமகாலத்தில் தமிழ்த் தேசியத்தின் முக்கிய பிரச்சினையான ஈழப்பிரச்சனையில் தலித்துகளின் பங்களிப்பு அளப்பரியது. போராட்ட களங்களுக்கும், பொய் வழக்குகளுக்கும் எங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் தமிழ்த் தேசியவாதிகள், எங்களது உடலில் ரத்தம் வடிந்தாலும், எங்கள் வாயில் ஆதிக்க சாதிகள் மலத்தைத் திணித்தாலும் கண்டு கொள்வதில்லை !!!
சகோதரி செங்கொடி தான் பிறந்தது பழங்குடியினர் சமூகமாக இருந்தாலும், மக்களோடு சரிசமமாக வாழமுடியவில்லை என்றாலும், மூன்று தமிழர்கள் உயிரைக்காக்க துணிந்தாளே - அவள் பிறந்த பழங்குடியின சமூகத்தின் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தார்களே - எந்த தமிழ்த்தேசியவாதி களத்திலே இறங்கிப் போராடினான்? மேலும் கடலூர் அன்னவள்ளியை சேர்ந்த ஆனந்த், ஜெயந்கொண்டம் ராஜசேகர், புதுக்கோட்டை பாலசுந்தரம், நெல்லை குருவிக்குளம் கிருஷ்ணமூர்த்தி, கரூர் சிவானந்தம், சீர்காழி ரவிச்சந்திரன், கடலூர் சுப்பிரமணி, சிதம்பரம் ராஜேந்திரன் இன்னும் பலபேர் உயிர்நீத்தார்கள்
யாருக்காக? எதற்காக? இவர்கள் எல்லோரும் மாடமாளிகையில் வாழும் கோடீஸ்வரர்களா? பெரும் பணமுதலைகளின் பிள்ளைகளா? பெரும் நிலச்சுவாந்தர்களின் வாரிசுகளா?
இல்லையே... அன்றாடம் காய்ச்சிகள்... சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்கள்... ஆனாலும் தமிழனுக்காக உயிரை இழந்தனர்... ஈழத்தமிழர்கள், ஈழத்தமிழர்கள் என்று பால்குடம் தூக்கும் தமிழ்த் தேசிய சிந்தனையாளர்கள் யோசிக்க மறுப்பது எது?
பால்விலை உயர்ந்தாலும், பேருந்து கட்டணம் உயர்ந்தாலும், ஈழத்தமிழர் பிரச்சனையானாலும், மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டுமானாலும் முல்லைப் பெரியார் பிரச்சனையானாலும் வீதியில் இறங்கி உயிரைத் துச்சமென மதித்து உயிர்துறக்கும் அவர்கள் வீடுகள் கொளுத்தப்பட்டாலும், அவர்களை அரசே சுட்டுக்கொன்றாலும், அந்தப் பெண்களை அரசு அதிகாரிகள் பாலியல் பலாத்காரம் செய்தாலும், அதிகார வர்க்கம் அவர்கள் வாயில் மலத்தைத் திணித்தாலும், சாதி வெறியர்கள் அவர்கள் வாயில் சிறுநீர் கழித்தாலும் தமிழ்த் தேசியவாதிகள் காதில் போட்டுக்கொள்ளமாட்டார்கள்...
உண்மையான ஆதித்தமிழர்களான தலித்துகளின் விடுதலையைப் பொறுத்தே தமிழ்த் தேசிய விடுதலை அமைந்துள்ளது. ஆனால் சுண்டல் என்றால் தெய்வபக்தி!
இனிப்பு என்றால் தேசபக்தி!! என்ற நிலை மாறி
ஈழப் பிரச்சனை என்றால் தமிழ்ப் பற்று !!
தலித் பிரச்சனை என்றால் சாதிப் பற்று!!
என்ற நிலையை தமிழ்த் தேசியவாதிகள் உருவாக்கி விட்டனர்.
அன்றைக்கு ஆங்கிலேயர்கள் உண்மையான சுதேசியான ஆதித்தமிழனான தலித்துகளிடம் விடுதலையைக் கொடுக்காமல் விட்டதால் இன்று தமிழினம் அடிமைப்பட்டுக் கிடக்கிறது. அதுபோல இன்றைய சூழலில் தலித்துகளைப் புறக்கணித்து தமிழ்த் தேசியம் என்பது பகல் கனவே... அப்படி ஆதிக்க சாதிகளிடம் தமிழ்த் தேசியம் கிடைத்துவிடுமானால் இனி என்றைக்கும் தமிழினம் முன்னேறப்போவதில்லை, வீழ்ந்துவிடும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை... தலித் விடுதலையே ! உண்மையான தமிழ்த் தேசிய விடுதலை!!
