கல்வியாண்டில் ஆரம்பத்தில் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான தகுதி மதிப்பெண்களை குறைத்து அரசாணை வெளியிட்ட தமிழக அரசின் கல்வித்துறை தற்போது வேறொரு நடவடிக்கையையும் எடுத்துள்ளது. அதாவது இதற்குமேல் பொறியியல் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட அகில இந்திய தொழில்நுட்ப கவின்சில் அனுமதி வழங்க கூடாது என்று கோரும் தீர்மானம் ஒன்றினை ஏ.ஐ.சி.டி.இ -க்கு அனுப்பியுள்ளது.

தகுதி மதிப்பெண் குறைப்பு நடவடிக்கை கடந்த ஆண்டு பல தனியார் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பபடமல் கிடந்த காலி இடங்களைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட்டது . அதனால் கூடுதல் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது; அதன் விளைவாக இந்த ஆண்டு கடந்த ஆண்டைப்போல் இல்லாது காலி இடங்கள் அனைத்தும் பொறியியல் கல்லூரிகளில் நிரப்பபடும் வாய்ப்பு கல்லூரிகளுக்கு ஏற்படும் என்பதற்காக அந்த முடிவு எடுக்கப்பட்டது. இப்போது புதிய பொறியியல் கல்லூரிகள் திறக்கப்பட கூடாது என்று அரசு முடிவெடுக்கக் காரணம் கூடுதலாகக் கல்லூரிகளைத் தனியார் திறந்து கொண்டே போனால் அவற்றில் சேர்வதற்குப் போதுமான மாணவர்கள் இருக்க மாட்டார்கள்; அதனால் பல தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகள் நஷ்டமடைய நேரும்; அவ்வாறு நஷ்டமடைவதிலிருந்து அவர்களைக் காப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அரசைப் பொறுத்தவரையில் தற்போது சுயநிதி அடிப்படையில் தொடங்கப்படும் கல்லூரிகள் எவற்றிக்கும் ஆசிரியர் அல்லது அலுவலர் சம்பளம் வழங்கும் பொறுப்பு இல்லை . எனவே சுயநிதிக் கல்லூரிகளில் மாணவர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் அரசிற்கு இதில் நஷ்டமேதுமில்லை. இந்த நிலையில் அரசின் இந்த முடிவு அதன் லாப நஷ்டத்தை மனதிற்கொண்டு எடுக்கப்படவில்லை. தனியார் பொறியியல் கல்லுரி நிர்வாகங்கள் நஷ்டமடையக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அரசிற்கு இவிஷயத்தில் ஏன் இவ்வளவு அக்கறை ?

சந்தை விதி

வழக்கமாகச் சமூகத்தில் அனைத்துச் சரக்குகளின் விலையையும் தீர்மானிக்கும் சந்தை விதி கல்லூரிகள் திறக்கவும் நடத்தவும் உள்ள வாய்ப்பினையும் தீர்மானிக்கட்டும் என்று அரசு விட்டுவிட்டுப்போக வேண்டியதுதானே. அதாவது கூடுதல் கல்லூரிகள் திறந்தால் அதில பல இடங்கள் நிரப்பப்படாமல் போனால் தரமில்லாத பல கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறையும்; அதன் விளைவாக அக்கல்லூரிகளை நடத்த முடியாத நிலை கல்லூரி நிர்வாகங்களுக்கு ஏற்படும்; அந்நிலையில் அவை மூடப்படும் சூழ்நிலை உருவாகும்.

அவ்வாறு சந்தை விதியின் செயல்பாட்டினால் தரமில்லாத சில கல்லூரிகள தாமாகவே மூடப்படும் சூழ்நிலை ஏற்பட்டால் அதுவும் மாணவர்களைப் பொறுத்தவரை நல்லது தானே. குப்பைக் கூலங்கள் இல்லாத தெருக்களைப்போல் கல்வித்துறை சுத்தமாகவாவது இருக்குமே. இன்னொரு வகையில் அரசு எங்கும் எதிலும் கடைப்பிடிக்க விரும்பும் தாராளவாதக் கொள்கையும் இடையூறின்றி அமுல்படுத்தப்படும் நிலையும் அதனால் பராமரிக்கப்படுமே. அப்படியிருந்தும் அரசு இவ்வாறு முடிவெடுப்பானேன்?

