சங்க காலம் என்பது கி.மு. 300 ஆம் ஆண்டிலிருந்து கி.பி.300 ஆம் ஆண்டு வரை உள்ள காலப் பகுதியாகும். இக்காலத்தில் தோன்றிய நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, திரு முருகாற்றுப்படை, பொருநர் ஆற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும் பாணாற்றுப் படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, குறிஞ்சிப்பாட்டு, நெடுநல் வாடை, பட்டினப்பாலை, மலைபடுகடாம் என்னும் பதினெட்டு நூல்களும் சங்க இலக்கிய நூல்களாகும். இவைகளில் உள்ள 2381 பாடல்களை 473 புலவர்கள் பாடி உள்ளனர். 102 பாடல்களின் ஆசிரியர் பெயர்கள் காணப்படவில்லை. தமிழர் வரலாற்றை எழுதுவதற்குரிய முதன்மைச் சான்றாதாரங்கள் புறநானூற்றில் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் அனைத்தும் இருப்பதாகக் கூறமுடியாது. தமிழர் வரலாற்றை எழுதுவதற்குத் தேவையான குறிப்புகள் உள்ளன. தொல்பொருள், கருவி, கலம், கட்டடம், காசு, நடுகல், கல்லறை, மனித எலும்பு, இலக்கியம், கல்வெட்டு, ஓலைச்சுவடி, நாட் குறிப்பு, பயணிகளின் வரலாற்றுக் குறிப்புகள், வரலாற்று ஆவணங்கள், செவிமரபுச் செய்திகள், பழக்க வழக்கங்கள், மொழிநூல் சான்றுகள், நில நூல் சான்றுகள், கடல் நூல் சான்றுகள் ஆகியவை களை வரலாற்றை எழுதுவதற்குரிய ‘வரலாற்று மூலங்கள்’ என்று கூறுவர். புறநானூற்றில் தமிழர் வரலாற்றை வரைவதற்குரிய வரலாற்று மூலங்கள் காணப்படுகின்றன.
புறநானூற்றில்...
தமிழ் மொழியை ‘வண்டமிழ்’ (தொல்.1336) என்றும் ‘தமிழ் என் கிளவி’ (தொல்.386) என்றும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. ‘அமிழ்’ என்னும் வினையடியாகவே, தமிழ், தமிழர் என்னும் சொற்கள் தோன்றியிருக்க வேண்டும். ‘தமிழ்’ என்ற சொல்லையே ஆரியர் ‘திரமிள’, ‘திரவிட’ என்று தவறாக ஒலித்திருக்க வேண்டும். தமிழ் மொழியைப் பேசுவதால் தமிழ் மக்கள் ‘தமிழர்’ எனப்பட்டனர். ஒரு நாட்டின் இனத்தை வரையறுப்பதற்கு, எல்லைகளை உடைய நிலம் நிலையான அரசு, மொழி , ஒரு பண்பாடுடைய மக்கள் என்ற நான்கும் அவசிய மானதாகும். இந்நான்கு பண்புகளும் தமிழ் இனத் திற்கு அடையாளமாக அமைந்துள்ளன. தமிழகமே தமிழ் மக்களின் ஆதி தாயகம் என்றும், தமிழர்களே தமிழகத்தின் மூலக்குடிகள் என்றும் மொகஞ் சதாரோ நாகரிகம், திராவிட நாகரிகமே என்றும் கீராசு பாதிரியார் மற்றும் சர் சான் மார்சல் ஆகி யோர் குறிப்பிடுகின்றனர். புறநானூற்றிலிருந்து, (1) தமிழர் தோன்றிய வரலாறு, (2) அரசியல் வரலாறு, (3) பண்பாட்டு வரலாறு, (4) சமுதாய வர லாறு ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.
தமிழர் தோன்றிய வரலாறு
வரலாறு என்பது ஒரு தொடர் நிகழ்வு என்றும், ஒரு விவாதம் என்றும், அது கடந்த காலம் பற்றிய உண்மைகளால் கட்டப்பட்டது என்றும் சான்.எச். அர்னால்டு கூறுகின்றார். ஆனால் வரலாறு என்பது ‘மாற்றங்களின் வரலாறு’ என்று மார்க்சிய வாதிகள் குறிப்பிடுகின்றனர். எனவே தமிழர்களின் கடந்த கால வரலாற்றையும், நிகழ்கால வரலாற்றையும் அறிந்து கொள்வதற்கு புறநானூறு ஓரளவு துணை செய்கிறது எனலாம்.
தமிழர் தோன்றிய இடம் குமரிக்கண்டம் (இலெமூரியா) என்று அறிஞர்கள் கூறுவர். கடல் கோளால் அழிந்து போன இக்குமரிக் கண்டத்தி லிருந்தே தமிழர்கள் தோன்றினர் என்று தேவநேயப் பாவாணர் போன்ற தமிழ் அறிஞர்கள் கருதுகின்ற னர். இலெமூர்களிடம் காணப்பட்ட சைவ வழி பாடு, பிணத்தை தாழியில் வைத்துப் புதைத்தல், தாய்த்தெய்வ வழிபாடு, தாய்வழி உரிமை போன்ற பழக்க வழக்கங்களின் எச்சங்கள் இன்றும் தமிழர்களிடம் காணப்படுவதால், தமிழர்கள் இலெமூரியாவில் இருந்தே தோன்றி இருக்க வேண்டும் என்று கா.அப்பாதுரையார் கருது கின்றார். குமரிக் கண்டத்திலிருந்து அழிந்து போன பஃறுளி ஆற்றைப் பற்றி, ‘முந்நீர் விழவின் நெடியோன் நன்னீர்ப் பஃறுளி’ (புறம்.9) என்னும் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுகின்றது. கடல் கோளுக்குப் பிறகு எஞ்சியிருந்த பழம் பாண்டிய நாட்டுப் பகுதியின் இடையே ‘குமரி’ என்னும் நதி ஓடியது என்பதை, ‘தெனாஅ துருகெழு குமரி’ (புறம்.6) என்னும் புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது. சிலப்பதிகாரத்திலும் (11:20-21) இச்செய்தி சுட்டப் படுவதைக் காணலாம்.