திராவிடத்தினால் சாதிப்பாகுபாடு ஒழியவில்லை, தமிழர்களுக்கிடை யே மேலும் பிளவுகளை உண்டாக்கி பலம் வாய்ந்த சாதிக்கட்சிகளை உருவாக வழிவகுத்தது தான் மிச்சம்.ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, அது தமிழரல்லாதவர்கள ் தமிழ்நாட்டில் தமது பொருளாதார, அரசியல் ஆதிக்கத்தை மேலும் நிலைநாட்ட வழிவகுத்தது. தலித் என்பது தமிழ்ச்சொல்லுமல ்ல, அந்தச் சொல்லை இரவல் வாங்கியது போலவே, தமிழ்நாட்டின் ஆதிக்கசாதிகளைப் பழிவாங்க வேண்டுமென்பதற்க ாக, கொள்கைகளையும் இந்தியாவின் மற்ற மாநிலங்களிலுள்ள தலித்துகளிடமிரு ந்து, இரவல் வாங்கி, அவர்களுடன் ஒன்றிணைந்து, தமிழ்த்தேசியத்த ின் முதுகில் குத்தினால் தமிழ் தலித்துக்கள் தமிழையும் இழந்து, தமிழரல்லாத தலித்துகள் என்ற காட்டு வெள்ளத்தில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள் . தமிழ்நாட்டிலிரு ந்து மும்பாய் போன்ற பெரியநகரங்களுக் குப் போய்க் குடியேறிய தலித்துக்களெல்ல ாம் உயர்ந்தசாதிப் பணக்காரர்களாக மாறிவிடவில்லை. இன்றும் அவர்கள் கூலித் தலித்துகளாகத் தானிருக்கிறார்க ள்; அதனால் சொந்த மண்ணின் விடுதலையும், பொருளாதார மீட்சி மட்டுமே அந்த மண்ணின் மைந்தர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும். முதலில் நாம் தமிழர்களாக ஒன்றிணைந்து தமிழ்மண்ணில் தமிழர்களின் பொருளாதார அரசியல் ஆதிக்கத்தை தமிழரல்லாதவர்கள ிடமிருந்து மீட்டெடுக்கப் போராடுவோம் என்றால் அதன் கருத்து ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கெதி ரான கொடுமைகளைப் பொறுத்துக் கொள்வதென்பதல்ல.
இந்தியாவின் மாண்பு மிகு நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் ஒரேயொரு நாடாளுமன்ற நாற்காலிக்காக சோனியாவின் காலில் விழுந்து அன்னையென்று அலறும் வரை என்னைப் போன்ற பல ஈழத்தமிழர்கள் திருமாவளவனை ஒரு உண்மையான சகோதரனாக, எந்தளவுக்கு நம்பினார்கள், நேசித்தார்கள் என்பது தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குத் தெரியாமலிருக்கல ாம். அந்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் சாதிக்கும் எந்த தொடர்பும் கிடையாது, பெரும்பாலான ஈழத்தமிழர்களுக் கு திருமாவளவன் என்ன சாதியென்றே தெரியாது. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படுவதுமில ்லை.
[என்னுடய சாதி சான்றிதழில் மதம் என்னும் இடத்தில் எதையும் பூர்த்தி செய்யமல் இருக்க முடியுமா? இந்து என்று பூர்த்தி செய்ய விரும்பவில்லை.]
தமிழர்களின் சமயம் இந்து சமயம் அல்ல. எங்களுடைய முன்னோர்களின் மதம் சைவம் (சிவனியம்) அல்லது மாலியம். ஈழத்தமிழர்கள் இன்றும் தம்மை சைவர்கள் என்று தான் அழைப்பது வழக்கம். தமிழ் நாட்டிலுருவாகி, எமது முன்னோர்களால் பேணப்பட்ட சைவத்திலும் மாலியத்திலுமுள் ள அறுபத்து மூன்று நாயன்மார்களிலும ், ஆழ்வார்களிலும் எல்லாச் சாதியினரும் குலத்தினரும் உண்டு. புலையர் தொடங்கி அரசர் வரை யாவரும் சமமானவர்கள். அதைக் காட்டவே கோயில்களில் நாயன்மார்களின் சிலைகள் ஒரே பீடத்தில் வைக்கப்பட்டிருப ்பதைக் காணலாம். உதாரணமாக ஆதித்தமிழ்ப்பள் ளரான திருநாளைப் போவாரும் (நந்தனார்), பிராமணரான சம்பந்தரும், வேளாளரான திருநாவுக்கரசரு ம் அரசியான மங்கையர்க்கரசிய ாரும், ஒன்றாக ஒரே பீடத்தில் வைக்கப்படுவது. சைவத்தில் எல்லோரும் சமம் என்பதைக் காட்டுவதற்காகத் தான். ஆனால் அத்தகைய தமிழர்களின் சமயம், வந்தேறி பார்ப்பனர்களால் கடத்தப்பட்டு சாதிப்பேய்பிடித ்து, தமிழ்த் தன்மையிழந்து நிற்கிறது. அதை நாம் மீட்டு மீண்டும் தமிழாக்க வேண்டுமே தவிர, அதை விட்டு விலகியோடக் கூடாது. அப்படிச் செய்வது குளத்தோடு கோபித்துக் கொண்டு குளிக்காமல் இருப்பது போன்றது. சாதிச்சான்றிதழ் விட்டொழிக்கப்பட வேண்டியது அதுவரை இந்து என்பதற்குப் பதிலாக சைவம் அல்லது மாலியம் எனக் குறித்துக் கொள்ளுங்கள்.