ஒருவேளை ஆட்சியாளர்கள் இவ்வாறும் கூட வாதிடலாம். அதாவது தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளும் சமூக மக்களில் ஒரு பகுதியினரே. பொதுவாக மக்கள் அனைவரின் மீதும் அக்கறை கொண்டு அனைவரின் நலன்களையும் பாதுகாக்க விரும்புவதே அரசாங்கம். அந்த அடிப்படையில் கல்வி முதலாளிகளின் நலன் கருதி அக்கறையுடன் செயல்பட்டால் அதில் என்ன தவறு என்று அவர்கள் வாதிடலாம்.

சமூகத்தின் பெரும்பான்மை மக்களின் நலன்களைக் கருத்திற்கொண்டு அரசாங்கங்கள் செயல்படுவதே சரியான ஜனநாயக நடைமுறை. நமது இன்றைய தமிழ்ச் சமூகத்தில் பொறியியல் கல்வி நிறுவனங்களை நடத்தும் முதலாளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் மிகக்கூடுதல் எண்ணிக்கையில் அக்கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர் இருக்கின்றனர். அந்த ஆசிரியர்களைக் காட்டிலும் மிகமிகக் கூடுதல் எண்ணிக்கையில் அக்கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் இருக்கின்றனர்.

பராமரிக்கப்படுவது பெரும்பான்மையினர் நலன் அல்ல

நமது நாட்டில் பொறியியல் கல்லூரி முதலாளிகள் மட்டுமல்ல தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கூடப் பிரச்னைகளில் தான் உள்ளனர். மாணவர்களும் மிகக்கடுமையான பிரச்னைகளை எதிர்கொண்டே உள்ளனர். புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கக் கூடாது; அதைப்போல் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து பொறியியல் கல்லூரிகளில் அதிகமானவர் சேர வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகளில் சமூகத்தின் ஒரு பகுதியான தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கச் செயல்படும் தமிழக அரசு கட்டிடத் தொழிலில் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளரைக் காட்டிலும் குறைவான சம்பளத்திற்குப் பல கல்லூரிகளில் வேலை செய்யும் பொறியியல் முதுகலை கற்ற ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வரலாமல்லவா? அதாவது மத்திய அரசின் சம்பளக் கமிஷன் நிர்ணயித்த சம்பளத்திற்கும் குறைவான சம்பளத்தைத் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு வழங்காதிருக்கும் வகையில் தலையீடு செய்யலாமே; ஏ.ஐ.சி.டி.இ - யையும் அதற்கான நடவடிக்கை எடுக்க வற்புறுத்தலாமே.

அதைப்போல் கல்வித்துறையில் ஆசிரியராக நியமிக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்சத் தகுதி இல்லாத பல ஆசிரியர்களைத் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் நியமித்துப் பாடம் கற்பிக்கச் செய்வது நடைபெற்றுக் கொண்டுள்ளது. அதனால் தரமான கல்வி கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் தொகைகளைக் கட்டணமாகச் செலுத்தியும் கூட படிப்பால் கிடைக்க வேண்டிய பலன் முழுமையாகக் கிடைக்காமல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்க ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பிற்குக் கடுமையான பரிந்துரைகள் செய்யலாமே?.

அங்கெல்லாம் முதலாளித்துவச் சந்தை விதி முழுமையாக அமலாவதை அதாவது தேவைக்கு அதிகமாக கல்வி கற்பிக்கவல்ல ஆசிரியர்கள் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்ற சந்தை விதி முழுமையாக அமுலாக அனுமதிக்கும் அரசு புதிய பொறியியல் கல்லூரி திறப்பு விசயத்தில் மட்டும் இவ்வாறு தலையிடுவானேன்?.

