“நான் உயிரோடு இருந்து தமிழை வளர்ப்பதைவிட என் புதைகுழியே அதிகமாகத் தமிழை வளர்க்கும்!”

பார்ப்பனரல்லாதோர் இயக்கமாகிய நீதிக் கட்சியை ‘திராவிடர் கழகம்’ என்று பெரியாரும், அண்ணாவும் பெயர் மாற்றம் செய்ய விரும்பியபோது, அதனை எதிர்த்து “தமிழர் கழகம்” எனும் பெயரில் தனி இயக்கம் கண்டவர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார்.

கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் திருச்சிராப்பள்ளி யில் பெரியண்ணன் - சுப்பம்மாள் இணையருக்கு மகனாக 11.11.1899 இல் பிறந்தார். இவர் தந்தையார் சிவத்தொண்டில் ஈடுபட்டக் காரணத்தால் சிவனைக் குறிக்கும் வகையில் இவருக்கு விசுவநாதம் என்று பெயரிட்டார்.

இவரின் தந்தையார் பெரியண்ணன் அவர்கள் தமது மூத்த சகோதரர் கிருஷ்ணன், ஆறுமுகம் ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தததோடு கூட்டாகப் புகையிலைத் தொழிலை யும் நடத்தி வந்தார். மூவரின் முதலெழுத்தைக் குறிக் கும் வகையில் ‘கி.ஆ.பெ.’ (K.A.P) எனும் பெயரினைத் தொழிலுக்குப் பயன்படுத்தியதால் இந்தப் பெயரே காலப்போக்கில், விசுவநாதம் அவர்களுக்கும் தலைப் பெழுத்தாக நிலைத்து விட்டது.

வாலையானந்த சுவாமிகள் மூலம் சைவப்பற்றை யும், மறைமலையடிகள் மூலம் தமிழ்ப்பற்றையும் வளர்த் துக் கொண்டார். ஆயினும் சைவத்தின் பெயரால் சாதி ஏற்றத்தாழ்வு பாராட்டினால் அதை ஏற்க மறுத்தார் கி.ஆ. பெ.வி. சிவ தீட்சைப் பெறாத தாழ்த்தப்பட்ட மக்கள் திருவாச கம் படிப்பதற்கு கி.ஆ.பெ.வி. அனுமதி கேட்டபோது சைவராகிய வாலையானந்த சுவாமிகள் மறுத்தார். அதுமுதல் தன் கழுத்தில் சிவதீட்சைப் பெற்று தான் அணிந்திருந்த உத்திராட்ச மாலையை இனி அணிவதில்லை என்று கழற்றி வீசினார்.

1920ஆம் ஆண்டில் 21 அகவை நிரம்பிய கி.ஆ. பெ.வி. நீதிக்கட்சியில் இணைந்து பார்ப்பனரல்லாத தமிழர் களுக்குப் பாடுபட்டதோடு, பெரியார் தொடங் கிய சுயமரியாதை இயக்கத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

சாதிக்கொரு நீதி சொல்லும் ஆரிய மனுதர்மக் கோட்பாட்டின்படி ஒடுக்கப்பட்ட மக்களும், கண வனை இழந்த பெண்களும் கொடுமைகளுக்கு உள்ளான போது கொதிப்படைந்தார். 1927ஆம் ஆண்டு மே மாதம் சுமார் 100 தாழ்த்தப்பட்டோரை அழைத்துக் கொண்டு முதன்முதலில் ஆலய நுழைவை மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை, திருவானைக் காவல் கோயில்களிலும் கி.ஆ.பெ. வி.யின் தலைமையில் ஆலய நுழைவு மேற்கொள்ளப் பட்டது.