நன்றி
இவண்
ராஜகணபதி
இன்னும் இரட்டை குவளை,பிணம் புதைக்க வழியில்லை.ஆகவே சாதி ஒழியாமல் தமிழ்தேசியம் காண முடியாது.ஈழத்தம ிழர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை.அவ ர்கள் ஐம்பது ஆண்டுகள் சிங்கள பேரினத்துடன் போராடியதால்,தமி ழ்நாட்டு உள்சாதி கொடுமைகள் இவர்களுக்கு தெரியாது.எனவேதா ன்,மூத்திர பையை தன்னோடு சுமந்து பட்டி தொட்டியெல்லாம் சுற்றித்திரிந்த ு பகுத்தறிவு போதித்தவன் மீது கல் அடிக்கிறார்கள்.
இருப்பாய் தமிழா நெருப்பாய்! என்று சொல்லியே தாழ்த்தப்பட்ட தமிழ் நந்தனை அன்று நெருப்பாக்கினார ்கள். இன்று கரும் பார்ப்பனரகளுக்க ும் நந்தன்கள் தேவைப்படுகிறது.
ஈழத்தமிழர்களுக்கு, சிங்கள இனத்துடன் போரிட்டே பழகியவர்கள் இவர்களுக்கு உட்சாதி பூசல்,சாதிக்கலவ ரம் எதுவுமே தெரியாது.அயோத்த ிய தாசர் பண்டிதரும் தெரியாது,பெரியா ரும் தெரியாது.எனவே, செந்தமிழ் பேசும் கரும் பார்ப்பனர்களை இனி கண்டுகொள்ளவேண்ட ியதில்லை
தமிழர்களிடையே சாதியை இயக்கங்களால் ஒழிக்க முடியாது. ஏனெனில் ஒவ்வொரு சாதிக்கும் தனிப்பட்ட கலாச்சாரம், பழக்க வழக்கம் (உணவு உள்ளிட்ட) ஆகியன உள்ளன. மேலும் தங்களுக்கென ஆண்ட வரலாறும் அடிமைப்பட்ட அல்லது அடிமைப்படுகிற வரலாறும் உள்ளதாக ஒவ்வொரு சாதியினரும் நம்புகிறார்கள். தாழ்த்தப்பட்ட சாதிகள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல. சாதி இருக்கிறது என்று சொல்பவர்களை விடவும் சாதி இல்லை என்று சொல்பவர்கள் தான் மோசமானவர்கள். அவர்களிடம் தான் நாம் உஷாராக இருக்க வேண்டும் என தாழ்த்தப்பட்ட மக்கள் நினைக்கிறார்கள் . ஆகவே சமூக நோக்கம் கொண்ட இயக்கங்கள் சாதிகளுக்கிடையே சமத்துவத்தையும் நல்லிணக்கத்தையு ம் பேண உழைக்க வேண்டும். சாதி ஒழிப்பை காலம் பார்த்துக்கொள்ள ும். இங்கே பிரச்சினை என்னவெனில் தமிழ்நாட்டில் வீரவன்னியராகவும ் முக்குலத்தோராகவ ும் ஆதிதிராவிடர்களா கவும் இருப்பவர்கள் தமிழகத்தின் எல்லையை தாண்டினால் ஒட்டுமொத்தமாக ‘தமிழர்’ என்னும் அடையாளத்துக்குள ் (அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டால ும்) வந்து விடுகிறார்கள். அந்த ‘தமிழர்’ என்னும் அடையாள அடிப்படையில் அவர்களுக்கு அநியாயங்கள் நேர்கின்றன (சில சமயம் தமிழகத்துக்குள் ளேயும்). அந்த அநியாயங்களை ‘தமிழர்’ என்னும் அடிப்படையில் தான் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும். இங்கே திராவிடம் என்பது எங்கே வந்தது?
மொழிப்போராட்டமானாலும்,திராவிட இயக்க வளர்ச்சியானாலும ் தலித் மக்களின் பங்களிப்பை யாராலும் மறைக்கவோ,மறுக்க வோ முடியாது.
ஆனால்,தோழர் அங்கனூர் தமிழன் வேலு,
///மக்களின் தமிழ் மொழி உணர்வை, இந்தி திணிப்பு எதிர்ப்புணர்வை ஒருங்கிணைத்து வழிநடத்திச் சென்றவை தமிழ் அமைப்புகளே///
- என்று எழுதுவது ஏற்க இயலாதது.தமிழ் அமைப்புகள் போராட்டத்தைத்தொடங்கியிருக்கலாம்.
