மதச்சார்பற்ற கோலம்பூண்ட காங்கிரசுக் கொள்ளைக்கும்பல் மூட்டை முடிச்சுகளை இப்போதே கட்டுகிறது! மதவெறி பிடித்த, பெருமுதலாளிகளின் காப்பாளர்கள் பதவிக் கட்டிலில் ஏற நல்லநேரம் பார்க்கிறார்கள்!

உலகம் சுற்றிய, அரசியல் கற்ற அறி வாளிகள்-எலியைக் குத்திப் பெருச்சாளி யாக்கும் பார்ப்பன-பனியா ஏடெழுது வோர்-இணையதளத்தை வைத்துப் பார்ப்பன வருணதருமம் முதல் செவ்வாய்க் கோளுக்குப் போய் வாழப் போகிற செய்தி வரையில் வலிமையாகப் பரப்புகிற ஊடகப் பிணந்தின்னிக் கழுகுகள் - “பார், பார்! 123 கோடி மக்கள், 82 கோடி வாக்காளர்கள், எங்குமில்லாத கடமை உணர்வோடு வாக்குப் போட்டுக் கடமை ஆற்றி - சனநாயகத்தை நிலைநாட்டிவிட் டார்கள்” என்று, 60 நாள்களாக அல்லும் பகலும் காதுகிழியக் கத்துகிறார்கள்; படித்த-படிக்காத எல்லோரையும் “சாமி” பிடித்து ஆட வைத்திருக்கிறார்கள்.

பலருக்கும் “அரசு” பற்றி, ஒன்று தெரியாது. வெள்ளையன் காலத்திலும், காங்கிரசுக் கொள்ளையன் ஆட்சிக்காலத்திலும், இடைக்காலத்திய இந்துத்துவா கட்சி ஆட்சிக்காலத்திலும் இந்தியாவில் மனுநீதியும், அர்த்தசாத்திரமும்தான் ஆட்சியின் நடப்புகளாக இருந்தன. “அரசு சாராயம் காய்ச்ச வேண்டும்; அரசே சூதாட்டக் களம் நடத்த வேண்டும்; அரசே விலை மகளிர் தெரு தொடங்க வேண்டும்; இவற்றுக்கெல்லாம் அரசு கொழுத்த வரிபோடவேண்டும்” என்று அர்த்த சாத்திரத்தில்தான் கொட்டை எழுத்தில் எழுதியிருக்கிறது.

தமிழகத்தில் ‘அய்யா’ அரசு செய்ததைவிடத் திறமையாக, அம்மா அரசு இந்த அநீதிகளை நன்றாகச் செய்கிறது.

“இந்தத் தீமைகளைச் செய்யாதே” என்று தமிழனுக்குச் சொன்ன திருவள்ளுவன், கால்கடுக்க கன்னியாகுமரிக் கடலில் நிற்கிறான்.

இலவச அரிசி வாங்கித் தின்று, இன்பம் காணும் தமிழர்களில் சிலராவது, இவற்றை ஊருக்குச் சொல்லுங்கள், அய்யா!

 லோகியாவாதிகளும், அம்பேத்கரியக் கட்சிகளும், மார்க்சியவாதிகளும், திராவிடக் கட்சிகளும், சாதி-மதக் கட்சிகளும் இவர்களுக்கு வாலர்களாக மட்டுமே இருந்தார்கள்.

அய்ரோப்பாவிலும், அமெரிக்காவிலும் இத்தாலிய மாக்கியவல்லியின் “இளவரசன் (கூhந யீசinஉந)” தான் ஆட்சிச் சட்டமாக இன்றும் இருக்கிறது.

இந்தியாவில் 1952 முதல் 21 வயதுக்கார ஆண் - பெண் அனைவரும் வாக்குப்போட வந்துவிட்டார்கள்; இன்று 18 வயது நிரம்பிய ஆண்-பெண், இந்து-இஸ்லாம்-சீக்கியர்-கிறித்துவர்-பவுத்தர்-பார்ப்பனர், சூத்திரர், தீண்டப்படாதார் எல்லோரும் வாக்குப் போடு கிறார்கள்.