24.7.1927 அன்று அதே திருச்சி ராப்பள்ளியில்“சுயமரியாதை அல்லது மூன்று நண்பர்கள்” நாட கம் அரங்கேற்றப்பட்டது. கி.ஆ. பெ.வி. இந்த நாடகத்தை பொறுப் பேற்று நடத்தினார். கலப்புத் திருமணம், விதவைத் திருமணம் ஆகியவை குறித்து இந்நாடகத்தின் கதாப் பாத்திரங்கள் வலியுறுத்தின.

அன்றைய தெருக்கூத்து நாடகங் களில் “வண்ணான் பாட்டு” எனும் பெயரில் சலவைத் தொழில் செய்தி டும் மக்கள் இழிவு செய்யப் பட்டனர். “வண்ணான் வந்தானே . ...வண்ணாத்தியும் வந்தாளே...” என்று தொடங்கும் ஓடியன் கிராமப் போன் இசைத்தட்டுப் பாடல் ஒலிபரப்பிற்கு எதிராக தென்னிந்திய வண்ணார் குல மகாஜனக் கூட்டம் 3.11.1933இல் திருச்சிராப்பள்ளியில் கூடியது. இக்கூட்டத்திற்கு கி.ஆ.பெ.வி. தலைமை தாங்கிக் கண்டனம் செய்தார். 1

1938ஆம் ஆண்டு அன்றைய சென்னை மாகாண முதல்வர் இராசாசி, பள்ளிகளில் கட்டாய இந்தியைப் புகுத்தியபோது இதற்கு எதிராகத் தமிழறிஞர்கள் போர்க் குரல் எழுப்பினர். மறைமலையடி கள், சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகிய மூன்று தமிழறிஞர்களின் பங்களிப்பு தமிழக வரலாற்றில் மிக முகாமையானவை. சென்னை மாகாணத்தில் தமிழரல் லாதப் பகுதிகளில் இந்தித் திணிப் பிற்கு எதிராகக் கிளர்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இந்தப் போராட்டத்தில் தமிழகப் பகுதி களில் வாழும் தமிழர்கள் மட்டுமே தங்களை முழுமையாக இணைத்துக் கொண்டனர். இதில் நீதிக் கட்சியில் பணியாற்றிய தமிழரான கி.ஆ. பெ.வி.யின் பங்கு அளப்பரியதாகும்.

26.12.1937 அன்று திருச்சிராப் பள்ளியில் முதன்முதலில் கி.ஆ. பெ.வி. “சென்னை மாநிலத் தமிழர் மாநாடு” என்ற பெயரில் இந்தி எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டினார். அன்று நடந்த பேரணியில் பத்தா யிரம் பேர் பங்கேற்றனர். அதில் அவர் வெளியிட்ட அறிக்கை அனைத்துத் தமிழர்களையும் போராட்டத்தில் ஈர்க்கும்படி அமைந்தது. அது வருமாறு.

“தமிழனுடைய நாடு படை யெடுப்பால் அழிக்கப்பட்டது.

தமிழனுடைய நூல் கடல் நீரால் அழிக்கப்பட்டது.

தமிழனுடைய கல்வி பார்ப்ப னரால் ஒழிக்கப்பட்டது.

தமிழனுடைய அறிவு புராணங் களால் மழுங்கப்பட்டது.

தமிழனுடைய பொருள் புரோகிதத்தால் பிடுங்கப்பட்டது.

தமிழனுடைய கட்சி உபாயத்தால் ஒடுக்கப்பட்டது.

தமிழனுடைய பதவி வஞ்சனை யால் கவரப்பட்டது.

தமிழனுடைய வீரம் உபதேசத்தால் அடக்கப்பட்டது.”