ஆனால்,அப்போராட்டத்தை பெரியார் கையில் எடுத்த பிறகே தீவிரமடைந்தது.
இந்தியை எதிர்த்து தமிழர் பெரும்படை சென்னை நோக்கி அணிவகுத்தது பெரியாரின் தொண்டர்களால்தான ். பெரியாரே சிறை புகுந்தார். ராஜாஜியால் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார் . நடராசனும்,தாளமு த்துவும் பெரியார் தொண்டர்கள். அதனால்தான் பெரியாரின் கைகளைப் பற்றியவாறு நடராசனும் தாளமுத்துவும் நிற்பதுபோல சிலை அமைக்கவேண்டும் என்று அண்ணா பேசினார்.(இக்கோ ரிக்கையை செயல்படுத்துங்க ள் என கடந்த மாதம் தொல்.திருமா அவர்கள்,தி.மு.க .தலைவர் கலைஞருக்கு வேண்டுகோளாக வைத்துள்ளார்)
தந்தை பெரியாரை விட்டுவிட்டு 1938 முதல் இந்தி எதிர்ப்புப் போர் வரலாற்றை எழுத முனைவது சிறுபிள்ளைத்தனம ். ராஜாஜியைப் பற்றி பெரியாருக்குத் தெரியும். அதனால்தான் அவ்வளவு கடுமையான தொடர் போராட்டத்தை பெரியார் நடத்தினார். பெரியாரைப் பற்றி ராஜாஜிக்கும் தெரியும். அதனால்தான் ராஜாஜியும் பணிந்தார். இதுதான் உண்மை வரலாறு. தமிழ் அமைப்புகள் மட்டுமே முன் எடுத்த எந்தப் போராட்டமும் வென்றதில்லை. திராவிட இயக்கமும்,பெரிய ாரும்தான் தமிழின் சிறப்பை மக்கள் மத்தியில்,(ஆமாம ்...தமிழ் மக்கள் மத்தியில்தான்) கொண்டுசென்றவர்க ள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ் -தமிழன் - தாழ்த்தப்பட்டோர ் விடுதலை - தந்தை பெரியார் இல்லாமல் சாத்தியமில்லை. விமர்சனத்தை எப்படி வேண்டுமானாலும் வையுங்கள். காலம் தீர்மானிக்கட்டு ம். ஆனால்,வரலாற்றை உண்மையாக எழுதவேண்டும். இது என் பணிவான வேண்டுகோள். தமிழ்தேசியவாதிக ளின் தவறான முன்னெடுப்புகள் நடைபெறும் காலத்தில் திராவிட இயக்க பெரியாரிஸ்டுகளு ம் தலித் போராளிகளும் ஒருங்கிணைந்து அவர்களைத் திருத்தமுற்படுவ ோம். சரியான புரிதலைத் தந்து, இணைந்து தமிழ்தேசியத்தை முன்னெடுக்க முனையவேண்டிய காலகட்டத்தில் தேவையில்லாமல் தவறான தகவல்களைத் தரலாமா?
பெரியசாமி,
இப்படித்தான் யாழ்ப்பாணத்தார் மீது அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவங்களை எல்லாம் சுட்டிக் காட்டி, மட்டக்களப்பான், யாழ்ப்பாணத்தான் என்று பிரித்து, வெண்ணை திரண்டு வரும் போது தாழியை உடைத்தது போல தமிழீழ விடுதலையைச் சிங்களவனிடம் காட்டிக் கொடுத்தார்கள்;. அதே யாழ்ப்பாண மேட்டுக்குடிகள் தான் வெள்ளாளரல்லாத பிரபாகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை மறந்து விடக் கூடாது. பெரும்பான்மையான அவர்களின் ஆதரவில்லாமல் புலிகளின் ஈழவிடுதலைப் போராட்டம் முப்பதாண்டுகளுக ்கு மேல் தாக்கிப்பிடித்த ிருக்க முடியாது என்பது தான் உண்மை. உதாரணமாக திருமாவளவனை வெளிநாடுகளிலெல் லாம் வரவேற்றுத் தமது உடன்பிறாவாச் சகோதரனாக ஏற்றுக் கொண்டவர்களும் யாழ்ப்பாண மேட்டுக்குடியின ர் தான். அதை அவரிடமே கேட்கலாம், நாம் தமிழர் தலைவர் சீமான் என்ன சாதியென்று எனக்கே தெரியாது. அதையறிய வேண்டுமென்ற எண்ணம் கூட எனக்கேற்பட்டதில ்லை. அதனால் இன்னும் யாழ்ப்பாணத்தமிழ ர்களை மட்டும்சாதி வெறி பிடித்தவர்களாக காட்டமுனைவது தவறு, அப்படிச் செய்தால் சிங்கள அரசால் யாழ்ப்பாணத்தமிழ ர்களை வில்லன்களாக்கி, பழைய சம்பவங்களை நினைவுபடுத்திப் பிரதேசவாதத்தைப் பெரிது படுத்தி, தமிழர்களைப் பிரிப்பதற்காக வாடகைக்குப் பிடிக்கப்பட்டிர ுக்கும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள தமிழர்களில் சிலருக்கும் உங்களுக்கும் வேறுபாடில்லாமல் போய்விடும்.
