ஒரு பெண்ணும், ஆணும் ஈர்ப்பும் அன்பும் கொண்டு பழகிக் களித்திருக்க எந்த சடங்கையும் நியதியையும் இயற்கை இன்று வரை வகுக்கவில்லை. ஆனால் பிறப்பு வழி வருகின்ற இரத்த உறவும் ஆண் பெண் உடலுறவுச் சேர்க்கையும் மனித சமூகத்தின் அமைப்புகளைக் கட்டமைப்பதில் அடிப்படையான பங்கை வகித்து வந்திருக்கின்றன. இதில் பிறப்பு வழி வருகின்ற இரத்த உறவை பின்னுக்குத் தள்ளி, ஆண் பெண் உடலுறவை அடிப்படையாகக் கொண்ட திருமண பந்தங்களை முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்திய வரலாறுதான் மனித சமூகத்தில் ஆணாதிக்கம் தோன்றிய, மதம் தோன்றிய, சாதி தோன்றிய வரலாறாக விரிகிறது. இயற்கையில் ஆண், பெண் உடலுறவு என்பது வாழ்வின் ஓர் அம்சமாக இருக்கிறது. ஆனால் நமது சமூகக் கட்டமைப்பில் (சொத்தை நிர்வாகம் செய்து வகைப்படுத்தி ஆள்வ தற்கான ஓர் அமைப்பு) அடிப்படை அலகாகத் திகழும் குடும்ப வாழ்வின் அடிமானமாக அந்த உறவு ஆக்கப்பட்டி ருக்கிறது. இந்த அடிப்படையில் மதங்களை எதிர்த்து நீதி நடத்தும் பெரும் பயணத்தின் இறுதியில், ‘சொத்தின் மீதான வாரிசுரிமை’ என்பதற்கும் ‘ஆண் பெண் சேர்க்கைக்கும்’ கட்டப்பட்டி ருக்கும் இந்தத் தாலி அறுத்தெறியப்பட வேண்டும்.
இந்தத் தொலைநோக்குக் கண் கொண்டு நோக்கும் போது, நீதிபதி கர்ணனின் வார்த்தைகள், ஆண் பெண் சேர்க்கைக்கு அதீத அழுத்தம் கொடுத்து விடுமோ என்று நாம் அஞ்ச வேண்டி யிருக்கிறது. மனித வாழ்க்கை அற்புத மானது. அது வெறும் ஆண் பெண் சேர்க்கை மட்டுமன்று. எல்லா உடலுறவு களும் திருமணமாகுமா என்பதை விட, திருமணமாக வேண்டிய தேவையில்லை என்பதே முக்கியமானது.
பொதுவாக இந்தத் தீர்ப்புகள் இரண்டு தளங்களிலிருந்து வெளிப்படு கின்றன. ஒன்று, பாதிக்கப்பட்ட பெண் ணுக்கு நீதி வழங்கும் வகையில். கர்ணன் தீர்ப்பு கூறியிருக்கும் வழக்கும் அத்தகை யதுதான். மற்றொன்று வாழ்க்கைத் தேர்வு மற்றும் சுதந்திரம் என்ற அடிப்ப டையில். நீதிபதி கர்ணன் இதில் பெண் ணுக்கான பாதுகாப்பு என்ற கோணத்தில் மட்டும் அணுகியிருக்கிறார். அதன் அடுத்த பக்கமான வாழ்க்கைத் தேர்வு, மற்றும் சுதந்திரம் என்ற தளத்தில் அவர் அணுகவில்லை என்பதுடன் அதில் அவருக்கான பார்வை என்ன என்பதும் வெளிப்படவில்லை. வழக்கை தொடர்ந்து தந்திருக்கும் கருத்துக்களில் அவர் பெண்களுக்கான பாதுகாப்பையும் நமது கலாச்சாரத்தையும் காப்பதற்காகவே அந்தத் தீர்ப்பினைத் தந்ததாக தெரிவித்தி ருக்கிறார். இந்த இடம்தான் முற்போக்கா ளர்களையும் இந்தத் தீர்ப்பைக் கொஞ்சம் கவனத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.
இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது சட்டத்தால் உறுதி செய்யப்பட வேண்டிய நிலை அதிகமாக இருக்கிறது. எனவே நீதிபதி கர்ணன் போன்ற நீதிபதிகளும் அவர்களது தீர்ப்புகளும் தேவையாக இருக்கின்றன. அந்த அடிப்படையிலும், மதங்களுக்கு எதிரான தீர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கதாக இருக்கின்றது. அதே வேளையில் இந்தநிலை ‘கலாச்சாரக் காவலர்’ என்ற நோக்கில் எடுக்கப்படாமல், மனித வாழ்வின் சுதந்திரம் என்ற நோக்கிலிருந்து எடுக்கப் படும்போது மட்டுமே ‘அந்த மொழி’ புதிய சமூகத்தின் பிறப்பை உச்சரிப்பதாக இருக்கும் என்பதையும் உணர்த்த வேண்டி யிருக்கிறது. இல்லாவிட்டால் இருக்கின்ற ஒரு சிக்கலைத் தீர்த்து இன்னொரு சிக்க லுக்கு வழி சமைப்பதாக இருந்து விடும்.
மனிதர்கள் யார் யாரோடு சேர்ந்து வாழ்வது என்பதை மதங்களும், சாதிகளும், சட்டங்களும் தீர்மானிப்பது மனிதர்களின் பிறப்புரிமைக்கு விரோத மானது. உலகம் இந்த விழிப்புணர்வை மெல்ல மெல்ல பெற்று வருகிறது. இங்கிலாந்தில் கிட்டத்தட்ட முப்பது இலட்சம் மக்கள் திருமண மின்றி இணைந்து வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் நாட்டுச் சட்டம் இன்னும் இதனை அங்கீகரிக் கவில்லை. சுவீடன், கனடா, ஆஸ்தி ரேலியா போன்ற நாடுகள் சட்டப் பூர்வமாக இந்த வாழ்க்கை முறை யை அங்கீகரித்தி ருக்கின்றன. சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்த வாழ்க்கை முறையை தடை செய்திருக்கின்றன. 2008 இல் இந்திய சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ், ‘இந்தியாவில் Living Together முறையை அங்கீகரிக்க, தேவைப்படும்போது சட்டம் கொண்டு வரப்படும்’ என்று கூறியிருக்கிறார். இந்தியாவிலும் திருமணமின்றி வாழ்ந்து கொண்டி ருக்கும் நண்பர்கள் என்னவிதமான புதிய சட்ட அமைப்பு தங்களுக்கு தேவைப் படுகிறது என்பதை எடுத்துக் கூறலாம்.
மதத்தை எதிர்த்து நிற்கும் தோழர்கள், மிகத் தெளிவாக ஒன்றை உணர வேண்டும். மதம், சாதி, சொத்து ரிமை என்ற அமைப்புகள் நிலை கொண் டிருப்பது திருமணத்தில்தான். எனவே திருமணத்தை மத, சாதிய அமைப்பு களிடமிருந்து விடுவிப்பதே சம நீதி, சம உடமைச் சமூக அமைப்புக்கு முன் நிபந்த னையாக இருக்கும். ( அரசிடம், அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாங்கித் தரும் தீவிர போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும் பொதுஉடமைக் கட்சிகளின் தொழிற்சங்கவாதிகள் கொஞ்சம் கவனிக்கவும்) அந்த அடிப்படையில் அரசியல் மட்டு மன்று திருமணமும் மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டிய ஒன்றுதான். அதற்கான ஒவ்வொரு அசைவையும் நாம் ஆதரிப்போம்.