இப்படிப்பட்டவர்கள் இந்தியா முழுவதிலும் 82 கோடிப் பேர்கள். தமிழ்நாட்டில் 5.51 கோடிப் போர்கள்.

இவர்கள், 123 கோடி மக்களை ஆளப்போகிற மக்கள் அவைக்கு 543 பேர்களைத் தேர்ந்து எடுக்கிறார்கள். 2 பேர் ஆங்கிலோ-இந்தியர்கள் மக்களவையில் நியமனம் பெறுவார்கள்.

543 பேர்களுள் 79 பேர்கள் தீண்டப்படாதாருக் கான தொகுதிகளில்தான் நிற்க முடியும்; 41 பேர் பழங்குடிகளுக்கான தொகுதிகளில் தான் போட்டியிட முடியும். ஏன்?

பத்தே ஆண்டில் தீண்டாமை போயே போய்விடும் என்று, மாமேதைகள் அம்பேத்கர், ராஜேந்திரபிரசாத், நேரு, அல்லாடி கிருஷ்ணசாமி எல்லோருக்கும் - இந்துத்துவக் காப்பாளர்களான காங்கிரசுக் கொள்ளை யர்களும், இந்துத்துவ வெறியர்களான பாரதிய சனதா பன்னாட்டு முதலாளிகளின் தரகர்களும், இவர்களின் தொங்கு சதைகளான மார்க்சிய - லெனினிய - மாவோஇய - லோகியா மற்றும் திராவிடக் கட்சிக்காரர்களும் உயிரை விட்டுப்பாடுபட்டு, 62 ஆண்டுகளாக ஊரை அடித்து உலையில் போட்டும் - இந்த 79 + 41 = ஆக 120 பேரும் அவரவர் பிறந்து வாழ்ந்த நாட்டில் எந்தத் தொகுதியில் வேண்டுமானாலும் போட்டி போடும் சம நிலைமையை உண்டாக்கவில்லை.

அதாவது சனநாயகம் அங்கே செல்லாது. ஏன்? சாதிநாயகம் சாகவில்லை; சாதி-மத-கொள்கை நாயகத் துக்கு 1962 முதலே இந்தியாவில் வேலை இல்லை.

இன்று 100க்கு 85 பேர் எழுத்தறிவு பெற்ற இந் நாட்டில், சாதிநாயகம்-கொள்கை நாயகம் எல்லாவற் றையும் மீறி - 1952இல் வாக்குக்கு 1 ரூபா, 1962இல் 2 ரூபா, 1972இல் 5 ரூபா; 1990களில் 100 ரூபா, 2001இல் 500 ரூபா, 2009இல் 1000 ரூபா, 2014 இல் குறைந்தது 1000, 2000, 3000 என வாக்கின் விலை வளர்ந்துவிட்டது.

தீண்டாமை அப்படியே இருக்கிறது; சட்டம், காவல் துறை, நீதித்துறை, படித்த-பண்ணைப் புத்தி கொண்ட திருட்டுப் பயல்கள் தீட்டும் கல்வித் திட்டம், எல்லாம் - இங்கே தீண்டாமையைக் குரல்வளையைப் பிடித்து நெரிக்க முடியவில்லை, அது அப்படியே இருக்கட்டும் என்று எல்லா அரசியல் ஞானிகளும், எல்லாக் கட்சி களின் தலைவர்களும், உயர்ந்த, மிகமிக உயர்ந்த கல்வியை விற்கும் கல்வி வணிகக் கயவர்களும் கொள் ளையர்களும்; ஊடகக் கலையில் வல்லவர்களான அனைத்து ஊடகத் திருடர்களும் நினைக்கிறார்கள். நிற்க.