தமிழறிஞர் க. சுப்பிரமணிய பிள்ளை திறப்புரை செய்த இம் மாநாட்டில் கட்டாய இந்தித் திணிப்பைக் கண்டித்தும், தமிழ் மாகாணத்தை தனி மாகாணமாகப் பிரிக்கக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இராசாசி இந்தியை ஆதரித்துப் பேசிய போதெல்லாம் கி.ஆ.பெ.வி. தனது வாதத் திறமையால் வென்று காட்டினார். இராசாசி, “தமிழ் இட்டலி” போன்றது. “இந்தி சட்னி” போன்றது என்பார். இவரோ சட்னி இன்றி இட்டலியை உண்ண முடியும். இட்டலியின்றி சட்னியை உண்ண முடியுமா? என்று பதிலடி தருவார்.

உலகத்தோடு தொடர்பு கொள்ள ஆங்கிலம், இந்தியா முழுவதும் தொடர்பு கொள்ள இந்தி என இந்தி மொழி ஆதர வாளர்கள் முழக்கம் எழுப்புவர். இவரோ “பெரிய பூனைக்கு என்று ஒரு துளை செய்த பிறகு குட்டி பூனைக்காக ஒரு சிறு துளை செய்வது முட்டாள்தனம்” என்று பதில் தருவார்.

1938இல் சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியம் உருவாக் கப்பட்டது. இதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும் செயலா ளராக கி.ஆ.பெ.வி.யும் தேர்ந்தெடுக் கப்பட்டனர். அதன்பின் தமிழக மெங்கும் போராட்டங்கள் வெடித் தன. நாடெங்கும் கயல், புலி, வில் அடங்கிய மூவேந்தர் கொடிகள் கி.ஆ.பெ.வி. அறை கூவலால் ஏற்றப்பட்டன.

இந்தி எதிர்ப்புப் பரப்புரைக்கு கி.ஆ.பெ.வி. தூத்துக்குடிக்கும், திரு நெல்வேலிக்கும் சென்றபோது அவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. நெல்லை மேலை வீதியில் கற்கள் வீசப்பட்டதில் நெற்றி உடைந்து இரத்தம் வழிந் தோடிய போதும் அவர் பேசுவதை நிறுத்தவில்லை. அப்போது அவர் “நான் வீட்டிலிருந்து புறப்படும் போது திரும்ப வருவதாகச் சொல் லிப் புறப்படவில்லை. நான் உயி ரோடு இருந்து தமிழை வளர்ப் பதைவிட என் புதைகுழியே அதிக மாக வளர்க்கும்!” என்றார். எட்டய புரத்தில் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கி.ஆ.பெ.வி. பேசும் போது கல்லெறிதல் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது கி.ஆ. பெ.வி. யின் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தோடியது. உடனடியாக கூட்டம் நிறுத்தப்பட்டது.

தமிழகத்தில் நடந்த முதல் கட்ட இந்தி எதிர்ப்புப் போரில் மட்டும் 12 மாவட்டங்களில் 314 ஊர்களில் 480 நாட்கள் 617 சொற்பொழிவுகளை கி.ஆ.பெ.வி. நிகழ்த்தி சாதனை படைத்தார்.

இந்தி எதிர்ப்புப் போரின்போது கி.ஆ.பெ.வி. மகன் இராசரத்தினம் மறைந்தார். அதுபற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. மகன் இறந்த அன்றும், மறுநாளும் தொடர்ந்து கூட்டங்களில் பங் கேற்றார். அப்போது நீதிக்கட்சி நடத்திய ‘விடுதலை’ ஏடு தனது தலையங்கத்தில் “வங்க நாட்டு பாபு சுரேந்திரநாத் பானர்ஜி தம் மகன் இறந்த போது அவரின் மனத் திண்மை மாறாது தொடர்ந்து பணியாற்றியதைப் போல் கி.ஆ. பெ.வி. தம் மகன் இறந்தபோதும் கலங்காது இந்தி எதிர்ப்புப் போரில் போராடி வருகிறார்” என்று பாராட்டி எழுதியது.