அரசியல் வரலாறு
சங்க காலம் என்பது இனக்குழு வாழ்க்கை மறைந்து, பேரரசர்களின் ஆட்சி தோன்றக் தொடங் கியிருந்த காலமாகும். அதனால், புற நானூற்றில் இனக்குழுத்தலைவர்கள், குறுநில மன்னர்கள், பெருநில மன்னர்கள் ஆகியோருடைய ஆட்சி அதிகாரம் அரசியல் அமைப்பை வழி நடத்திச் செல்வதைக் காண முடிகிறது. மன்னனே உலகின் உயிர் போன்றவன் என்பதை ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ (புறம்.186) என்ற புறப்பாடல் உணர்த்துகிறது.
கரிகாற்சோழனின் முன்னோர் கடல் கடந்து கப்பல் ஓட்டி மீண்டதை புறநானூறு (புறம்.66) கூறுகிறது. பருந்து ஒன்று புறாவை உண்பதற்காகத் துரத்தியது. புறா அடைக்கலமாக செம்பியன் காலடியில் விழுந்தது. அதைக் காக்க பருந்திற்கு தன் தசையை அறுத்துத் தந்தான் என்னும் செய்தியை ‘தன் கைப்புக்க குறுநடைப் புறவின்’ (புறம்.43) என்ற புறப்பாடல் எடுத்துரைக்கிறது. இதன் மூலம் மன்னர்கள் எளிய உயிர்களின் மீது அன்பு கொண் டிருந்த பண்பு புலப்படுத்தப்படுகிறது.
சேர மன்னர்களூள் ‘இந்திரன்’ என்னும் பட்டப் பெயர் கொண்ட ஒருவன் வெளிநாட்டி லிருந்து கரும்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் பயிர் செய்தான். அவனுடைய மரபில் வந்த அதிய மான் நெடுமான் அஞ்சியைப் பற்றி ‘அரும்பெறல் மரபின் கரும்பி வட்டத்து’ (புறம்.99) என்ற பாட லும், அவனுடைய மகன் பொகுட் டெழினியைப் பற்றி ‘கரும்பில் வட்டத்தோன் பெரும் பிறங் கடையே’ (புறம்.392) என்ற பாடலும் எடுத்துரைக் கின்றன. பாரி (புறம்.109), எவ்வி (புறம்.24), எயினன் (புறம்.361), பிட்டங் கொற்றன் (புறம்.168), இருங்கோவேள் (புறம்.201), பேகன் (புறம்.141), அதியமான் (புறம்.91,95,99), ஓரி (புறம்.152), குமணன் (புறம்.160), விச்சிக்கோ (புறம்.200) ஆகிய குறுநில மன்னர்களைப் பற்றி புறநானூறு குறிப்பிடுகின்றது.
இராமாயணத்தை வான்மீகி முனிவர் சமற் கிருத மொழியில் இயற்றினார். இராமாயணக் காலம் தோராயமாக, கி.மு. 1300 முதல் கி.மு.1200 வரை இருக்கலாம் என்று கூறுவர். புறநானூற்றில் உள்ள 358 ஆம் பாடலைப் பாடிய ‘வான்மீகி’ என்பார் இராமாயணம் பாடிய வான்மீகியின் வழி வந்தவராக இருக்கலாம் என்பர். மகாபாரதக் காலம் தோராயமாக, கி.மு. 1100 முதல் கி.மு.1000 வரை இருக்கலாம் என்று கூறுவர். மகாபாரதப் போரில் உதியஞ் சேரலாதன் நடுநிலையில் நின்று அனைவருக்கும் உணவு வழங்கினான் என்பதை, ‘அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ’ (புறம்.2) என்னும் புறப்பாடல் விளக்குகிறது. ஆனால் புற நானூற்றுக் காலத்தில் ஆரிய செல்வாக்கு தலை தூக்கி நின்றது. மன்னர்கள் தமிழர் பண்பாட்டைப் புறக்கணித்து, ஆரியர்களின் பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தனர். வேள்வி (யாகம்) செய்வதைப் பெருமையாக மன்னர்கள் கருதினர். அதனால் தான் பாண்டியன் ‘பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி’ என்னும் பட்டப் பெயரை ஏற்றுக் கொண்டிருந்தான். அதுவும் ஆரிய முனிவர்களைப் போல ‘குடுமி’ வைத்துக் கொள்வ தில் மன்னர்கள் பெரு விருப்பம் கொண் டிருந்தனர். இருங்கோவேள் (‘நீயே வடவால் முனிவன்’, புறம்.20), பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (‘இறைஞ்சுக பெரும நின் சென்னி’, (புறம்: 6), கரிகாற் பெருவளத்தான் (‘பெருவை நுகர்ச்சிப் பெருந்தூண் வேத வேள்வித் தொழின் முடித்து’, (புறம். 224) ஆகியோர் ஆரியத் துறவியர்களின் செல்வாக்கிற்கு அடிமைப்பட்டிருந்ததை புறநானூறு காட்டுகிறது.