வாலிழந்த குரங்கு, எந்த குரங்குக்கும் வால் இருக்க கூடாது என்று நினைத்தக் கதை நினைவில் வருகிறது..
உதாரணமாக:..."ஒர ு பெண்ணும், ஆணும் ஈர்ப்பும் அன்பும் கொண்டு பழகிக் களித்திருக்க எந்த சடங்கையும் நியதியையும் இயற்கை இன்று வரை வகுக்கவில்லை"
"மனித வாழ்க்கை அற்புத மானது. அது வெறும் ஆண் பெண் சேர்க்கை மட்டுமன்று. எல்லா உடலுறவு களும் திருமணமாகுமா என்பதை விட, திருமணமாக வேண்டிய தேவையில்லை என்பதே முக்கியமானது"
ஈர்ப்புக்கும்,உ டல் சார் உறவுக்கும் இயற்கை எவ்வித நியதிகளையும் வகுக்கவில்லை என்றால் எல்லா உறவுகளையும் திருமணமாக ஏற்ப்பதில் கட்டுரையாளாருக் கு என்ன தயக்கம்?
மனித வாழ்க்கை அற்புதமானது;உடல ் சேர்க்கை மட்டுமன்று என்றால்"நீதியரச ர்"கர்ணனின் தீர்ப்பு எப்படி சரி?
இங்கிலாந்தில் 30 லட்சம் பேர் திருமண உறவின்றி கூடிவாழ்கிறார்க ள்;ஒப்புக் கொள்கிறேன்.ஆனால ்...கூடி வாழ்பவர்களின் குழந்தைகளின் நிலை என்ன?பெற்ற குழந்தைகளை வளர்ப்பதில் காட்டும் அக்கறை என்ன?வளரும் குழந்தைகள் அல்லது வளர்ந்த குழந்தைகள் தங்களின்"பெற்றோ ர்"என சொல்லப் படுவோருடன் காட்டும் இனக்கம் என்ன?மொத்தத்தில ் குடும்ப உறவுகளின் நிலை என்ன?எனபதையும் கட்டுரை ஆசிரியர் புள்ளி விவரத்தோடு கூறினால் நேர்மையாகயிருக் கும்.
திருமணம் எனும் விலங்காடித்தன் கட்டுப்பாட்டிற் குள் சிக்கி தவிக்கும் ஆண்/பெண் தன் விரும்பும் துணைகளோடு கூடி களிப்பதை"நீதியர சர்"கர்ணன் போன்றோரின் துணையோடு சட்டமாக்கிட பகுத்தறிவு பேசும் கட்டுரையாளர்கள் ஆயத்தமாக உள்ளனரா?
ஆணாதிக்கம்,திரு மணம் சார்ந்த உறவுகளில் மட்டும் பிரதிபலிக்கிறதா ?அல்லது பெண்களுக்கு எதிரான
வன் கொடுமையா?
"மத"வாதிகளின் பிடியிலிருந்து மீட்டெடுக்கப்பட ும் ஆண் - பெண் உறவை சுதந்திர உறவாக மலர செய்த மேற்க்கத்தியர்க ள் சாதித்த மனித நல மேம்பாடு -வளர்ச்சி என்ன?
மதம் எனும் சாக்கடையிலிருந் து மக்களை மீட்டு புனித நீரோடைகளுக்கு அழைத்து செல்ல"நீதியரசர் "கர்ணனின் தீர்ப்பை போற்றுவோரிடம் சில கேள்விகள்...... .1)திருமணம் என்பது உடல் சார் உறவு மட்டுமா?அல்லது அதையும் தாண்டிய மாண்புகள் கொண்டதா?
2)உடல் சேர்க்கை என்பது வெறும் ஈர்ப்புகளின் தேடலா?அல்லது வாழ்க்கையில் பல் வேறு பொறுப்புகளை மனிதன் சுமக்க வழி வகை செய்யும் வாய்ப்பா?
