தருண் விஜய் என்ற பா.ச.க. தலைவர் ஒருவர் திருக்குறளின் மேல் ஆர்வம் கெண்டு அதன் அருமை பெருமைகளைப் பரப்புரை செய்து வருகிறார். அப்படிச் செய்வதன் மூலம் தமிழக மக்களைக் காவி வட்டத்திற்குள் இழுத்துப் போகவும் கடுமையாக முயல்கிறார். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” என்ற திருக்குறளின் உயிருக்கு நிகரான கருத்தைப் புறந்தள்ளி விட்டு, அதற்கு நேர் எதிரான வர்ணாசிரம அதர்மத்தை வலுப்படுத்த முனையும் அவரது நோக்கத்தைத் தமிழக மக்கள் பலர் புரிந்து கொண்டு உள்ளனர். ஆனால் ஆளும் வர்க் கத்தை அனுசரித்துப் போனால் ஆதாயம் கிடைக்கும் என்று நம்பும் சிலர், அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்கவும் செய்தனர். அப்படிப்பட்டவர்களுள் வைரமுத்துவும் ஒருவர்.

வைரமுத்து அத்துடன் நிற்கவில்லை. காவிகளை மேலும் மேலும் புகழ்வதன் மூலம் தனக்குப் பேரும் புகழும் கூடும் என நினைத்தார். மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்களை "நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தது போல் நிமிர்ந்து நிற்கிறார்" என்று புகழ்ந்து தள்ளினார். அதன் தொடர்ச்சியாக வைரமுத்து வுக்கு ஞான பீட விருது கிடைக்கும் என்பது போன்ற ஊகம் கசியத் தொடங்கியது. பின் பிரதமர் நரேந்திர மோடியையும் அவரது ஆளுமையையும் புகழ்ந்தார். ஞான பீட விருது என்று கசிந்த ஊகம் நீர்த்தாரை வடிவம் பெறத் தொடங்கியது. ஆனால் செய்தியாக உருவெடுக்க வில்லை.

இந்திய ஆளும் வர்க்கமாகிய பார்ப்பனர்கள் புகழ்ச்சி யை மட்டும் ஏற்றுக் கெண்டு எந்தவிதமான பிரதி பலனையும் அவ்வளவு எளிதாக வழங்கிவிட மாட்டார்கள். அவாளுக்கு வேண்டியது எல்லாம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் ஒற்றுமை இன்மையும், அடிமைப் புத்தியும், காட்டிக் கொடுக்கும் தன்மையும் தான். இந்தத் திசையில் செல்வோரைத் தான் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொள்வார்கள். இதைப் புரிந்து கொண்ட ஒடுக்கப்பட்ட வகுப்புத் தலைவர்கள் பலர் அத்திசை வழியில் சென்று "பலனை" அடைந்து இருக்கிறார்கள்.

தருண் விஜயை வரவேற்று, தமிழக மக்களி டையே ஒற்றுமை இன்மைக்கு ஆதரவு தெரிவித்தாகி விட்டது. மக்கள் நலனுக்கு எதிரான நோக்கம் கொண்டு மட்டும் அல்ல; அதைச் செயல்படுத்துவதில் நிர்வாகத் திறமையும் இல்லாத மோடியைப் புகழ்ந்து தள்ளி அடிமைப் புத்தியைக் காட்டியாகிவிட்டது. இன்னும் ஞான பீட விருது ஊகமாகத் தானே இருக்கிறது? எப்பொழுது செய்தியாக மலரும்? ஆழ்ந்து சிந்தித்த கவிஞருக்கு அவாளுக்கு மிகவும் பிடித்த காட்டிக் கொடுக்கும் செயலைச் செய்யவில்லையே? அதனால் தான் சுணங்குகிறதோ? என்று தோன்றியது போலும். அதையும் செய்து விடலாம் என்று முடிவெடுத்தார்.

எங்கே (இண்டியானா பல்கலைக் கழகத்தில்)-யாரோ? (சுபாஷ் சந்திர மாலிக் என்பவர்), “ஆண்டாள் தேவதாசியாக இருந்தார்” என்று எழுதியதைச் சுட்டிக் காட்டினார். அதன் மூலம் "ஆண்டாளைப் பற்றி இப்படிக் கூறியது யார்? அவனைச் சும்மா விட்டு விடக் கூடாது" என்றெல்லாம் பார்ப்பனர்கள் வெகுண்டு எழுவார்கள் என்று எதிர்பார்த் தார். அவ்வாறு தங்களுக்குத் தெரியாத ஒரு சனாதன "எதிரியைக்" காட்டிக் கொடுத்ததற்குப் பரிசாக ஞான பீட விருது எனும் கனவு உண்மை உருவம் பெறும் என்றும் எதிர்பார்த்தார் போலும். ஆனால் அவாளை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொண்டு விட முடியுமா?  அவாளின் ஒரே இலக்கு பராசர ஸ்மிருதியில் 8வது அத்தியாயத்தில் 25வது ஸ்லோகத்தில் கூறி உள்ளபடி "பிராமணன் இழிந்தவனாக இருந்தாலும் வழிபடத் தக்கவன்; சூத்திரன் உயரிய நற்குணங்கள் உருவெடுத்தவனாக இருந்தாலும் உயர்நிலைக்கு வரத் தகாதவன்." என்பதுதான். சமூகத்தை இத்திசையில் நகர்த்திச் செல்லவே அவாள் விரும்புகின்றனர். 