“இல்வழங்கு மடமயில் பிணிக்கும்
சொல்வலை வேட்டுவன் ஆயினன் முன்னே”
(புறம்.252)
என்னும் ஒரே ஒரு புறப்பாடல் மட்டுமே துறவைக் கண்டித்துப் பேசுகிறது.
“வேத கால இலக்கியங்கள் துறவிகளின் பெருமையைப் பேச, சங்க இலக்கியத்தில் ஒன்றான புறநானூறு, வீரனாக இருந்து துறவியாக மாறிய ஒருவனின் துறவு வாழ்க்கையைக் கண்டு வருந்தி, மடமயில் பிணிக்கும் சொல்வலை வேட்டு வனாக இருந்து, பின் துறவியாக மாறிய அவனது நிலைக்கு வருந்திப் பாடுகின்றது”
என்று கூறுவர். மன்னர்கள் ‘வீரம்’ என்ற பெயரில் பிற மன்னர்களோடு அடிக்கடி போரிட்டுக் கொண்டிருந்தனர். போரில் தோற்ற மன்னனின் மகனை தேர்க்காலில் இட்டுக் கொல்லத் துணியும் (புறம்.46) அளவுக்கு அரசர்கள் இரக்கமற்றவர் களாகவும், போர் வெறியர்களாகவும் இருந்தனர். ‘நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின்’ என்ற பாடலில் ‘அல்லது’ (தீமை) செய்யாமல் இருக்குமாறு புலவர்கள், மன்னர் களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளும் அளவிற்கு மன்னர்கள் செய்த தீமை அளவு கடந்து காணப் பட்டது.
பண்பாட்டு வரலாறு
பண்பாடு அல்லது நாகரிகம் என்பது அறிவு, நம்பிக்கை, கலை, ஒழுக்கநெறிகள், சட்டம், வழக்கம் போன்றவைகளும் மனிதன் சமுதாய உறுப்பினனாக இருந்து கற்கும் பிற திறமைகளும், பழக்கங்களும் அடங்கியதாகும் என்று டைலர் என்பார் குறிப்பிடுகின்றார். ஒரு சமுதாயத்தின் பண்பாடு என்பது எண்ணப்போக்கு செயல்பாடு, பொருள்களின் பயன்பாடு ஆகியவை களை அடிப்படையாகக் கொண்டது என்று கூறுவர். தமிழர்களின் இம்மூன்று பண்பாட்டுக் கூறுகளை யும் வெளிப்படுத்தும் போக்கு புறநானூற்றில் காணப்படுகிறது.
கருவிகளின் வளர்ச்சியைக் கொண்டு ஒரு சமுதாயத்தின் வளர்ச்சியை அளந்து காண்பர். கற்களால் கருவி செய்யப்பட்ட காலம் கற்கால மாகும். அஃதே போல் பொன்னால் பொருட்கள் செய்யப்பட்ட காலத்தைப் பொற்காலம் என்பர். பொன் (புறம்.5,9,116,117,123), வெண்கலம் (புறம்.3, 281), வெள்ளி (புறம்.390) ஆகியவைகளைப் பயன்படுத்திப் பொருட்களைத் தயாரிக்கும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந் தனர். நெல் (புறம்.331), உப்பு (புறம்.116,60) ஆகியவைகளை உணவுப் பொருளாகப் பயன்படுத் தினர். ‘பருத்திப் பெண்டிர் பனுவலன்ன’ (புறம்.125) என்னும் புறப்பாடல் பருத்தியைக் கொண்டு நூல் நூற்ற செய்தியை விளக்குகிறது. யவனர்கள் கொண்டு வந்த கலத்தில் மது அருந்திய நிகழ்ச்சியை ‘யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்’ (புறம்.56) என்னும் பாடல் சுட்டுகிறது. எனவே தமிழர் பொருள்சார் பண்பாட்டில் (ஆயவநசயைட உரடவரசன) மேலோங்கி இருந்தனர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
சமுதாய வரலாறு
‘மலினோவ்ஸ்கி’ போன்றோர் சமூகத் தின் செயல்கள், மக்களின் உணவு,உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்வதை நோக்கமாக கொண் டவை என்று கூறுகின்றனர். இதனை, ‘தேவைக் கோட்பாடு’ என்று அழைத்தனர். ஒரு சமுதாயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ள சாதி, சமயம், குடும்பம் போன்ற நிறுவனங்களை ஆராய்வது அவசியமானதாகும். ஆரியர்களின் சார்பால் புற நானூற்றுக் காலத்திலேயே சாதி வேறுபாடு தோன்றக் தொடங்கிவிட்டது. ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் ‘வேற்றுமை தெரிந்து நாற் பாலுள்ளும்’ (புறம்.183) என்ற பாடல் நான்கு வகையான சாதி வேறுபாடுகளைக் குறிப் பிடு கிறது. மாங்குடி கிழார் ‘துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று இந்நான்கல்லது குடியும் இல்லை’ (புறம்.334) என்ற பாடலில் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்னும் நான்கு வகைச் சாதிகள் உள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார். இதில் ‘சாதி’ என்ற சொல்லைக் கவிஞர் கையாள வில்லை என்றும் ‘குடி’ என்று அவர் கூறியது பழங் குடிகளையே குறிக்கும் என்றும் ந.சுப்பரமண்யன் கூறுகின்றார். ஆனால் இது வலிந்து கூறுவதாகும்.
