கீற்றில் தேட...

துகள்களாய் துளிர்த்தப்
பச்சைக் கிளையில்
துகள்களாய்
அமர்ந்திருக்கிறது பறவை

பாதைச் சாரிகளோ
சற்றழுத்தக் காற்றோ
வாய்த்தால் பெய்யக் கூடிய
மழையவன்றி
பறக்கப் போவதில்லை

சற்று முன்
கிண்ணத்திலிருந்து உயிர்ப்பித்த
அக்கைகளுக்காய்
முழு இரவை ஒற்றைக் காலூன்றி
தவத்தில் கழிக்கும் அப்பறவை.

- பிரபாவரசன்