இதற்கான விடை யாரும் புரிந்து கொள்ள முடியாத புதிரல்ல. இந்த அரசாங்கம் மட்டுமல்ல நமது நாட்டிலுள்ள எந்த அரசாங்கமும் அல்லது அது மத்திய அரசாங்கமாகவே இருந்தாலும் அவையனைத்தும் முதலாளிகளின் நலனைப் பராமரிக்கக் கூடிய முதலாளித்துவ அரசாங்கங்களே. அவை அனைத்தும் முதலாளிகளின் கண்ணில் வெண்ணெய்யையும் சாதாரண மக்களின் கண்ணில் சுண்ணாம்பையுமே வைக்கின்றன. அவை சுண்ணாம்பை வைக்காவிட்டாலும் முதலாளிகள் சாதாரண மக்கள் கண்ணில் சுண்ணாம்பை வைப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. எனவே இந்த அரசுகளை அனைத்து மக்களின் அரசாங்கங்கள் என நம்மை எண்ண வைப்பது மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். அதை நாம் நம்புவது அப்பட்டமான ஏமாளித்தனம்.

எதிர்கொண்டே உள்ளனர். புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கக் கூடாது; அதைப்போல் தகுதி மதிப்பெண்களைக் குறைத்து பொறியியல் கல்லூரிகளில் அதிகமானவர் சேர வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படைகளில் சமூகத்தின் ஒரு பகுதியான தனியார் பொறியியல் கல்லூரி முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கச் செயல்படும் தமிழக அரசு கட்டிடத் தொழிலில் உடல் உழைப்பில் ஈடுபடும் தொழிலாளரைக் காட்டிலும் குறைவான சம்பளத்திற்குப் பல கல்லூரிகளில் வேலை செய்யும் பொறியியல் முதுகலை கற்ற ஆசிரியர்களின் நலன்களைப் பாதுகாக்க முன்வரலாமல்லவா? அதாவது மத்திய அரசின் சம்பளக் கமின் நிர்ணயித்த சம்பளத்திற்கும் குறைவான சம்பளத்தைத் தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் ஆசிரியர்களுக்கு வழங்காதிருக்கும் வகையில் தலையீடு செய்யலாமே; ஏ.ஐ.சி.டி.இ‡யையும் அதற்கான நடவடிக்கை எடுக்க வற்புறுத்தலாமே. அதனால் தரமான கல்வி கிடைக்காமல் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் பெரும் தொகைகளைக் கட்டணமாகச் செலுத்தியும் கூட படிப்பால் கிடைக்க வேண்டிய பலன் முழுமையாகக் கிடைக்காமல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். அதைத் தடுக்க ஏ.ஐ.சி.டி.இ. அமைப்பிற்குக் கடுமையான பரிந்துரைகள் செய்யலாமே?.

அங்கெல்லாம் முதலாளித்துவச் சந்தை விதி முழுமையாக அமலாவதை அதாவது தேவைக்கு அதிகமாக கல்வி கற்பிக்கவல்ல ஆசிரியர்கள் இருந்தால் அதனைப் பயன்படுத்திக் குறைந்த கூலி கொடுத்து வேலை வாங்கலாம் என்ற சந்தை விதி முழுமையாக அமுலாக அனுமதிக்கும் அரசு புதிய பொறியியல் கல்லூரி திறப்பு வியத்தில் மட்டும் இவ்வாறு தலையிடுவானேன்?.

இதற்கான விடை யாரும் புரிந்து கொள்ள முடியாத புதிரல்ல. இந்த அரசாங்கம் மட்டுமல்ல நமது நாட்டிலுள்ள எந்த அரசாங்கமும் அல்லது அது மத்திய அரசாங்கமாகவே இருந்தாலும் அவையனைத்தும் முதலாளிகளின் நலனைப் பராமரிக்கக் கூடிய முதலாளித்துவ அரசாங்கங்களே. அவை அனைத்தும் முதலாளிகளின் கண்ணில் வெண்ணெய்யையும் சாதாரண மக்களின் கண்ணில் சுண்ணாம்பையுமே வைக்கின்றன. அவை சுண்ணாம்பை வைக்காவிட்டாலும் முதலாளிகள் சாதாரண மக்கள் கண்ணில் சுண்ணாம்பை வைப்பதைக் கண்டு கொள்ளாமல் இருக்கின்றன. எனவே இந்த அரசுகளை அனைத்து மக்களின் அரசாங்கங்கள் என நம்மை எண்ண வைப்பது மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். அதை நாம் நம்புவது அப்பட்டமான ஏமாளித்தனம்.

Pin It