1946 கடைசியிலிருந்து 1967 வரையில் இந்தியா முழுவதையும் காங்கிரசே - நேரு குடும்பமே கட்டி ஆண்டது.

“இந்தியா ஒரே நாடு - இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி - பழக்கச் சட்டம் 1950க்குப் பிறகும் செல்லும்” என்பதை, 1946 முதல் எதிர்த்த ஒரே தலைவர் பெரியர்தான்; ஒரே இயக்கம் திராவிடர் கழகம் தான்.

இந்தியாவை உடைக்க எண்ணிய தி.மு.க. இந்தியா முழுவதிலும் கட்சியை வைக்கவில்லை; இந்திக்காரன் நாட்டில் போய் “உன் இந்தி எனக்கு ஏன்?” என்று எதிர்த்துக் கேட்கவில்லை. அவ்வளவு தீரர்கள்!

அதற்கு மாறாகத், தமிழ் மண்ணில் மட்டும் “இந்தி ஒழிக!” - “தமிழ் வாழ்க!” என்று தி.மு.க. முழக்க மிட்டது. அதை நம்பிய மாணவமணிகள் நேப்பியர் பூங்காவிலிருந்து 25.1.1965 அன்று ஆயிரக்கணக்கில் கும்பலாகப் புறப்பட்டு, கோட்டைக்கு கோமான் பக்தவத் சலத்திடம் - “1965க்குப் பிறகு இந்தி ஆட்சி மொழி ஆக்கக்கூடாது! தடுத்திடுக!” என்று கூவி, ஊர்வலமாகச் சென்றனர்.

அந்தப் பெம்மான் மாணவர்களை அடித்துவிரட்டி னார்; அடிபட்ட மாணவர் உலகம் கொதித்தெழுந்தது.

பங்கீட்டுக் கடைகளின்முன் காலை 4 மணிக்கே காத்துக் கிடக்க நேரிட்ட தமிழக ஏழைத் தாய்மார்கள் காங்கிரசுக்கு எதிராகத் திரண்டனர்.

காமராசரை வீழ்த்த நினைத்த சி.அய்.ஏ.காரன், காங்கிரசைத் தோற்கடிக்கிறதற்காகப் பணத்தை அள்ளிக் கொடுத்தான். அதை நேரில், நானே பார்த்தேன். அப் படியே எழுதிப் பெரியாரிடம் கொடுத்தேன். - “விடுதலை” வெளியிட்டது.

அன்று தான் தமிழகத்தில் காங்கிரசு தோற்றது. இந்திராகாந்தி என்கிற ஆணவக்காரர், காமராசரையும் 1969இல் வீழ்த்தினார். கலைஞர் கருணாநிதியின் வீட்டில் 16.8.1969 இரவு காங்கிரசுப் பிணப்பெட்டிக்கு (!) கலைஞரும், இந்திராவும் கடைசி ஆணியை அடித் தார்கள்.

1976 சனவரியில் தன்னை வீட்டுக்கு அனுப்பிய இந்திராகாந்தியிடம், 1979 செப்டம்பரில் கருணாநிதி சரணடைந்தார்.

அன்று முதல் மாறி, மாறி, நேரு குடும்பத் தலை மையிலான காங்கிரசையும்; ‘நல்லவரான’ வாஜ்பேயி தலைமையிலான பாரதிய சனதாவையும் தோள்மேல் அல்ல - தலைமேல் சுமந்தார். 2009 மே 19 வரை அட்டியில்லாமல் காங்கிரசுப் பல்லக்கைச் சுமந்தார். இடையில் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரும், ‘நிரந்தரப் பொதுச் செயலாளர்’ செல்வி ஜெயலலிதாவும் மாறி மாறி இக்கட்சிகளைச் சுமந்தனர்.