ஈழத்தில் தமிழைப் பேசினாலும் தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்தா தவர்கள் முஸ்லீம்கள். தமிழ்நாட்டில் தாமும் தமிழர்கள் என அடம்பிடித்தாலும ் அவர்களின் விசுவாசம் எல்லாம் அரபு நாடுகளில் தான். சர்வாதிகாரி சதாம் ஹூசையினுக்காகவு ம், பயங்கரவாதி பின்லாடனுக்காகவ ும் அழுது வடித்த தமிழ்நாட்டு முஸ்லீம்கள், முள்ளிவாய்க்கால ் படுகொலையைப் பார்த்து மகிழ்ந்ததும் என்னைப் போன்ற தமிழர்கள் பலருக்கும் தெரியும். அதனால் நீங்கள் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதைப் பார்க்க சிரிப்பு வருகிறது. இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் தமிழ்நாட்டுத் தமிழர்கள் சாதி வேறுபாடுகளை மறந்து ஒன்று படுவதையும், ஈழத்தமிழர்கள் தமது சகோதரர்களுடன் 'நாம் தமிழர்களாக' இணைவதையும் பார்க்க உங்களைப் போன்றவர்களால் பொறுக்க முடியவில்லை. முஸ்லீம்கள் என்ற அடிப்படையில் மலையாள முஸ்லீம்களும், ஹைதராபாத் முஸ்லீம்களும். ஏன் ஆப்பிரிக்க முஸ்லீம்களும் கூட, உங்களின் மொழி, இன, கலாச்சார, நாட்டு வேறுபாடுகளை மறந்து ஒன்று படுகிறீர்கள், ஆனால் நாங்கள் இனத்தாலும், மொழியாலும், கலாச்சாரத்தாலும ் வேறுபாடில்லாத தமிழர்கள் ஒன்றிணைய முனைந்தால் உங்களுக்குப் பொறுக்க முடியவில்லை, எங்களுக்கிடையேய ுள்ள சாதிப் பிரிவுகளையும், பழைய சம்பவங்களையும் நினைவு படுத்தி எப்படியாவது அதைத் தடுக்க நினைக்கிறீர்கள் , ஏனையா உங்களுக்கு இந்த நரிக்குணம்?
ஒரு முஸ்லிம் பெயரில் ஒரு பார்ப்பான் எழுதலாம்,ஸ்ரீ இராமன் என்ற பெயரில் கிருஸ்தவன் எழுதலாம்.ஆக பெயரில் ஒன்றும் இல்லை. “ ஷாலி” பெயரை வைத்து நீங்கள் மயிர் பிளக்கும் ஆராய்ச்சி செய்ய தேவையில்லை.ஷாலி காக்கா,ஜோலி எல்லாம் வேண்டாம்.இது கீற்றின் அசல் கட்டுரையை விட்டு வாசகர்களை திசை திருப்பும் நாடகம் நல்லதல்ல. ஆட்டத்தை மட்டும் பாருங்கள் ஆளைப்பார்க்காதி ர்கள்.கருத்துக் கு கருத்து இதுதான் கண்ணியம்.சொல்கி றவன் நொண்டியா,குருடன ா, பரதேசியா,முஸ்லி மா,கிறிஸ்தவனா,இ ந்துவா இந்த ஆராய்ச்சி அனாவசியம். தேவையில்லை. “வேத” வியாசன் என்ற மாபெரும் புனைபெயரில் எழுதுபவர் “கைப்புள்ளே” ரேஞ்சுக்கு போகக்கூடாது என்பது என் தாழ்மையான கருத்து
உங்களின் கருத்தை ஒப்புக்கொள்கிறே ன். தொப்பி அளவு சரியானவர்கள் போட்டுக் கொள்ளலாம், ஆனால் அது அளவில்லாதவர்கள் எதற்காக இந்தளவுக்குக் கூச்சலிட வேண்டும் என்பதைத் தான் புரிந்து கொள்ள முடியவில்லை. "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போலல்லவா இருக்கிறது உங்களின் பதில். அசல் கட்டுரையைத் திசைதிருப்பி ஈழத்தமிழர்களைச் சீண்டுவது நானல்ல நீங்கள் தான். "ஒரு முஸ்லிம் பெயரில் ஒரு பார்ப்பான் எழுதலாம்,ஸ்ரீ இராமன் என்ற பெயரில் கிருஸ்தவன் எழுதலாம்.ஆக - பெயரில் ஒன்றும் இல்லை- " என்று பெயருக்குப் பெரிய விளக்கம் தந்து விட்டு, எனது பெயருக்கு மட்டும் "வேத" என்ற அடைமொழியும் சேர்த்து, விளக்கவுரையுடன் உங்களின் தாழ்மையான கருத்தையும் தெரிவித்த உங்களைப் பார்க்க்கச் சிரிப்புச், சிரிப்பாய் வருகிறது. ஷாலி என்ற பெயரில் எழுதுகிறீர்கள் என்பதற்காக உங்களை ஒரு காமெடியனாக மாற்றிக் கொள்ள வேண்டிய தேவையில்லை என்பது என்னுடைய பணிவார்ந்த வேண்டுகோள். :-)))
தயவு செய்து ஆக்கப் பூர்வமான கருத்துகளை தாருங்கள்.
