தயாராகுங்கள் தோழர்களே!
டிசம்பர் 24ஆம் தேதி சென்னை கபாலீசுவரர் கோவில் 'கருவறை நுழைவுப் போராட்டத்தைக்' கழகம் அறிவித்தது முதல் கழகத் தோழர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் குறித்து சுவர்களில் விளம்பரம் செய்துவருகிறார்கள். சென்னையில் கழகத் தோழர்களுடன் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத் தலைவரும் ஓவியருமான தோழர் பரந்தாமன் அவர்கள் கருத்துப் படங்களுடன் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பிரம்மாண்டமாக சுவர் விளம்பரங்கள் எழுதியுள்ளார். இது பார்ப்பனர்களை கதிகலங்கச் செய்துள்ளது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு பொதுக்கூட்டத்தில் பேசிய இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன் கருவறை நுழைவுப் போராட்டத்தை அரசு அனுமதிக்கக் கூடாது. அனுமதித்தால் நாங்கள் தடுத்து நிறுத்துவோம் என்று பேசியுள்ளார். இது 27-11-2012 தினத்தந்தி நாளிதழில் மூன்று கால தலைப்புச் செய்தியாக வந்துள்ளது. தோழர்களின் உழைப்பு வீண் போகவில்லை, செய்தி எட்ட வேண்டிய இடத்துக்கு எட்டி விட்டது.
தந்தை பெரியார் அவர்கள் சொன்னார் பார்ப்பான் பின்புத்திக்காரன் என்று, இது எக்காலத்துக்கும் பொருந்தும். 1973ஆம் ஆண்டு அய்யா அவர்கள் அறிவித்த இன இழிவு ஒழிப்பு மாநாட்டிற்குப் போதுமான விளம்பரம் இல்லாமல் இருந்தது. தோழர்கள் அய்யா அவர்களிடம் சென்று மாநாட்டிற்கு விளம்பரம் இல்லை. இன்னும் கொஞ்சம் சுவரொட்டி அடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அய்யா பொறுங்கள் பொறுங்கள் பார்ப்பனர்கள் நமக்கு விளம்பரம் கொடுப்பார்கள் என்றார். அய்யா சொன்னது போல மாநாடு நடக்க ஒரு வாரம் இருந்த நிலையில் மாநாட்டைத் தடை செய்ய வேண்டும். இல்லையேல் பெரியாருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்று பார்ப்பனர்கள் அறிவித்தார்கள். இந்த செய்தி தமிழ்நாடு முழுவதும் அனைத்துப் பத்திரிகை களிலும் வெளிவந்தது. பெரியாருக்கு கருப்பு கொடியா? என்று அனைத்து கழகத் தோழர் களும் குடும்பம் குடும்பமாக சென்னைக்கு வந்துவிட்டார்கள். கோவில் கருவறையே பார்ப்பனர்களின் சாதி நிலைகொண்டுள்ள இடம் என்பதாலும் சாதி ஒழிக்கப்பட்டது என்று அரசியல் சட்டம் திருத்தப்பட்டால் மொத்த ஆதிக்கமும் தகர்ந்துபோய்விடும் என்பதாலும் இப்போது இராம.கோபாலன் துடிக்கிறார்.
தருமபுரியில் நூற்றுக்கணக்கான ஒடுக்கப் பட்ட மக்கள் (இவர்களும் இந்துக்கள்தான்) ஆதிக்கச் சாதியினரால் (வன்னியர்களால்) கொடூரமாகத் தாக்கப்பட்டபோது பேசாத இந்த இராமகோபாலன், கருவறையை மட்டும் காக்கத் துடிக்கிறார். தருமபுரியில் தாக்கப்பட்ட ஒடுக்கப்பட்டோர்களின் வீடு களின் முகப்புச் சுவர்களில் இந்துக் கடவுள் களின் படங்களைத்தான் பதித்து வைத்திருக் கிறார்கள். ஆதிக்கச் சாதியினர் (வன்னியர்கள்) கடவுள் படங்களையும் சேர்த்தே கொளுத்தி யிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட இந்துக்களுக் காகவும் பேசவில்லை, இந்து கடவுள்களின் படங்கள், சிலைகள் கொளுத்தப்பட்டதற்காக வும் பேசவில்லை, இதனைக் கண்டிக்காத இராமகோபால அய்யர் பார்ப்பனர்களின் கருவறையை காக்கப் போகிறாராம்...