1938இல் சுயமரியாதை இயக்கத் தலைவராக விளங்கியவர் பெரியார். அவர் தமிழறிஞர்களோடு இணைந்து “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழக்கமிட்ட போது, தமிழ்த் தேசியச் சிந்தனையாளரான கி.ஆ.பெ.வி.யை மகிழ்ச்சி கொள்ள செய்தது. இராசாசி அரசால் பெரியார் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அந்தச் சிறையிலிருந்தபடியே நீதிக்கட்சிக்குத் தலைவரானார். சிறை மீண்டு வெளியே வந்த பெரியார் “தமிழ்நாடு தமிழருக்கே” முழக்கத்தைத் திடீரென்று “திராவிட நாடு திராவிடருக்கே” என்று மாற்றினார். எழுச்சி பெற்று வந்த தமிழ்த் தேசிய உணர்ச்சியா னது இதனால் திசை திருப்பப் பட்டது. இதனை கி.ஆ.பெ.வி.யின் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதனோடு பெரியார் நீதிக் கட்சியை சர்வாதிகாரப் போக்கோடு நடத்தி வருவதாகக் கருதினார். அவரின் செயல்பாடுகள் கட்சியைப் பலப்படுத்துவதற்கு உதவவில்லை என்பதாகக் கூறி 25 குற்றச்சாட்டு களை முன்வைத்து நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பி லிருந்து விலகினார்.

ஆரிய ஆதிக்கத்திலிருந்து தமிழ் மக்களை விடுவிக்கப் போராடிவரும் மறைமலையடிகள், உமா மகேசுவர னார் உள்ளிட்ட தமிழ்ப் புலவர் களை ஆரிய அடிமைகள், ஆரியக் கூலிகள் என்று பெரியார் கூறியதை கி.ஆ.பெ.வி. தமது குற்றச் சாட்டு களில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச்செயலாளர் பொறுப்பி லிருந்து விலகி, சாதாரண உறுப் பினராக கி.ஆ.பெ.வி. நீடித்து வந்த நிலையில், 27.08.1944 அன்று சேலத் தில் நடைபெற்ற 16ஆவது நீதிக் கட்சி மாநாட்டில் கட்சியின் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

“திராவிடர் கழகம்” என்னும் பெயர் மாற்றத்திற்கு அண்ணல் தங்கோ, கி.ஆ.பெ. விசுவநாதம், சுவுந்தர பாண்டியனார், மு. தங்கவேலு ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 2

இந்த நிகழ்வு நடைபெற்றதற் கானப் புறச்சான்றுகள் எதுவு மில்லையென்றும், கி.ஆ.பெ.வி.க் கும், பெரியாருக்குமிடையே நிலவிய முரண்பாடு கட்சிச் சீரமைப்பு தொடர்பானதேயன்றி, ‘திராவிட நாடு’ கேட்டதிலோ, ‘திராவிடர் கழகம்’ பெயர் மாற்றியதிலோ அல்லவென்றும் பெரியார் இயக்கங் கள் திரும்பத் திரும்ப கூறி வரு கின்றன.

இது உண்மையல்ல. சேலம் மாநாடு நடைபெறுவதற்கு முன்பே கி.ஆ.பெ.வி. ‘திராவிட நாடு’ கருத்தியலில் மாறுபாடு கொண் டுள்ளதையும், ‘தமிழ்நாடு’ என்பதில் உறுதியாக இருந்துள்ளதையும் அறிஞர் அண்ணா கி.ஆ.பெ.வி.க் கும் சவுந்தர பாண்டியனாருக்கும் எழுதிய இரண்டு கடிதங்கள் உறு திப்படுத்துகின்றன.

15.01.1942 இல் ஜஸ்டிஸ் இளைஞர் மாநாட்டிற்கு கி.ஆ.பெ. வி.யைத் தலைமை தாங்கும்படி அண்ணா கடிதம் ஒன்றின் மூல மாக கேட்டுக் கொண்டார். கி.ஆ. பெ.வி.யின் கொள்கை நிலை பாட்டை உணர்த்தும் அண்ணா வின் கடித வரிகள் பின்வருமாறு.