இன்று இருவரும் அப்பல்லக்கைச் சுமக்க முடியாத தால் - ஊழல், ஊழல் - உலக ஊழல்காரர்கள் என விளம்பரம் ஆகிவிட்டதால், 39 தொகுதிகளிலும் முதன் முதலாகத் தனித்தே தமிழகக் காங்கிரசு மறவர்கள் (!) வீராவேசமாகப் போட்டியிட்டுப் போராடுகிறார்கள். குவித்திருக்கிற, 500 ரூபா பணக்கட்டுகளைப் பரப்பித் தமிழ்நாட்டில் இரண்டு பேர் தலைதப்பினால், அதுவே காங்கிரசுக்குப் பெரிய வெற்றி! இந்தியா முழுவதிலும் 100 பேர் முப்படை எண்ணில் பெறுகிற அளவுக்குத் தான் காங்கிரசுக் கட்சி தேறும்.

“காங்கிரசு - மதச்சார்பற்றது; இந்திய அரசமைப்புச் சட்டம் மதச்சார்பற்றது” என்று எல்லோரும் பொய்யே பேசுகிறார்கள். “மதச்சார்பற்ற” என்ற பொருள் தரும் - “ளுநஉரடயச” என்ற சொல், 3.1.1976இல் தான் அரச மைப்பில் இடம்பெற்றது. அதற்கு உரிய விளக்கம் எங்குமே இல்லை, “எம்மதமும் சம்மதம்” என்பது, உண்மையான மதச்சார்பின்மை அல்ல. அதுவே நேருவின், இராதாகிருஷ்ணனின், இந்திராகாந்தியின் கோட்பாடு. அதை அப்போதே மறுத்தவர், தந்தை பெரியார்.

இவை மட்டுமா?

காங்கிரசுப் பிரதமர் இராஜீவ் காந்திதான் பாபர் மசூதியின் வாயில் பூட்டை உடைக்கச் சொன்னவர்; ‘ஷீலன்யா’ என்ற பெயரில், இந்தியா முழுவதிலுமிருந்து அயோத்தியில் இராமர் கோயில் கட்டச் செங்கலைச் சுமந்துவர அனுமதி கொடுத்தவர்; மசூதிக்குப் பக்கத்தி லேயே இராமர் கோவில் கட்ட இடம் ஒதுக்கிக் கொடுத்தவர்.

இது ‘இந்துத்வா’ ஆதரவு அல்லாமல், வேறு என்ன?

அவர் கொலையுண்டபிறகு, 1991இல், சிறுபான்மை யைக் கொண்ட பிரதமர் ஆனார் பி.வி. நரசிம்மராவ். 6.12.1992இல் பாபர் மசூதி இடிக்கப்படுவதைத் தன் அறையிலிருந்தபடியே தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்ச்சியில் திளைத்த முன்னாள் ஆர்.எஸ்.எஸ். தொண் டர் அவர். அவர் இராணுவத்துக்கு ஆணையிட்டு பாபர் மசூதி இடிக்கப்படுவதை ஏன் தடுக்கவில்லை? அவர் பார்ப்பன சாதிப் பிணங்களைச் சுமக்கும் உரிமையுள்ள நாலாந்தரப் பார்ப்பனர்; நல்ல ஊழல் பேர்வழி; பெண் சுகம், பதவிச் சுகம் தான் அவருக்கு உயிர்.

2004இல் பிரதமராக வந்த மன்மோகன் சிங் ஒரு கெட்டிக்காரக் கணக்குப்பிள்ளை; ஓர் எசமானுக்கு விசுவாசமாக அடிமை வேலை செய்தே பழகிய பெரிய படிப்பாளி; பாமர மக்களைப் பார்த்தோ, பேசியோ, அவர்களுக்குத் தொண்டு செய்தோ அறியாத - அரசியல் ஈடுபாடு இல்லாத ஓர் அடிமை; “அமெரிக்காவே சரணம்” என்கிற மற்றும் பன்னாட்டுப் பகாசுரப் பணக் காரர்களின் ஏவலாள்; அவர்களுக்கு நல்ல பிள்ளை. “தமிழீழத் தமிழரைக் கொன்றே தீரவேண்டும்” என்று உறுதி பூண்ட வன்னெஞ்சங்கொண்ட - எங்கோ பிறந்த ஒரு சோனியாவுக்குத் தெண்டனிடும் அடிமைப் புத்தி படைத்த ஓர் எடுபிடி. இன்று, நிலக்கரி ஊழலைத் தடுக் கத் தவறிய ஒரு குற்றவாளி; மக்களவையில் உறுப்பி னர் ஆகவேண்டும் என்ற மக்கள் நாயக உணர்வற்ற ஒரு மரப்பாச்சி, இவர் 16.5.2014 அன்று விட்டுக்குப் போவார்.