மறைய வைக்க முடியும். தமிழ்த் தேசிய ஆட்சியாளர்கள் உருவாக்கும் கல்வி மற்றும் பொருளாதார கொளகைகள் இதற்கான கட்டுமானத்தை மிக வலுவாக உருவாக்கும். ஒருவேளை அப்பொழுதும் சிலர் ஆதிக்க சாதி உணர்வோடு செயல்பட்டால், அவர்கள் மீது கடுமையான சட்டங்கள் பாய்ந்து அவர்களை ஒழித்து கட்டும் என்கிறார் மணியரசன். இதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்றாலும் கூட, இது தான தலித் விடுதலைக்கான ஆக்கப்பூர்வமான ஒரே வழி. ஜெர்மன், சீனா பொன்ற நாடுகளே இதற்கு கண்கூடான உதாரணம்.
//திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துப் பேசியுள்ளார். அத்தகைய பெரியார்களில், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் என்று சிறப்பிக்கப்படு ம் நந்தனாரும் ஒருவர். புராணக் காலங்களில் மதிப்போடு இருந்த ஆதித்தமிழர்களான தலித்கள் பின்னாளில் சேரிகளில் அடைத்து சித்ரவதை செய்யப்பட்டனர்.//
//அப்போதெல்லாம் சாதியைச் சொல்லித்தான் அழைப்பார்கள். சாதிதான் தமிழனுக்கு அடையாளமாக இருந்த காலம். அரிஜன் என்ற வார்த்தை புழக்கத்தில் இல்லை. அதற்குப் பதிலாக “பஞ்சமர்கள்” என்றும் டெப்ரெச்செட் ச்லச்ச் என்று அழைப்பதை மறுத்து “ஆதித் தமிழன்” என அழைத்தார். சாதியின் பெயரால் அழைக்கப்பட்ட தமிழர்களை சாதியற்ற தமிழர்களாகப் பதிவு செய்தார். ////இழிவான பெயர்களை மறுப்பது என்பது கூட சாதி ஒழிப்புக்கு வழி///// என்றார். :-அயோத்திதாசப் பண்டிதர்//
சமூகத்தால் இழிவாகப் பழித்துக் கூறும் இழி சொல்லான பள்ளர் என்பதை இன்றைக்கு அச்சாதியைச் சேர்ந்தவர்கள் மறுத்து தம் சாதியினைக் குறிக்க மள்ளர்கள் என்ற சொல்லையும்,தேவே ந்திர குல வேளாளர் என்றும் வழங்கிவருவது கட்டுரையாளருக்க ுத் தெரியாதா?தாம் விரும்பாத பெயரை சொல்லி ஒருவரை அழைப்பது,எழுதுவ து கூட ஒரு தீண்டாமைதான். அய்யா அயோத்திதாசப் பண்டிதர் எதற்காக ஆதித் தமிழன் என்ற சொல்லைப் பயன்படுத்தினார் ?அவரது,வேண்டுகோ ள் நிறைவேற்றப் பட்டதா? நிறைவேற்றப்பட்ட து எவ்வாறு?தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கர்கள் ஆதித் ஆந்திரர்! என்றும்,கன்னடர் ஆதிக் கன்னடர்! என்றும் வழங்கப்பட்டவர்க ள் தமிழர்கள் மட்டும் ஆதி திராவிடர்கள்!!! !!!!!!! என்று வழங்கப்படுவது ஏன்?
அய்யா அயோத்திதாசப் பண்டிதர் வாழ்ந்த காலத்தே இந்து பிராமணர்களின் கொட்டம் அதிகம் இருந்தது.பிராமண க் கருத்துக்களால் ஒடுக்கப்பட்டவர் கள் மிக அதிகம் பாதிப்படைந்து வந்ததால்,அதை எதிர்த்து நிற்பதுபோல் நின்று ஒடுக்கப்பட்டோரி ன் உண்மையான விடுதலையான நில மீட்பைப் பற்றி மறந்தும்,நரித்த னமாக பேசாத பெரியார், பிராமணர்களின் அரசுவேலையில் மட்டும் கைவைத்து பிற்பட்ட வகுப்பினர் (((ஒடுக்கப்பட்ட ோர்கள் ஒடுக்கப்பட்டதனா ல், படுவதால் இட ஒதுக்கீடு.பிற்ப ட்ட வகுப்பினருக்கு எதற்கு இட ஒதுக்கீடு?))) என்ற, தேவை இல்லாத ஒன்றை உருவாக்கி திராவிடக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இயக்கத்தை முழுமையாக உணர்ந்ததினால்தா ன்,அவர் ஒடுக்கப்பட்ட இனத்தைக் குறிக்க,
திராவிடம் நம்முடைய இனத்தை குறிக்கும் சொல்லாகாது என்பதால்தான், ஆதித் தமிழன் என்றும் ஒடுக்கப்பட்ட தமிழர்களை அழைத்தார்.இது புரிகிறதா?இல்லை இன்னமும் நம்மை திராவிடன் என்றுதான் அழைப்பீர்களா?????