3)திருமணம் அல்லாது கருத்தொருமித்து வாழும் உடல் சேர்க்கை,அதனால் தோன்றும் பொறுப்புகளை சுமக்க ஒப்பு கொள்கிறதா?அதை சட்டம் அனுமதிக்கின்றதா என்பதை விட......தங்கள் வாழ்க்கையிலிருந ்து முன்மாதிரிகளாக அதை நிகழ்த்தி நிறுவுவதற்கு பகுத்தறிவாளர்கள ் ஆயத்தமாயுள்ளார் களா?
4)சட்ட அனுமதிக்கு முந்தைய சுய மரியாதை திருமணங்கள் வெறும் கருத்தொருமித்து வாழ்ந்தவர்களின் முன்னுதாரணமா?அல ்லது தங்கள் கழகத்தார்களின் முன்னிலையில் நடந்த சங்கமமா?
5)திருமணம் என்றாலே பார்ப்பனிய சனாதனம் தான் அடிப்படை என்ற கருத்தியலை பகுத்தறிவாளர்கள ் ஏற்கிறார்களா?
6)குடும்பவியலில ் பெண்களுக்கு சொத்துரிமையை மறுக்க்கும் பார்ப்பனியம் தான் பகுத்தறிவாளர்கள ின் உலகமா?
"நீதியரசர்"கர்ண ன் அவர்களால் தீர்த்து வைக்கப்பட்ட வழக்கு முஸ்லிம்களுடையத ு.இஸ்லாமிய அரசு இங்கிருந்திருந் தால் இனைந்திருந்தோர் வழக்கு க்தொடுக்க வந்திருக்க மாட்டார்கள்;குழ ந்தை பெற்றிருக்க மாட்டார்கள்;தண் டனைக் குரிய குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சமுகத்தின் ஒழுக்க மேம்பாட்டிற்கான பாதுகாப்பு நிறுவப்பட்டிருக ்கும்.
காரணம்....1)முஸ ்லிம்கள் தங்களின் விருப்பத்திற்கு ரியோரை வாழ்க்கை துனையாக அடைந்து கொள்ள தடையில்லை.அதற்க ுரிய ஒரே ஒரு கட்டுப்பாடு அது கள்ளத்தனமற்ற பெற்றோர்,குடும் பம்,சமுகம் என எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட நிகழ்வாக வாழ்க்கை ஒப்பந்தமாக அமைய வேண்டும்;
2)ஆண்/பெண் ஆகிய இருபாலரும் எவ்விதத்திலும் சிரமத்திற்குள்ள ாகத வகையில் இஸ்லாத்தில் திருமண ஒப்பந்தங்களுக்க ும் - பிரிவுகளுக்கும் சட்ட பாதுகாப்பு உண்டு;சமுக பாதுகாப்பு உண்டு;
3)ஆண்/பெண் என இருபாலருக்கும் சுயமாக தங்களின் பொருளை ஈட்டவும்,சேர்க் கவும் அனுமதியுண்டு.அத ு போன்று பெற்றோர் - கணவன் - பிற உறவுகளால் சேர்க்கப்பட்டு விட்டு செல்லப் பட்ட சொத்துக்களிலும் உரிமை உண்டு.இது எல்லாம் இன்றும் இந்தியாவில் நடைமுறையிலும் உண்டு.
இதை எல்லாம் தெரிந்து கொள்ளாமல் ஒரு நீதிபதியானவர் தீர்ப்பு வழங்குகிறார் என்றால்.....அவர ் யார்?
அவரை ஆதரிப்பவர்கள் பகுத்தறிவாளர்கள ் என்றால்.......ப குத்தறிவு என்றால் என்ன?
கட்டுரை எழுதும் முற்ப்போக்காளர் கள் அல்லது முற்போக்காளர்கள ாக தங்களை கருதுபவர்கள் சற்று நேரம் ஒதுக்கி சிந்திக்கலாமே!! !!
RSS feed for comments to this post