குடி என்பது சாதிகளையே குறித்து வந்துள்ளது. தேவநேயப் பாவாணரும் ‘இக்கூற்று ஒரு குறிப் பிட்ட இடம் பற்றியது அன்றிப் பொதுபடக் கூறிய தன்று’ என்று கூறுகின்றார். இதுவும் பொருத்த மானதாகத் தெரியவில்லை. ஆரியப் பண்பாட்டுக் கலப்பு நிகழ்ந்த போது தமிழகத்தில் சாதியும் வர்ண மும் தோன்றிவிட்டன. ‘கட்டில் இழிசினன்’ (புறம்.82), ‘துடி எறியும் புலைய, எறிகோல் கொள் ளும் இழிசின’ (புறம்.267) போன்ற புறநானூற்றுத் தொடர்கள் ‘சாதி இழிவு’ குறித்துக் குறிப்பிடு கின்றன. கணவனை இழந்த பெண்கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டதை ‘நள் இரும் பொய்கை யும் தீயும் ஓரற்றே’ (புறம்.246) என்னும் புறப்பாடல் கூறுகிறது. இதில் பெண்ணே விரும்பி நெருப்பில் விழுந்ததாகப் பொய்யுரையைப் புலவர் கூறியுள் ளார். குழந்தைகளை யானையின் காலில் இட்டு கொல்வதற்கான முயற்சி மேற்கொள்ளப் பட்டதைப் புறநானூற்றுப் பாடல் (புறம்.46) சுட்டிக்காட்டுகிறது.
புறநானூற்றை மறுவாசிப்புச் செய்து கட்டு டைத்துப் பார்த்தால் ‘தமிழர் வரலாற்றின்’ வன்மை, மென்மைகளைத் துல்லியமாக அறிந்து கொள்ளலாம். கருவி, வாகனம், நெருப்பு, உணவு, அணிகலன், தொழில் போன்ற பொருட் பண்பாட்டில் தலைசிறந்து நின்ற தமிழர்கள், சமுதாயப் பண்பாட்டில் தரம் தாழ்ந்து நிற்கின்றனர். மன்னர்கள் ஆரியப் பண்பாட்டிற்கு அடிமையாகி தலை குனிந்து நின்ற காட்சியைப் புறநானூறு காட்டுகிறது. அரசர்கள் போர் வெறி கொண்டவர் களாக இருந்தனர்; குழந்தைகளைக் கொல்ல முயன் றனர். சாதி வேறுபாடும், தொழில் வேறுபாடும் சமுதாயத்தில் ஊடாடி நின்றன. ‘இழிசினர்’ என்று ஒரு பகுதி மக்கள் இழித்துரைக்கப்பட்டனர். பெண் கள் நெருப்பில் இட்டுக் கொல்லப்பட்டனர். இவைகளெல்லாம் அக்காலத் ‘தமிழர் வரலாறு’ மேன்மைக்குரியதாக இல்லை என்பதையே காட்டு கின்றன. எனினும் மலையமான் மக்களை யானைக் காலில் இட்டுக்கொல்ல, கிள்ளி வளவன் முயன்ற போது, அதனைத் தடுத்து நிறுத்தி, மன்னனுக்கு அறிவுரைக் கூறிய கோவூர் கிழாரின் செயல் போற்றுதலுக்குரியதாகும். அதிகாரத்தை எதிர்க்கும் இவருடைய குரலில் மென்மையும் உள்ளடங்கிய தன்மையும் காணப்படுகிறது. ஆயினும் அதி காரத்தை எதிர்க்கும் இத்தகைய குரலே தமிழர் வரலாற்றில் மின்னல் கீற்றாய் ஒளி வீசி நம்பிக்கை யைத் தந்து கொண்டிருக்கிறது எனலாம்.
குறிப்புகள்:
(1) க.ப.அறவாணன், தமிழரின் தாயகம். ப.9.
(2) மேற்படி, ப.11
(3) ப.கிருட்டிணன், தமிழ் நூல்களில் தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு. ப.2.
(4) ம.ரா.போ.குருசாமி, சங்க காலத்திற்கு முன், ப.63.
(5) சான்.எச்.அர்னால்டு, வரலாறு, பிரேம் (மொ.ஆ), ப.20.
(6) அ.கருணானந்தன், வரலாறு என்றால் என்ன, ப.29.
(7) கா.அப்பாத்துரையார், குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு, பக்.93-95.
(8) ஜி.ஜான் சாமுவேல், செம்மொழிகளின் வரிசையில் தமிழ், ப.20.
(9) மேற்கோள், ஜான் மோனகன் - பீட்டர் ஜஸ்ட், சமூக-பண்பாட்டு மானிடவியல். பக்தவச் சல பாரதி, (மொ.ஆ), ப.59.
(10) க.ப.அறவாணன், தமிழர் சிந்தனை: புதிது, ப.21.
(11)ஜான் மோனகன் - பீட்டர் ஜஸ்ட், மு.நூ. ப.93.
(12) ந.சுப்பரமண்யன், சங்க கால வாழ்வியல், ப.319.
(13) தேவநேயப் பாவாணர்,தமிழர் வரலாறு, ப.46.
தமிழர் மாண்பன்று
என வாளாயிருந்த பயனால்
இன்று மற்றவர் கூற நாம் கேட்கும்
நிலை வந்தது.
சான்றுகள் காட்ட
சங்கப் பாடல்கள் கையிருக்க
உம்போல் ஆர்வலர்கள்
புடம் போட்டுக் கூறலாமே!!!!