இப்போதே, தில்லி ரெய்சினா மேட்டின் இருபுறங் களிலும் உள்ள ஆறு நடுவண் அமைச்சகத்துறை அதிகாரித் திருடர்கள், தூசி தட்டி, கோப்புகளை மூட்டை கட்டத் தொடங்கிவிட்டார்கள்.

காங்கிரசு அடியோடு ஒழிகிறது.

ஆனால் ஒன்று. காங்கிரசுக் கட்சிக்காரர்களைவிடப் பன்னாட்டுப் பகாசுர முதலாளிகளின் காவலர்களாக உள்ள - “இந்துத்துவாவே இந்தியரின் உயிர்”, “ராம ராஜ்யம் அமைப்பதே எங்கள் இலக்கு”, “அயோத்தி யில் இராமர் கோயில் கட்டியே தீருவோம்!”, “ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கான தனிப் பாதுகாப்பு விதி 370 என்பதை அரசமைப்பிலிருந்து அகற்றுவோம்!”, “அய்ந்தே ஆண்டுகளில் 10 கோடிப் பேருக்கு வேலை கொடுப் போம்” என்று ஊர்தோறும், நாள்தோறும் துணிந்து முழங்கும் நரேந்திர மோடி ஒரு கைதேர்ந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்.

நரேந்திர மோடி மிகப் பிற்படுத்தப்பட்ட ஓர் உள் சாதியான வாணியச் செட்டியார். இந்த விவரத்தை, எங்களின், “அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவை” யின் ஒரு துணைத் தலைவராகவும், பெரியாரின் தொண்டராகவும் விளங்குகிற, லக்னோ தோழர் டாக்டர் தாவுஜி குப்தா வழியாக அறிந்தோம். அவரும் அந்தச் சாதியில் பிறந்தவர்.

அத்துடன், சர்தார் பட்டேலின் பிறப்பிடம் குசராத். பெரியாரின் 1950 சாதி அடிப்படை இடஒதுக்கீட்டுக் காப்புக்கு உரிய சட்டத்திருத்தம் (விதி 15(4)) சேர்க்கப் பட, 1950 நவம்பரில் அடித்தளமிட்டவர் பட்டேல்,

அந்த மாநில முதல்வரை அணுகினால், எதிர்க்கட்சி யின் வழியாக, “பிற்படுத்தப்பட்டோருக்கு விகிதாசார இடப்பங்கீடு கிடைக்கும்” என நம்பி, நானும், கவிஞர் காவிரிநாடனும் 27.3.2012 காலை குசராத் தலைநகர் அகமதாபாத்தை அடைந்தோம்.

27, 28, 29, 30.3.2012 நான்கு நாள்கள் தங்கி னோம். முதல் மூன்று நாள்களிலும் முற்பகல் 10 மணிமுதல் 1.30 மணிவிரை மோடியின் நேர்காண லுக்காக, அவருடைய வரவேற்பு அறையில் காத்திருந் தோம். அங்கு என்ன கண்டோம்?

27 முற்பகல் 50 ஆர்.எஸ்.எஸ். முதியவர்கள் மோடியின் அறைக்குள் நுழைந்தனர்; அங்கேயே பக்கத்தில் பசனை அறை; பசனையை முடித்து அவர் கள் வேறு வழியே வெளியேறினர்.