“திருவாரூர் மாநாட்டில் திராவிட நாடு பற்றிய தீர்மானம் நிறைவேறியிருப்பதால் அதனை எதிர்ப்பது முறையல்ல. திராவிட நாடுப் பிரிவினை என்பது “தமிழ் நாடு தமிழருக்கே” என்பதற்கு முரண் அல்ல. இக்கருத்தில் தங்க ளுக்கு விருப்பமில்லாவிடில், தமிழ் நாடு தனி மாகாணம் ஆவதன் அவசியம் பற்றி தலைமை உரையில் விளக்குங்கள்” 3

12.08.1944இல் டபிள்யூ.பி. சவுந்திர பாண்டியனார் அவர்க ளுக்கு எழுதிய மற்றொரு கடிதத் தில் கி.ஆ.பெ.வி.யை சந்தித்து வரக்கூடிய சேலம் மாநாட்டில் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள் ளும்படி அண்ணா கடிதம் ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார். அது பின்வருமாறு.

“அன்புடைய தலைவருக்கு, வணக்கம், தங்கள் கடிதம் கண் டேன். மகிழ்ந்தேன். ரிகிறி அவர்கள் வருவது பற்றி மிக்க சந்தோஷமே. மாநாட்டுக்கு முன்பு அவரை வரவழைத்துத் தாங்கள் கட்சியின் இன்றைய நிலையைக் கூறுதல் அவசியம் என்று கருதுகிறேன். ஏனெனில், அவருடைய முன்னைய குற்றச்சாட்டுகளுக்கும், இன்றுள்ள கட்சியின் பிரச்சனைக்கும் இடையே பலப்பல மாறுதல்கள் உண்டாகி விட்டன. எனவே, பழயதைக் கிள றிக் கொண்டு எதிர்காலத் திட் டத்தை இடருடையதாக்கிக் கொள் ளக் கூடாது என்று கருதுகிறேன்.

குறிப்பாக, அவர் 1) கட்சிக்காக தரப்பட்ட நிதி, 2) கட்சியின் பத்திரிக்கை, 3) கட்சித் தலைவரின் ஏகபோக உரிமை, 4) அமைப்புமுறை இல்லாமை என்பவைகளையே வற்புறுத்துபவர் 5) தமிழ்நாடு தனி நாடாதல் வேண்டும். திராவிட நாடு அல்ல என்று கூறுவார்.. நண்பர் KAP தவிர மற்றவர்கள் திராவிட நாடு என்ற குறிக்கோளோ, வரலாறு, இனப்பண்பு முதலியவைக்கு ஏற்றது என்பதையும் என்பதையும் ஏற்றுக் கொண்டார்கள்.

நிற்க. நண்பர் ரிகிறி அவர்கள் இந்தப் படியே விஷயங்களை யோசிப்பதைவிட இன்றும் இனியும் செய்ய வேண்டியதை யோசிக்க வேண்டும்”. 4

கி.ஆ.பெ.வி. கொள்கை முரண் பாடு இல்லாதவராக இருந்திருப் பின், அண்ணா மேற்படி கடிதத் தில் தெரிவித்திருக்கும் ‘திராவிட நாடு’ கோரிக்கையை ஏற்றுக் கொண்டு திராவிடர் கழகத்திலே இருந்திருக்க முடியும். தான் ஏற்றுக் கொண்ட தமிழ்த் தேசியக் கொள் கையில் உறுதியாக நின்ற காரணத் தால்தான் “தமிழர் கழகம்” எனும் அமைப்பை தோற்றுவித்தார். தமிழர்களிடம் கொள்கை முழக்கம் பரப்பிட அதன் துணையாக ‘தமிழர் நாடு’ இதழைத் தொடங்கினார்.