புறநாநூறு: 37: மாறோக்கத்து நப்பசலை:
"நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த
வேக வெந்திறல் நாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத்து உருமெறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேல்
சினங்கெழு தானைச் செம்பியன் மருக! எனவும்;
பாடலின் குறிப்பில் குறிப்பில் கிள்ளிவளவன் எனக் கொடுத்துள்ளனர்.
புறநாநூறு- 39: மாறோக்கத்து நப்பசலை:
புறவின் அல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்குடைக்
கோல்நிறை துலாஅம் புக்கோன் மருக!"
குறிப்பில் கிள்ளிவளவன் பாட்டில் கலிமான் வளவ எனக் கொடுத்துள்ளனர்.
புறநாநூறு- 43; தாமப்பல்கண்ணன்:
"நிலமிசை வாழ்நர் அலமரல் தீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தங்கிக்;
காலுண வாகச் சுடரொடு கொட்கும்;
அவிர்சடை முனிவரும் மருளக்; கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்;
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதிகண் டஞ்சிச்; சீரைப் புக்க
வரையா ஈகை உரவோன்; மருக
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி;..சிறக்கந ின்
ஆயுள் மிக்குவரும் இன்னீர்க் காவிரி
எக்கர் இட்ட மணலினும் பலவே" எனவும்;
பாடலின் குறிப்பில் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான்; பாட்டில் தேர்வண்கிள்ளி தம்பி எனவும் கொடுத்துள்ளனர்.
புறநாநூறு- 46: கோவூர்க்கிழார்:
"நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே புலனுழுது உண்மார் புண்கண் அஞ்சித்
தமதுபகுத் துண்ணும் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉம் அழாஅல் மறந்த
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புங்கண் நோவுடையர்
கெட்டனை ஆயின்நீ கேட்பது செய்ம்மே" எனவும்;
பாடலின் குறிப்பில் கிள்ளிவளவன் எனக் கொடுத்துள்ளனர்
சிலப்பதிகாரம்:
"குறுநடைப் புறவின் நெடுந்துயர் தீர
எறிதரு பருந்தின் இடும்பை நீங்க
அரிந்துடம்பு இட்டோன் அறந்தரு கோலும்."
சிலப்பதிகாரம்:
"வீங்குநீர் வேலியுலகு ஆண்டு விண்ணவர்கோன்
ஓம்கரணம்காத்த உரவோன் .. உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த சோழன் .. .புகார்நகரம் .. .
புறவுநிறை புக்கு பொன்னுலகம் ஏத்தக்
குறையில் உடம்பரிந்த கொற்றவன்யார்.. . கொற்றவன் முன்வந்த
கறவை முறைசெய்த காவலன்காண் .. .பூம்புகார்
கடவரைகள் ஓர் எட்டும் கண்ணிமையா காண
வடவரைமேல் வாள்வேங்கை ஒற்றினன்யார்.. . திக்கெட்டும்
குடைநிலழில் கொண்டளித்த கொற்றவன்காண்.. .பூம்புகார்"
"அறனறி செங்கோல், மறநெறி நெடுவாள், புறவுநிறை புக்கோன்,
கறவை முறை செய்தோன், பூம்புனல் பழனப் புகார்நகர் வேந்தன்
வீங்குநீர் வேலியுலகு ஆண்டு விண்ணவர்கோன்; என அனைத்துப் பாடல்களும் சோழரைப் புகழ்ந்து பாராட்டுகின்றன. பாடலின் குறிப்புக்களும் பாடலில் இடம்பெற்ற பெயர்களும் பாடல்பெற்றோனின ் பெயரும் ஒரே போல இல்லை.
வரலாற்றை மறைக்கவும் மாற்றவும் சிதைக்கவும் செய்துள்ளனர் எனத் தெரிகிறது. எப்படியாயினும் அனைத்திலும் ஒரே வரலாறுதான் வெளிப்பட்டுள்ளத ு.
சிலப்பதிகாரம் கொடுக்கும் தகவலின்படி; சோழனின் கறவைமுறைசெய்த வரலாறும்; புறாவின் அல்லல் தீர்த்த வரலாறும் மிகநீண்ட வரலாற்றை அடிப்படையாகக் கொண்டவை. இந்த உண்மை வரலாற்றை எவருமே வெளிப்படுத்தவில ்லை. பழந்தமிழ்ப்பாடல ்களில் படிமங்களாகவே வரலாறு வெளிப்படுத்தப்ப ட்டுள்ளது. புராணவடிவிலும் வெளிப்பட்டுள்ளன . ஆனால் அவையெல்லாம் இயற்கைக்கும் இயல்புக்கும் ஏற்கத்தக்கனவாக இருக்காது. நம்மவர்களுக்குத ்தான் புராணங்கள் என்றால் அப்டியே ஏற்றுக்கொள்ளும ் இயல்பு வளர்ந்து படிந்துவிட்டதே. எவற்றையும் அறிவியலின்படி சிந்திப்பதைத் தொலைத்துவிட்டத ால் வரலாற்றையும் தொலைத்துவிட்டே ாம்.