28 முற்பகலில் சிற்றூர்ப்புற ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் 30 பேர் அவருடைய அறைக்குள் சென்றனர்; அதே போல் பசனை.

29 முற்பகலில் 25 வயதுக்குக் கீழ்ப்பட்ட இளைஞர் கள் 50 பேர், ஒவ்வொருவர் கையிலும் சிறிய சூலாயு தத்துடன் அவர் அறையில் நுழைந்தனர்.

நான் பொறுமை இழந்து, மோடியிடம் நேர்காண லுக்கு நேரம் கேட்டுத்தரும் அதிகாரியிடம் போய்த் தகராறு செய்தேன். அவர் என் நோக்கத்தை அறிந்துகொண் டார். ‘30.3.2012 காலை 10 மணிக்குத் தொலைப்பேசி செய்யுங்கள்’ என்றார்; செய்தேன். பயனில்லை. உடனே தில்லிக்குத் திரும்பினோம்.

நான்கு நாள்களிலும் நகரத்திலிருந்து தலைமைச் செயலகத்துக்கு 20 கிலோ மீட்டர் போக, வர ரூ.700 தானி வாடகை; நான்கு நாள் உணவுச் செலவு; “குடில் அறை” (ழரவ) வாடகை; நான்கு நாள் இருவர்க்கும் அலைச்சல். இதுதான் பயன்.

அதேமுயற்சியை, தாவுஜி குப்தா மூலம், 2013 ஏப்பிரலிலும் மேற்கொண்டேன். பயன்பட வழி கிடைக்க வில்லை.

மோடியின் ஆட்சி ஒரு மூடு மந்திர ஆட்சி.

டாட்டா. அதானி முதலான பகாசுர முதலாளிகள் தாங்கள் தாங்கள் தொழில் தொடங்கிட - 35,000 ஏக்கர் வேளாண் நிலத்தை அடிமாட்டு விலைiக்குக் கையகப் படுத்தித் தாரை வார்த்தவர், மோடி.

பிரதமராக மோடி வந்தமர்ந்தால், தமிழீழத்துக்கு விடிவுவரும் என்று நம்புகிற ஈழவிடுதலை உணர்ச்சிப் பிழம்புகள் ஒன்றை உணர வேண்டும்!

தமிழ்நாட்டு பா.ஜ.க.வின் குட்டித் தலைவர்களே, “தமிழீழத்தை நாங்கள் ஆதரிக்க முடியாது” என்று கூறிவிட்டார்கள். ஈழவிடுதலையில் மாறாத நிலைபாடு எடுத்தவர்கள் ஒன்றை உணர வேண்டும்.

1. காங்கிரசு, பாரதிய சனதா, பொதுவுடைமைக் கட்சி என்பவை “இந்தியா ஒரு நாடு” என்பதை இலட்சிய மாகக் கொண்டவைகள்.

இவர்கள் தனி ஈழக் கொள்கையை எப்போதும் ஏற்கமாட்டார்கள்.

2. தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வின் உண்மையான நிலைப்பாடு, 2002இல் சட்டமன்றத்தில் அரசு நிறை வேற்றிய ஒரே தீர்மானம்தான். 2009 தேர்தலின் போதும், இப்போது 2014 தேர்தலிலும் அவர்கள் சொல்லுவது, ஏமாந்துபோன - உணர்ச்சிவயப்பட்ட மறத் தமிழனின் தலையில் மிளகாய் அரைக்கத்தான். இது ஒரு காசுக்கும் உதவாது.

3. தி.மு.க.வின் நிலைப்பாடு - உண்மையில், 18.5.2009 வரையில் அவர்கள் அடித்துச் சொன்ன, “இந்திய அரசின் நிலைப்பாடுதான், எங்கள் நிலைப் பாடு” என்பது மட்டுமே. சோனியாவின் அடிமைகளாக - ருயீஹ-ஐ-இல் பங்கேற்றிருந்த எல்லாத் தமிழ்நாட்டுக் கட்சிகளும் இருந்தன. இவர்களும் ஈழத்தமிழர் அழிப்புக் குற்றத்துக்கு உடந்தையானவர்களே.