திராவிடர் கழகத்திலிருந்து ஏன் விலகினீர்கள்? என்ற கேள்விக்கு அவ்வேட்டில் தெளிவாகவே கி.ஆ. பெ.வி. பதிலுரைத்தார். “நான் திராவிடர் கழகத்தில் இருக்கவு மில்லை, விலகவுமில்லை. அவர்கள் தான் ‘தமிழ் வாழ்க’ என்பதிலிருந்து ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்பதிலி ருந்து. ‘தமிழ்க்கொடி’ தூக்குவதி லிருந்து விலகிப் போனவர்கள்” என்று விடையிறுத்தார். 5

கி.ஆ.பெ.வி. தமிழர் கழகம் பெயரிலும், ம.பொ.சிவஞானம் தமிழரசுக் கழகம் என்ற பெயரிலும் இயக்கம் தோற்றுவித்து செயல் பட்டு வந்ததை பெரியார் எதிர்த் தார். சென்னை - கோகலே மண்ட பத்தில் திரு. சி.டி.டி. அரசு தலைமை யில் நடைபெற்றக் கூட்டத்தில், "தமிழர் என்பதும் தமிழர் கழகம் என்பதும் தமிழரசுக் கட்சி என்ப தும் தமிழர் ராஜ்யம் என்பதும் தமிழ்நாடு தமிழருக்கே என்பதும் நமது முயற்சியைக் கெடுக்கும் சூழ்ச் சிகள்” என்று பெரியார் பேசிய தோடு நிறுத்திக் கொள்ளாது பிற இடங்களில் தமிழர் என்போர் பித்தலாட்டக்காரர்கள், கருங்கா லிகள் என்றும் கடுஞ்சொற்களை பயன்படுத்தி எழுதியும் பேசியும் வந்தார்.

அதற்கு பதிலுரையாக பின்வரு மாறு தமது ஏட்டிலே கி.ஆ.பெ.வி. எழுதினார். "இதனால் தமிழ், தமிழர், தமிழ்நாடு, தமிழ் அரசு என்று கூறக் கூடாதென்றும், திராவிடம், திராவிடர், திராவிட நாடு, திராவிடர் கழகம், திராவிட அரசு என்றே கூற வேண்டுமென் றும் அவர்கள் விரும்புவதாகத் தெரிகிறது. இது தமிழ்நாட்டுப் பெருமக்களுக்கு மாறுபட்ட கொள் கையாக இருந்து வருகிறது. காரணம் ஆந்திர, மலையாள, கன்னடிய மக்களாகிய சுற்றியுள்ள மூன்று நாட்டினரும் திராவிடர் எனக் கூறாமல் தங்கள் மொழியை யும், நாட்டையுமே கூறிவரும்போது தமிழ்நாட்டு மக்கள் மட்டும் தங்கள் மொழியையும் நாட்டையும் பற்றி ஏன் கூறக்கூடாது? இதற்கு மாறு பட்டு இருப்பது எதன் பொருட்டு என்பது தமிழ் மக்களுக்கு விளங்க வில்லை.

அவ்விதமாயிருந்தாலும் கருத் தும், கொள்கையும் உடையவர் களை பித்தலாட்டக்காரர்கள் கருங் காலிகள் என்று கூற வேண்டியது அவசியம் தானா என்பதையும் பெரியாரே எண்ணிப் பார்க்க வேண்டும். ஒரு கழகத்தின் தலைவர் வாயிலிருந்து இக்கடுஞ்சொற்கள் வருவது நேர்மையானது தானா என்பதை பொதுமக்களே கருதிப் பார்க்க வேண்டும்."