அதுசரி, இன்னமும் எத்தனை காலத்திற்குத்தா ன்!!! பார்பனியர்களை குறை சொல்லிக் கொண்டிருக்கப் போவதாக உத்தேசம்? என்னுடைய கள ஆய்வின்படி தமிழகத்தில் ஒடுக்கப்பட்டர்க ள் அனைவரும் தங்களது நில புலன்களை வடுக இனதாரிடமும் வெகுகாலத்திற்கு முன்பேயும் அதாவது பாளையப்பட்டு எடுபுடி நாயக்கர் சமின்களிடம் அதிகளவும் ,முக்குலத்தோர், பிள்ளை போன்ற சாதியினரிடம் சுமார் 100 வருடங்களுக்கு முன்பும் இன்றளவும் முறையற்ற முறையில் இழந்திருக்கிறார ்கள் என்பதே உண்மை.இன்றைக்கு ம் மிக அதிகமான வளமான நில புலன்கள் தென் தமிழகத்தில்(பிற பகுதிகளிலும் அவ்வாறே எனத் தெரிகிறது) நாயக்கர்களுக்கு ம், ரெட்டியார்களுக் கும் உள்ளதை யாராவது மறுத்துப் பேசுவீர்களா?ஏன் நீங்களெல்லாம் உயர்த்திப் பேசும் இராமசாமி நாயக்கரும் அளவில்லாத செல்வம் படைத்தவரே!இராமச ாமி நாயக்கர் கண்களுக்கு இவையெல்லாம் புலப்படவில்லையா ?பிராமணர்களின் அரசுவேலை மட்டும்தான் தெரியுமோ என்னவோ?இதுதான் நீங்கள் கூறும் பரந்துப்பட்ட பார்வையா(இதுதான ் செலெச்டிவெ அம்னெசிஅ வா?)அதனால்தான் அவருக்குப் பார்ப்பனியர்களி ன் அரசதிகாரம் மட்டும் கண்ணிற்கு தெரிந்ததோ????? இரசியாவிற்குச் சுற்றுப் பயணம் செய்து திரும்பியவர் மொழிக் கொள்கையையும் ,இனவாதக் கொள்கையையும் பிற்போக்கு என்றாரே?இரசியா பல்தேசிய இனஒடுக்குமுறை கொண்ட நாடு என்பது தெரியாதா?சரி அதை விடுங்கள்,அங்கு சென்று திரும்பியவர் உண்மையாக பேசியிருக்க வேண்டியது பொதுவுடமைக் கொள்கைகளைப் பற்றிதான்.பேசிய ிருக்கா விட்டாலும் மனதுள் நினைத்திருப்பார ்.பொது உடமைக் கொள்கைகளை கொண்டுவந்தால் எங்கே நம் சொத்தும் பறிபோகிவிடுமே என்றுதானே?அதனால ் தான் தன் சொத்தைக் கூட உயில் எழுதி வைத்தார்???? உண்மையில் இராமசாமி நாயக்கருக்குத் தெரியாதா?ஒடுக்க ப்படுபவர்களுக்க ு உடனடித் தேவை பொருளாதாரத் தன்னிறைவென்று?ப ின்னர் மற்றனைத்தையும் அவர்களே முயன்று பெறுவார்கள் என்பதே உண்மையிலும் உண்மை.இன்றைக்கு எங்கெல்லாம் ஒடுக்கப்பட்டர்க ள் திருப்பி அடித்திருக்கிறார்களோ!
அங்கெல்லாம் அவர்கள் நில உடமைச் சமுகமாக, பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற ஊர்களாக இருப்பதைக் காணலாம்.பெரியார ் ஒடுக்கப்பட்டவர் களுக்காக நிறைய செய்து இருக்கிறார் என்று அனைவரும் சொல்கிறார்களே தவிர என்ன செயல் செய்தார் என்று கூறவில்லை. வைக்கம் போரட்டத்தை தவிர.அதுவும் அவரது சொந்த மாவட்டத்திலேயே ஒடுக்குமுறை இருக்கும் பொது கேரளா சென்று போராடப் போனார்?ஏன்????ப ிற்பட்ட சாதியினர் தொலைத்து விடுவார்கள் என்றா?சரி,அதனைய ும் விடுங்கள் இவரது காலத்தில்தான் இராமநாதபுரத்தில ் தியாகி இமானுவேல் சேகரன் படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நிகழ்ந்த கலவரங்கள் அனைவருக்கும் அறிந்ததே.அந்நிக ழ்வில் பெரியார் வெறும் அறிக்கைப் போர்,அது கூட இல்லை சிறு கண்டன அறிக்கை விட்டார் என்று சொல்கிறார்கள். நாம் தமிழர் சீமான் பரமக்குடிப் படுகொலைக்கு விட்டதைப் போல.இல்லை என்று மறுக்கின்றீர்களா?