தர்ப்பைப் புல் ஏந்திய பார்ப்பனர் கூட்டம் பெரியாரின் கருஞ்சிறுத்தைகளைத் தடுக்குமாம். கருஞ்சட்டைப் படையே களம் காண திரண்டு வா டிசம்பர் 24 சென்னைக்கு.
இத... இத... இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம்!
கழகத்தின் போராட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு இந்து மகா சபா மற்றும் இந்து மக்கள் கட்சி சார்பாக சென்னை முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியும் தமிழ்நாடு இந்து மகா சபாவும் அனைத்து இந்துக்களையும் கோயிலுக்கு உள்ளே அழைத்துச் சென்று கருவறைக்கு வெளியே நின்று பூஜை செய்யாமல், கருவறைக்கு உள்ளே சென்று பூஜை செய்யுங்கள். அந்த உரிமைக்காகத்தான் நாங்கள் போராடுகிறோம்.
கடவுள் இல்லை என்று சொல்கிற எங்களை விட கடவுள் உண்டு என்று சொல்கிற நீங்களே கருவறைக்குள் நுழையுங்கள். நாங்கள் அதை வரவேற்போம். அதுதான் எங்கள் போராட்டத்திற் கான வெற்றி.
ஆனால், இந்த போராட்டம் தொடர்பாக எனக்கு ஒரு சிறு கருத்து வேறுபாடு உண்டு. வட இந்திய கோவில்கள் பலவற்றில் நாமே சாமி சிலையை தொட்டு பூஜைகள் செய்யலாம். ஆனால், தமிழகத்தில் அர்ச்சகர் மட்டுமே உள்ளேசெல்வது , மற்றவர் வெளியே இருப்பது என்ற மரபு உள்ளது. இதை மாற்ற வேண்டிய காரணம் எனக்கு புரியவில்லை. நீங்கள் செருப்போடு கோவிலுக்கு செல்வது என்ற போராட்டம் நடத்தப் போவதில்லை. ஏனெனில் அது ஒரு மரபு. அவ்வளவே. வேறோருவிதமாக சொல்கிறேன். பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் நிலை நடைமுறையில் வந்து விட்டது என கொள்வோம். ஆனால், அர்ச்சகர் மட்டுமே கருவறைக்குள் செல்வது, மற்றவர் வெளியே நிற்பது என்ற மரபு தொடர்வதாக கொள்வோம். அந்த நிலையில் நீங்கள் இந்த போராட்டத்தை நடத்த மாட்டீர்கள் என்பது என் எண்ணம். ஏனெனில் இது ஒரு மரபு, அதை மாற்ற வேண்டுமா என்பது கோவிலுக்கு வந்து போகும் ஆத்திகர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று. எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற வகையில் இந்த போராட்டம் நடப்பதே சரி எனபது என் கருத்து. உதாரணமாக இந்த போராட்டத்தில் அரசு அர்ச்சகர் கல்லூரியில் பயிற்சி பெற்ற அனைத்து ஜாதி அர்ச்சகர் மாணவர்களை கருவறைக்குள் உள்ளே அனுப்பி விட்டு மற்றவர் வெளியே நிற்பதே சரி என்பது என் எண்ணம்.
மேலே சொன்ன கருத்து வேறுபாடு இருந்தாலும் கருவறைக்குள் பார்ப்பன ஆதிக்கம் ஒழிய வேண்டும் என்ற அடிப்படையில் நடைபெறும் இந்த போராட்டம் வெற்றி பெற மீண்டும் என் வாழ்த்துக்கள்.