மேலும், பெரியார் ஆந்திர, கேரள, கன்னடிய நாடுகளுக்குச் சென்று, ஆந்திரர் என்றும், கேரளர் என்றும், கன்னடியர் என்றும் தம்மைச் சொல்லிக் கொள்பவர் களிடம் போய் பித்தலாட்டக் காரர் கள், கருங்காலிகள் என்று கூறத் தயாரா என்றும் கேள்வி எழுப்பி னார். 6

தமிழர் கழகத்தை நடத்த இயலாமல் சில ஆண்டுகளில் அதனை அவர் கலைத்த போதிலும் தமிழ் மொழி, தமிழர் நலனுக்கு ஆபத்து நேரும் போதெல்லாம் அதனை எதிர்ப்பதில் முதல் ஆளாக நின்றார். தமிழ் எழுத்துச் சீர்திருத்த எதிர்ப்பு, இந்தியைத் திணிக்கும் வானொலி நிலைய எதிர்ப்பு, 1965ஆம் ஆண்டு இந்தி மொழி எதிர்ப்புப் போர் ஆகிய வற்றில் பங்கேற்கத் தவறவில்லை.

கி.ஆ.பெ.வி. தமது 91ஆம் அகவையில், தமிழீழப் போரை முன்னெடுத்துப் போராடிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளின் போது பின்வருமாறு எழுதினார். “கிளம்பினான் ஒரு தமிழ் இளைஞன்! வீரனிலும் ஒரு மாவீரன்! அவனே ஈழத்தின் வீரமகன் பிரபாகரன்!!! இத்தகைய வீரன் ஒருவன் புறநானூற்றுக்குப் பிறகு இரண்டாயிரமாண்டுகளாக வேறு எவனும் தோன்றியதில்லை.”7

இராசீவ் காந்தி படுகொலையை சாக்காக வைத்து தமிழர் உரிமை களை பறிக்க முயன்ற தில்லி அரசைக் கண்டித்து பா.ம.க.வின் தமிழர் வாழ்வுரிமை மாநாட்டிலே, “1938இல் தமிழ்நாடு பிரிவினைப் போராட்டத்தைத் தொடங்கி னோம். எங்களுக்குரிய உரிமையைக் கொடுக் காவிட்டால் நாட்டைப் பிரிக்க வேண்டிய அவசியம்தான் உருவாகும்.” 8 என்று எச்சரிக்கை விடுத்தார்.

95 அகவை வரை ஒரு தமிழ்த் தேசியராகவே தன்னை அடையா ளப்படுத்தி வாழ்ந்து வந்த அவர் 19.12.1994 அன்று மறைந்தார். சாவதற்கு இரு நாட்களுக்கு முன் விடுத்த அறிக்கையில் “தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப் பாட மொழியாக்கினால் நான் மனநிறை வோடும், மகிழ்ச்சியோடும் சாவேன்”9 என்று இறுதி ஆசையை வெளிப்படுத்தினார். அவரின் கனவு மெய்ப்பட தொடர்ந்து போராடு வோம்!

நன்றி : முனைவர் கோ. வீரமணி எழுதிய “முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம்”

அடிக்குறிப்புகள் :

1) நகர தூதன், 05.11.1933, பக். 09

2)    சுப. வீரபாண்டியன், - பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்.

3)    வ.மணிமேகலை,- முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஒரு திறனாய்வு.

4)    பேரா. ந.க. மங்கள முருகேசன் -, சுயமரியாதை இயக்கம்.

5)    கி.ஆ.பெ.வி. - கேள்வி - பதில், தமிழர் நாடு, 14.01.1950,பக்.48

6)    தமிழர் நாடு - 25.01.1948, ம.பொ.சி. எழுதிய “புதிய தமிழகம் படைத்த வரலாறு”, பக். 82

7)    கோவை மகேசன் நடத்திய ‘வீர வேங்கை’ இதழ், 1990

8)    கி.ஆ.பெ.வி. தொடக்க உரை - பா.ம.க.வின் தமிழர் வாழ்வுரிமை மாநாடு, 1992

9)  கி.ஆ.பெ.வி. பேட்டி - மாலை முரசு, 19.12.1994

Pin It