சரியப்பா!அதையும் விடுங்கள்.கீழ வெண்மணிப் படுகொலை நடந்த போது அய்யா வைக்கம் சென்று போராடிய பெரியார் என்ன செய்தார்? தன் சாதிக்காரன் கோபால நாயக்கனுக்கு எதிராக செயல்பட வேண்டாம் என்று இராமசாமி நாயக்கராகிப்போன ரே!!!! இங்கே நான் திராவிடக் கொழுந்துகளிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும்?சீமான் முத்துராமலிங்கத ்திற்கு மாலையிட்டதனால், எவ்வளவு விமர்சனம் செய்தீர்கள்?மேற ்கண்ட கீழ வெண்மணி நிகழ்வுகளில் பெரியார் செயல்படாமல் இருந்ததற்கு காரணம் அவர் நாயகர் சாதியைச் சேர்ந்தவர் என்று இதுவரை ஒரு சிறு கருத்து கூட வரவில்லையே?ஏன்? //வைகோ ஒவ்வொரு வருடமும் தன்னுடைய இடுபிற்கு கீழே கைவைத்து வணக்கம் சொல்லும் முறையில் அமைந்த இழிந்த திருமலை நாயக்க சிலைக்கு மாலையிட்ட போதும்,அதைப் போல் முத்துராமலிங்கத ்திற்கு வருடந்தோறும் மாலையிட்ட போதும் வராத கோபம் சீமானின் மீது வந்தது ஏன்? நீங்களும் நாயக்கர் அல்லது தெலுங்கு இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால்தானா? இங்கே சீமான் செய்ததும் தவறு,பெரியார் செய்ததும் தவறு,நீங்கள் செய்வதும் தவறு.எனக்கு மிக நீண்டநாள் சந்தேகம், அனைத்து ஊடகங்களும் முக்குலத்தோருக் கும் ஒடுக்கப்பட்ட மக்களான மள்ளர்களுக்கும் இடையே சாதிச் சண்டைகளை உண்டாக்குவதற்கா க சிறு அளவிலான மோதல்களைக் கூட ஊதிப் பெரிதாக்குவதும் ,சமீபத்தில் கூட முதல்வர் செயலலிதா சட்டமன்றத்தில் அவ்வாறு முயற்சி செய்ததும் அனைவரும் அறிந்ததே.ஆனால், பரமக்குடி நிகழ்வைப் போலவே, இம்முறை பாஞ்சாலங்குறிச் சியில் மள்ளர்களுக்கும் ,நாயக்கர்களுக்க ும் நிகழ்ந்த மோதல்களை மிகவும் எச்சரிக்கையுடன் ஊடகங்கள் கையாண்டன.அதை மூடிமறைக்கவும் செய்தன.ஏன்?நாயக ர்கள் சாதி மோதல்களினால் பாதிக்கப் படக் கூடாது என்பதால்தானா?நா ன் இத்தனை கேள்விகள் கேட்ட பின்பும் அதற்க்கு விடை அளிக்காமல் நீங்கள் மறுபடியும் திராவிடர் என்றால் அதை நான் வன்மையாக கண்டிப்பேன்.இன் றைக்கு நான் நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பது ஒரே ஒரு கொள்கைக்காகவே.அ துதான் இழந்த நில மீட்பு.அதை செயல் படுத்த கல அவகாசம் நேரும் எனினும்,அதற்க்க ான மூல விதையை அக்கட்சியினர் போட்டிருக்கிறார ்கள்.உண்மையில் ஒடுக்கப்பட்டோர் களுக்கு இட ஒதுக்கீடு மட்டும் ஒரு தீர்வாகாது.ஆனால ்,நில உடமையானது எல்லாவிதமான ஒடுக்கு முறைக்கும் தீர்வாகும் என்பது நான் கண்ட என்னுடைய அறிவிர்கொப்ப உண்மையிலும் உண்மை......
///என்னுடைய கேள்விகளுக்கு பதில் தெரிவிக்காமல் கட்டுரையாளர் அடுத்த கட்டுரை எழுதினால் அதற்க்கு கீற்று இனைய தளம்தான் பொறுப்பு.....// //
//// சாலி தமிழ் தேசியக்கருத்து ஈழத்தை விட இங்குதான் அதிகம்///
RSS feed for comments to this post