சீதையும் திரௌபதியும் பெண்கள் அல்ல; நாடுகள் என்றுசொன்னால் அவற்றை ஏற்கமாட்டோம். ஆனால் சீதை தனது புனிதத்தை 'அக்னிப்பிரவேசம ்' செய்து உறுதிப்படுத்தின ாள் என்று எழுதினால் அப்படியே ஏற்றுக்கொள்வோ ம். சீதை என்பது சோழநாட்டை ஆட்சிசெய்யும் மன்னன் அணிந்துகொள்ளவே ண்டிய பொன்னால் செய்யப்பட்ட ஆரம். ராமனான கரிகால் சோழனைத் தண்டித்து நாடுகடத்தியதால் 12 ஆண்டுகளுக்குச் செழியனிடம் ஒப்படைக்கப்பட்ட து. 12 ஆண்டுகளுக்குப் பிறகு அதனைத் திரும்ப ஒப்படைத்த செழியன்; செங்குட்டுவனின் தந்தை மாறீசனின் சூழ்ச்சிக்குப் பலியாகி; இருவரும் சேர்ந்து அனைத்து நாடுகளையும் ஆட்சிசெய்வதற்கா ன பிற அரசர்களின் மாலைகளையும் பொன் ஆரங்களையும் கள்வரைப் போலக் கவர்ந்து சென்றனர். செங்குட்டுவனான அஞ்சனையின் மகனும் இராமனும் இராவண செழியனை அடக்கிக் கைப்பற்றிவந்து அணிந்து ஆட்சிசெய்ய முயன்றபோது 12 ஆண்டுகற்குப் பிறகும் இராவணிடம் இருந்ததால் ஆரம் கறைப்பட்டுள்ளது என ஒருவன் குறைகூறியதால் மீண்டும் நெருப்பில் இட்டுப் புதுப்பிக்கப்பட ்டதையே படிமவடிவில் 'அக்னிப்பிரவேசம ்' என இராமாயணம் சுவையுடன் வெளிப்படுத்துகி றது.
இதேபோன்றதுதான் திரௌபதியின் மாபாரதமும். இந்நிலை தோன்றக் காரணத்தைத் தமிழ்ப் பாடல்களில் விரிவாக ஆய்வுசெய்தால் வரலாறு வெளிப்பட்டுவிடு ம்.
இராமாயணம்- பாலகாண்டம்; சருக்கம் 36: சிவனுக்கும் பார்வதிக்கும் பிள்ளை பிறந்தால் அப்பிள்ளையை எவன் பொறுப்பான் என பிரம்மா முதலான தேவர்கள் அஞ்சி சிவனிடம் "உமக்குப்பிள்ளை பிறந்தால் உலகங்கள் தாங்கமாட்டா" என உரைத்தனர்.பரிபா டல்௫:
"பிறந்த ஞான்றே நின்னை உட்கிச்
சிறந்தோர் அஞ்சிய சீருடை யோயே .. ." எனச் செங்குட்டுவனின் தந்தையால் அடித்து அறுபட்ட அறுமுகம் ஒன்றுகூட்டப்பட் டவனே சம்முகம்; ஆயினும் சேஎய் முகம் குரங்குமுக வடிவில் அமைந்ததோ? இப்பாடலில் பல வரலாற்றுத் தகவல்கள் நீக்கப்பட்டுள்ள ன. சருக்கம் 37: சிவன் வீரியத்தை நழுவவிட்டதால் உண்டானபிள்ளையை ஸ்கந்தன் எனவும் கார்த்திகேயன் எனவும் தேவர் அழைத்தனர் என இராமாயணம் குறிப்பிடுகிறது .
"பெரும்பெயர் முருக! நிற்பயந்த ஞான்றே
அரிதுஅமர் சிறப்பின் அமரர்செல் வந்தன்
எரியுமிழ் வச்சிரம்கொண்டு இகந்துவந்து எறிந்தெ
அறுவேறு துணியும் அறுவர் ஆகிய
ஒருவனே வாழி ஒங்குவிறல் சேஎய்!" எனப் பரிபாடல்௫; குறிப்பிடுவதையு ம் இராமாயணத்துடன் சேர்த்துச் செங்குட்டுவனைத் தாக்கி அழிக்க முயன்ற அவனது தந்தையான இந்திரனைக் காட்டுகிறது.
மாபாரதத்தின் வரலாறும் இத்தகையதே. அதனையும் தொல்தமிழ்ப் பாடல்கள் விரிவாகக் குறிப்பிடுகின்ற ன.
கலித்தொகை-பாலை க்கலிப் பாடல் 25:
"வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற
முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால்;
ஐவரென்று உலகேத்தும் அரசர்கள் அகத்தரா;
கைபுனை அரக்குஇல்லைக் கதலெரி சூழ்ந்தாங்கு
கலிதிகழ் கடாஅத்த கடும்களிறு அகத்தவா
முளிகழை உயர்மலை முற்றிய முழங்குஅழல்
ஒள்ளுரு அரக்குஇல்லை வளிமகன் உடைத்துத்தன்
உள்ளத்துக் கிளைகளொடு உயப்போகு வான்போல
.. .. சிறப்புச்செய் துழைய்யராப் புகழ்பேத்தி மற்றவர்
புறக்கொடையே பழிதூற்றும் புல்லியார் தொடர்புபோல் ..." என்னும் பாடல் சந்திரகொற்றனுக ்கும் சத்தியவதிக்கும் நேர்ந்த புணர்ப்பினால் அல்லலுற்றோரைக் குறிப்பிடுகிறது .
