வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று.
குறள் - 931
தூண்டில்முள் இரையினைத் துள்ளுமீன் கவ்வியே
துடிதுடித் திடுதல் போல
சூதினால் வருபொருள் பெரிதெனக் கொள்ளுவான்
சூதிலே அழிந்து போவான்
பொருள்வந்து சேர்வது போலவே தெரியினும்
பொல்லாத சூது தன்னைப்
பொருந்தாமல் வாழ்வதே புரிந்தவர் செயலெனப்
பொன்வரி சொன்ன குறளே!
- கவிஞர் மானம்பாடி புண்ணியமூர்த்தி