தாகூருக்குத் தெரிந்த திராவிடம் வேறு இன்று திராவிடவாதிகள ் தமிழர்களின் நெற்றியில் லேபல் ஓட்டும் திராவிடம் வேறு. தாகூரீன் திராவிடம் தமிழர்களை மட்டும் குறிக்கவில்லை. அது தென்னிந்தியர்க ள் முழுவதையும் குறித்த திராவிடம். தாகூர் திராவிட என்ற சொல்லைத் தமிழர்களை மட்டும் குறிப்பிடப் பாவிக்கவில்லை. இங்கு தான் பெரியாரிஸ்டுக்க ளும், திராவிடவீரர்க ளும் தாமும் குழம்பி மற்றவர்களைய ும் குழப்புகிறார்க ள். நாம் 'தமிழர்' என்ற தனித்துவமான அடையாளம் இருக்கும் போது எதற்காக திராவிடம் என்ற சொல்லைக் கட்டியழ வேண்டுமென்பது தான் இங்குள்ள கேள்வி. இது எப்படியென்றால் எங்களின் சொந்தப்பெயரால் எங்களை நாம் அடையாளப்படுத் துவதை விடுத்து, பக்கத்து வீட்டுக்காரரைய ும் எங்களுடன் சேர்த்து, இன்னாரின் பக்கத்து வீட்டுக்காரர் என்று சொல்வதைப் போன்றது. பெரியார் தமிழர்களைத் திராவிடர்கள் என்றாராம் அதனால் தமிழர்கள் எல்லாம் திராவிடர்கள் என்று தம்மை அடையாளப்படுத் த வேண்டுமாம். வங்காளி தாகூர் திராவிட என்று தென்னிந்தியர்க ளை எல்லோரையும் குறிப்பிட்டார் ஆனால் தமிழன் திருநாவுக்கரச நாயனார் 1400 வருடங்களுக்க ு முன்பே நாங்கள் தமிழர்கள் தான், அதாவது ஆரியத்துக்கு எதிர்ச்சொல் தமிழன் என்பதை அழகாகக் கூறியிருக்கிறார ். வங்காளி தாகூரையும்,கன் னடப் பெரியாரையும் விட தமிழன் நாவுக்கரசனுக ்குத் தான் தமிழர்களின் அடையாளம் எதுவென்று தெரியுமல்லவா?
நாத்திகர்களும் இந்துக்களே. ஆதலால் அவர்கள் இந்து கோவிலுக்குள் செல்லலாம். இந்து மதம் என்பது " எவன்/எவள் ஒருவர் இசுலாமியர் அல்லது கிரிதுவர் அல்லவோ அவர்களெல்லாம் இந்துக்கள் " இது தான் இந்து மதம் என்று அரசியலமைப்பு சொல்கிறது. இந்து மத இழிவுகளை நீக்கத்தான் நாத்திகர்கள் கோவிலுக்குள் செல்கிறார்கள். இழிவுகள் நீங்கியதும் அவர்கள் கோவிலுக்கு செல்வதை நிறுத்தி விடுவார்கள். கோவில்களில் நாத்திகர்களுக்க ு அனுமதி இல்லை என்று ஒரு அறிவிப்பு பலகை வைப்பது தானே ?
இக்கால திராவிட வீரர்கள் பலருக்கும் இல்லாத தகுதி நாவுக்கரசருக்கு இருக்கிறது. அவர் "நாமார்க்கும் குடியல்லோம்" என்றும் "தமிழோடிசை பாடல் மறந்தறியேன்" என்றும் அக்காலத்திலேயே சொன்ன அசல் தமிழன். திருநாவுக்கரசரை ப் பல்லக்கு தூக்க வைத்தார்கள் என்பது எல்லாம் தமிழர்களின் சைவத்தை எதிர்க்கும் திராவிடர்களின் கட்டுக்கதை. அதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. மாறாக "நாளும் தமிழ் வளர்க்கும் ஞானசம்பந்தன்" என்றும் "நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தன்" என்றும். தமிழ் ஞானசம்பந்தன்" என்று தன்னை அடையாளப்படுத்தி யது மட்டுமல்லாது,, தமிழின் அருமை தெரியாதவர்களை "செந்தமிழ்ப்பயன ் அறியாத அந்தக மந்திகள்" எனவும் சாடி, தன்னை தமிழனாகவே அறிமுகப்படுத்தி ய பார்ப்பான் ஞானசம்பந்தன், வயதான தமிழன் நாவுக்கரசரை ஓடிச் சென்று கட்டித் தழுவி வரவேற்றதாகத் தான் வரலாறு கூறுகிறது. ஞானசம்பந்தன் ஒரு பார்ப்பான் என்றால், பார்ப்பனர்களே அவரை தீயிலிட்டுக் கொழுத்தி ஜோதியில் கலந்தார் என்று கதை கட்டி விட்டதாகவும் சில திராவிடர்கள் கூறும கதை என்னாவது? அவர் தமிழை போற்றியதால் தானே அப்படிச் செய்தார்கள். அப்படியானால் ஞானசம்பந்தன் தமிழுக்காக தன்னுயிரையே கொடுத்த பார்ப்பான் என்றாகிறதில்லைய ாங்கோ? நாத்திகர்களுக்க ு கோயிலில் வேலை கிடையாது என்பதை அவர்கள் அறியார்களா, மற்றவர்கள் அறிவிப்பு பலகை வைத்து தெரிந்து கொள்ளுமளவிலா அவர்கள் இன்னும் இருக்கிறார்கள்?
RSS feed for comments to this post