வைரமுத்து காட்டிக் கொடுக்கும் சுபாஷ் சந்திர மாலிக் மீது பாய்வதால் சமூகத்தை இந்தத் திசையில் நகர்த்திச் செல்ல முடியுமா? அதற்குப் பதிலாக "ஆண்டாளை அவமதித்து விட்டார்" என்று வைரமுத்து மீது பாய்ந்து, தமிழ் நாட்டில் பெரும் சர்ச்சையைக் கிளப்பினால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே இந்து மத வெறி உணர்வை வளர்க்கலாம். அதன் மூலம் பராசர ஸ்மிருதி சொல்லும் சமூக அமைப்பை நோக்கி நகர்த்தலாம். இவற்றை எல்லாம் கணக்கிட்டுத்தான் வைரமுத்து மீது பாய்ந்து இருக்கிறார்கள். அதிலும் ஆண்டாளை அவமதிக்கும் எண்ணம் தனக்குச் சிறிதும் இல்லை என்றும், தன்னுடைய உரை முழுமையிலும் ஆண்டாளைப் புகழ்ந்தே இருப்பதாகக் கூறியதுடன் மட்டும் நிற்காமல், தன்னுடைய உரையால் யார் மனதாவது புண்பட்டு இருந்தால் அதற்காக வருந்து வதாகக் கூறிய பின்னும் சர்ச்சையைப் பெரிது படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

வைரமுத்துவின் ஞான பீட விருதுக் கனவு தகர்ந்து போய்விட்டது. தான் ஆரத்தி எடுத்து வரவேற்ற தருண் விஜய், நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்தாற் போல் எனப் புகழ்ந்து தள்ளிய நிர்மலாத் சீதாராமன், இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்த மோடி யாருமே வைரமுத்து வுக்குத் துணைவரவில்லை. வைரமுத்துவைப் போல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களில் பலர் இருக்கிறார்கள். காவிகளுக்கு அனுசரணையக நடந்து கொள்வதன் மூலம் ஏதாவது பலனை அடையலாம் என்ற நப்பாசை அவர்களைப் பிடித்து ஆட்டுகிறது. அவாளைப் பொறுத்த மட்டில் பராசர ஸ்மிருதியில் சொல்லப்பட்டு உள்ள நோக்கத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள்.

சமூகத்தை அதை நோக்கி உறுதியாக நகர்த்திக் கொண்டு இருக்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அதைத் தடுத்து நிறுத்தாவிட்டால், இரண்டு மூன்று தலைமுறை களுக்குப் பின் வர்ணாசிரம அதர்மம் வெளிப்படை யாகவே சட்டமாகி விடும். நம் எதிர்காலத் தலைமுறை யினர் நாம் இது வரையிலும் போராடிப் பெற்று இருக்கும் உரிமைகளைப் பறிகொடுத்து விட்டு, அடிமைச் சேவக வேலைகளைச் செய்ய வேண்டி வரும். அப்படி இல்லாமல், மகாத்மா புலே, தந்தை பெரியார், மேதை அம்பேத்கர் அரும்பாடுபட்டு ஈட்டிக் கொடுத்த உரிமை களை முழுமையாகப் பெற வேண்டும்; நமது எதிர்காலத் தலைமுறையினர் அவாளுக்கு அடிமைகளாகி விடக் கூடாது என விரும்பும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவரும் அவாள் முன்னெடுக்கும் சர்ச்சையில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே! அனைத்து வகுப்பு மக்களிலும் அனைத்து நிலைத் திறமை உடையவர் களும் இருக்கிறார்கள் என்பது மாற்ற முடியாத இயற்கை நியதி. அதன்படி கல்வி, வேலைவாய்ப்பு, பிற சமூக நடவடிக்கைகளில் அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலைகளிலும் பங்கு பெற்று இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் பொதுப் போட்டி முறையில் சூது நிறைந்து உள்ளது என்று புரிகிறது அல்லவா? இதை மாற்றி இயற்கை நியதிப்படி அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளிலும் பங்கு பெறும் விதமாக விகிதாச்சாரப் பங்கீடு முறையைச் செயல்படுத்த வேண்டும் என்ற  இலக்கை நோக்கி அல்லவா நமது போராட்டம் இருக்க வேண்டும்? அதை விடுத்து நம்மை திசை திருப்பும் (ஆண்டாள் சர்ச்சை உட்பட) பிற சர்ச்சைகள் தேவையா?

ஆண்டாள் சர்ச்சை வைரமுத்துவுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அல்ல. உண்மையில் அது வைரமுத்துகளுக்கு அதாவது காவிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ள விரும்பும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

Pin It