சேத்கிழாரின் பெரியபுராணத்தில்:
"மல்லல் ஞாலம் புரக்கின்றார்; மணிமா மவுலி புனைவதற்குத்
தில்லைவா ழந்தணர் தமைவேண்ட; அவரும் 'செம்பியர் தம்
தொல்லை நீடுங் குலமுதலோர்க் கன்றிச் சூட்டோம் முடி' யென்று
நல்காராகிச் சேரலந்தன் மலைநா டனைய நண்ணுவார்"
"ஒருமையுரிமை தில்லைவா ழந்தணர்கள் தம்மில் ஒருகுடியை
பெருமைமுடியை அருமைபுரி காவல்பேணும் படியிருத்தி
இருமைமரபுந் தூயவர்தாஞ் சேரர்நாட்டில் எய்தியபின்
வருமையுறவால் மனந்தளர்ந்து மன்றுளாடும் கழல்பணிவார்" என; தில்லைவாழ் தமிழ் அந்தணரிடம் ஒப்படைக்கப்பட்ட மணிமுடியத் தனக்குச் சூட்டும்படி வற்புறுத்திய செங்குட்டுவனின் தந்தையின் கோரிக்கையை மறுத்ததால் அந்தணர்கள் தில்லையிலிருந்த ு நீக்கப்பட்டதைக் குறிப்பிடுகிறது .
அகநாநூறு 13:
". ..தன்கடற் பிறந்த முத்தின் ஆரமும்,
முனைதிரை கொடுக்கும் துப்பின் தண்மலைத்
தெறலரு மரபின் கடவுற் பேணிக்
குறவர் தந்த சந்தின் ஆரமும்;
இருபேர் ஆரமும் எழில்பெற அணியும்
திருவீழ் மார்பின் தென்னவன் மறவன்(?)
குழியில் கொண்ட மராஅ யானை
மொழியின் உணர்த்தும் சிறுவரை அல்லது
வரைநிலை இன்றி இரவலர்க்கு ஈயும்
வள்வாய் அம்பின் கோடைப் பொருநன்
பண்ணி தையீய பயம்கெவேள்வியின ்
விழுமிது நிகழ்விது. .." என்னும் பாடல் சோழநாட்டை ஆட்சிசெய்வதற்கா ன ஆரம் செழியனிடம் ஒப்படைக்கப்பட்ட தைக் குறிப்பிடுகிறது .
கபிலன் புறநாநூறு 201ல் உணர்த்திய துவரைப்பகுதியும ், ஆரம்- சோழநாடு- சீதையும் இடம்பெற்றுள்ளன:
சிலப்பதிகாரம்:
"கோவா மலை ஆரம், கோத்த கடல் ஆரம் தேவர் கோன் பூணாரம், தென்னர்கோன் மார்பினவே !
தேவர்கோன் பூணாரம் பூண்டான், செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருத்தொசித்தா ன் என்பரால்;
பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் மன்னன் வளவன் மதிற்புகார் வாள்வேந்தன்
பொன்னம் திகிரிப் பொருபடையான் என்பரால்; .. .. " "செங்கண் ஆயிரத்தோன் திறல்விளங்கு ஆரம்;
பொங்கொலி மார்பிற் பூண்டோன் வாழி" -என இந்திர ஆரம் கரிகாலிட மிருந்து; 'தென்னர் கோன்' செழியனின் மார்பிற்குச் சென்றதைக் குறிப்பிடுகிறது .
புறநாநூறு: 378:
" .. ..விரல்செறி மரபின செவிதொடக் குநரும்
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
கடுந்தெரல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை .. .." என மாறிசனும் இராவண செழியனும் கவர்ந்து சென்றபோது சிந்தச் சிதற ஓடியதையும்; பரிசிலாகக் கொடுக்கத்தகாத புனிதமானவற்றை ஒரு புலவனுக்குப் பரிசிலாலக் கொடுத்துவிட்டு ஓடியதையும் குறிப்பிடுகிறது .
செங்குட்டுவன் பிறப்பதற்கு முன்னர் கன்னியாக இருந்த கரிகால்சோழனின் தங்கையை ஒருவன் புணர்ந்து கெடுத்ததோடு அப்பெண்ணை மணக்க மறுத்துவிட்டான் என்பதை ஸ்ரீகந்தமகா புராணம் 7ஆம் அத்தியாயத்தில் தெளிவாகக் கொடுத்துள்ளது. மேலும் குழந்தை பிறக்காமல் தடுக்கவும் முயன்றுள்ளான். குழந்தையான செங்குட்டுவன் பிறந்த பின்னர்; குழந்தையையும் அழிக்க முயன்றுள்ளான். ஆயினும் குழந்தையின் உயிர் பாதுகாக்கப்பட்ட ுவிட்டது. இத்துயரை வெளிப்படுத்தி வழக்குரைத்த பெண்ணே கறவையாகக் காட்டப்பட்டுள்ளாள்.
இந்தக் கொடுமையைக் கேட்ட சோழன்; அப்பெண்ணைக் கெடுத்தவனின் பிற குழந்தைகளைக் கொல்லும்படி ஆணையிட்டு அக்குழந்தைகளும் யானையின் கால்களில் மிதிபடப்போவதாக க் காட்டப்பட்டுள்ள து. இதுவும் ஒரு படிமமே. புறநாநூறு 39ஆம் பாடலில் இடம்பெறும் கறையடியானை கரிகால்சோழனைக் குறிக்கிறது. கரிகால்சோழனைப் பெருங்கையானை எனப் பல பாடல்கள் குறிப்பிடுகின்ற ன. கரிகால்சோழனே திருமாலாகவும் காட்டப்படுகிறான ். அவனது வாகனமாகக் காட்டப்படும் பருந்தும் ஒரு படிமமே. பருந்து என்பது செங்குட்டுவனையே குறிக்கும். தனது மாமன் கரிகால்சோழனின் துணையுடன் தனது தந்தையையே எதிர்த்து வென்று அவனை அழிக்கும் நிலை ஏற்பட்டபோது சந்திரகொற்றனை மணந்த ஹெலன் என்னும் சத்தியவதியே சோழனிடம் முறையிட்டுத் தனக்குப் பாதுகாப்புக் கொடுக்கும்படி சோழனிடம் வேண்டி முறையிட்ட புறாவாக இடம்பெறுகிறாள். இப்பெண்ணின் மகனே செங்குட்டுவனின் தந்தையும் கரிகால்சோழனின் தங்கையைக் கெடுத்துக் கருவுறச் செய்தவனும் ஆவான். அப்பெண்ணின் கோரிக்கை ஏற்கப்பட்டு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டத ு.