இந்தச் சூழலில் பன்னாட்டுப் பெருமுதலாளிகளின் கையாளாக விளங்கிய காங்கிரசு அடியோடு ஒழி வதைக் கண்டு, மகிழ்கிற நாம், அவர்களை விடப் பன்மடங்கு பாய்ச்சல் விசையில் பன்னாட்டுப் பெரு முதலாளிகளின் கையாள்களாக - கைக்கூலிகளாக விளங்குகிற பாரதிய சனதாக் கட்சியினர் வென்று வர வாய்ப்பு இருப்பதை எண்ணித் துக்கம் கொண்டாட வேண்டும். ஏன்?

பா.ச.க.வினர், தனித்து 200 இடங்களில் வென்றாலே, கூட்டணி ஆட்சி அமைந்துவிடும்,

ஏற்கெனவே, ஆறாண்டுகள் ஆட்சியிலேயே - (1) இராமர் கோயில் கட்ட அடித்தளமிட்டார்கள்; (2) இஸ்லாமியர்களையும் கிறித்துவர்களையும் கொன்று குவித்தார்கள்; (3) பாபர் மசூதி கூம்புக்கு நேர்கீழே தான் இராமர் பிறந்தார் - சேது அணை இராமர் கட்டியதுதான் என்பவை “இந்துக்களின் நம்பிக்கை” என்று உச்சநீதிமன்றத் தீர்ப்பையே பெற்றார்கள்; (4) மதுரை காமராசர் மற்றும் பல பல்கலைக்கழங்களில் சோதிடம் ஒரு படிப்பாக வைத்தவர்கள்.

இனி, இராமாயணம், பாரதம், கீதை முதலானவை எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் ஒரு படிப்பாக வர எல்லாம் செய்வார்கள். இது உறுதி.

மார்க்சின் - லெனினின் - பெரியாரின் - அம்பேத் கரின் உண்மையான தொண்டர்கள், இன்று உள்ள எந்த அனைத்திந்தியக் கட்சியும், எந்த மாநிலக் கட்சியும் உண்மையான மதச்சார்பற்ற கொள்கை கொண்ட கட்சி அல்ல என்பதை முதலாவது உணரவேண்டும்.

மகாத்மா புலேவும், பெரியாரும், அம்பேத்கரும் அல்லும் பகலும் கனவுகண்ட வருணம் ஒழிந்த - உள்சாதி ஒழிந்த - பெண்ணடிமை ஒழிந்த - மூட நம்பிக்கையை ஒழிக்கவல்ல - சமதர்ம சமுதாயத்தைப் படைக்கவல்ல ஓர் ஆட்சியே நமக்குத் தேவை.

நாம் ஏகாதிபத்திய - பெருமுதலாளித்துவ - கார்ப் பொரேட் நிறுவனங்களின் காவலர்களாக உள்ள எல்லா அமைப்புகளையும் புறங்காண வேண்டும்.

தமிழ்நாட்டுக்குள் செய்ய வேண்டிய பணிகளுக்கு முதலிடம் தருவோம்!

தமிழரையும், தமிழையும், தன்மானத்தையும், சமதர்மத்தையும் காத்திட வல்ல - தன்னுரிமை பெற்ற மொழிவழி மாநிலங்களைக் கொண்ட - உண்மை யானதோர் இந்தியக் கூட்டாட்சியை நிறுவிட - இந்தியா முழுவதிலும் சென்று செயல்களம் அமைப்போம்! உலக நாடுகளுக்கெல்லாம் போய் இதற்கு ஆதரவு திரட்டுவோம்!

தமிழ்நாட்டுப் படித்த இளைஞர் பட்டாளத்தை, இதற்கு அணியப்படுத்துவோம், வாருங்கள்!

- வே.ஆனைமுத்து

Pin It