சந்திரகொற்றனின ் தங்கையே கரிகால்சோழனின் தாய். அனைவருமே சொந்தங்கள்தான் . அதனால்தான் அர்ச்சுனனான செங்குட்டுவனால் தனது தந்தையின் உறவினரைப் போர்க்களத்தில் அழிக்க முதலில் மறுக்கிறான். பின்னர் கரவேலன் கண்ணனின் அறிவுரைகளை ஏற்றுப் போரிடுகிறான்.
புறநாநூறு- 294:
"வெண்குடை மதியம் மேல்நின்று திகழ்தரக்
கண்கூடு இறுத்த கடல்மருள் பாசரைக்
குமரிப் படைதழீஇய கூற்றுவினை ஆடவர்
தமர்பிறர் அறியா அமர்மயங்கு அழுவத்து
இறையும் பெயரும் தோற்றி 'நுமருள்
நால்முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு'எனப்
போர்மலைந்து ஒருசிறை நிற்ப; யாவரும்
அரவுமிழ் மணியின் குறுகார்
நிரைதார் மார்பின்நின் கேள்வனைப் பிறரே" என செங்குட்டுவனைக் கரவேலனும் கரிகாலனும் பாதுகாப்பதால் எவரும்நெருங்கமு டியாது எனக் குறிப்பிடுகிறது . வஞ்சிக்கோந் அர்ச்சுனந்செங்க ுட்டுவனின் மனைவி, கரிகால்வளவனின் மகள் வல்லியைப் பெருந்தலைச்சாத் தந் கரவேலன் அமைதிப்படுத்துக ிறான்.
பாரத நாட்டின் ஆட்சியைப் பெற; பல்வேறு குழுக்கள் போட்டியிட்டுப் போரும் பூசலுமாக நெடுங்காலம் இருந்தது. அவர்களுள் சந்திரகொற்றனுக ்கும் முதல் மனைவிக்கும் பிறந்த கரவேலன்= கண்ணனின் கூட்டம் ஒன்று. அடுத்துத் தாய்வழிச் சமுதாயமுறையில் ஆட்சியைப் பெறமுயன்ற சந்திரகொற்றனின ் தங்கையை மணந்த சோழன் சேத்சென்னியின் கூட்டம் ஒன்று. அடுத்துச் சந்திரகொற்றனை இரண்டாவதாக ஒரு ஒப்பந்தத்துடன் மணந்துகொண்ட ஹெலன்= சத்தியவதிக்குப் பிறந்தோரின் கூட்டம். இந்த ஒப்பந்தப்படி சந்திரகொற்றனுக ்கும் சத்தியவதிக்கும் பிறக்கும் குழந்தைகளே ஆட்சியுரிமையைப் பெறமுடியும் என்பதாகும். மேலும் இரண்டு கூட்டங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று சத்தியவதியின் தாயின் கணவனான பிரகத்தன். இந்தப் பிரகத்தனே ஆரியவரசன் பிரகத்தன் எனக் கபிலரின் குறிஞ்சிப்பாட்ட ின் அடிக்குறிப்பில் இடம்பெற்றவன். பிரகத்தனின் மனைவிக்கும் அலெக்சாந்தனுக்க ும் பிறந்த பெண்ணே ஹெலன் என்னும் சத்தியவதி. எனவே அலெக்சாந்தனைச் சார்ந்தோரும் ஆட்சியைக் கைப்பற்ற முயன்றுள்ளனர். மேலும் ஒரு கூட்டமும் உள்ளது. அது சத்திவதியின் திருமணத்துக்கு முன்னரே கன்னியாக இருந்தபோது பராசரனை இலங்கைத் தீவில் புணர்ந்ததால் பிறந்த வியாசனின் கூட்டம். இப்படியாக இவர்களது வரலாறு நம்மை வேத இதிகாச புராணங்களுக்குள ் கொண்டுபோய் நிற்கவைத்துவிடு கிறது. இதிலிருந்து விடுபட்டு உண்மை வரலாற்றை இன்றுவரை எவரும் வெளிப்படுத்தவில ்லை.
இவ் வரலாறு குறித்து ஒரு சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள ்ளன. அவற்றைக் காண விரும்புவோர் கோக்லெ செஅர்ச் ல் சென்று ஹ்ட்ட்ப்://ந்ஹம ்பிக்கை-குருடு. ப்லொக்ச்பொட்.சொ ம் மற்றும் ஹ்ட்ட்ப்://ந்ஹம ்பிக்கை-குருடு. ப்லொக்ச்பொட்.இன ் ஆகிய தளங்களில் ஏதாவது ஒன்றில் விரிவான வரலாற்றைக் காணலாம்.
பழந்தமிழ்ப் பாடல்களில் இந்தியத் தமிழரின் வரலாறு
என்ற தலைப்பில் வெளியிடவும்
RSS feed for comments to this post