என்னுடைய தங்கைக்கு வயது 22. இன்னும் திருமணம் நடக்கவில்லை. அவள் ஓர் ஆங்கில மருத்துவமனையில் தங்கிச் சிகிச்சை பெற்றுவந்த உறவினரைச் சந்திக்க போனபோது... தற்செயலாக தனக்கும் ரத்தப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறாள். கொலஸ்டிரால் 245ம்ஞ் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அவள் ஒல்லியாகத்தான் இருக்கிறாள். ‘கொலஸ்டிரால்’ எப்படி வந்தது என்றே தெரியவில்லை. அவளை என்ன வைத்தியம் பார்க்கச் சொல்லலாம்? - K . நிறைமதி, ஈரோடு. 

     மனித உடலில் ‘கொலஸ்டிரால்’ எண்ணற்ற பணிகளைத் செய்துவருகிறது.அது மூளைக்கும், நரம்பிற்கும் மிக அவசியம். வைட்டமின்D தயாரிக்கவும், உடலிலுள்ள நஞ்சை முறிக்கவும் பயன்படுகிறது. கொலஸ்டிராலில் இருந்துதான் ஆண், பெண் பாலின இயக்குநீர்கள் (Sex Harmones) உருவாகின்றன.

     ‘கொலஸ்டிரால்’ எல்லோரின் உடலிலும் குறிப்பிட்டளவு இருக்கவேண்டிய ஜீவாதாரப்      பொருள். அதன்அளவு... கூடினாலும் குறைந்தாலும்தான் பிரச்சினை வருகிறது. நீங்கள் நினைப்பது போல் ‘கொலஸ்டிரால்’ உடல் பருமனாக உள்ளவர்களுக்கு மட்டுமே வரும் என்பது உண்மையல்ல. ‘கொலஸ்டிரால்’ குறைந்தால் பலவித மனநோய்கள், தற்கொலை செய்யத்தூண்டும் மனநிலை போன்ற கோளாறுகள் ஏற்படக்கூடும். ‘கொலஸ்டிரால்’ அதிகரித்தால் இரத்த அழுத்தம், இருதய அடைப்பு உள்ளிட்ட பல நோய்கள் உண்டாகக்கூடும்.முகப்பருக்கள் முதல் இருதய ரத்தநாள நோய்கள் வரை பல சிக்கலான நோய்களுக்கு அடிப்படைக் காரணமாக அமைவது கொலஸ்டிரால்தான்.

உங்கள் தங்கையை நார்ச்சத்துள்ள கீரை, காய்கள், உணவுகள், காரட், ஆப்பிள், பீன்ஸ், பூண்டு, வெங்காயம் சாப்பிடச்செல்லுங்கள். ஸ்கிப்பிங் அல்லது எளிய உடற்பயிற்சி செய்யவேண்டும். மீன் உணவு வாரம் ஓரிருமுறை சாப்பிடலாம். அதிக மாவு & சர்க்கரைப் பொருட்களைக் கல்லீரல் கொழுப்பாக மாற்றிவிடும். இதனால் ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்துவிடும். எண்ணெய் பண்டங்கள், பேக்கரி பண்டங்கள் தவிர்க்கவும். ஹோமியோ            பதி மருத்துவரை அணுகி ஆலோசணை பெற்று விரைவில் நலமடையலாம். கொலஸ்டிராலை விரைவில் குறைப்பதற்கு ஹோமியோபதியில் சிறந்த மருந்துகள் உள்ளன.

நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். என்னுடன் வேலை பார்க்கும் 12 பேர்களில் 4 பேர்களுக்கு சர்க்கரை நோய் உள்ளது. 3 பேர் ஆங்கில மருந்து மாத்திரைகளும் ஒருவர் மட்டும் ஹோமியோபதி மருந்தும் சாப்பிடுகின்றனர். ஹோமியோபதி மருந்து சாப்பிடுபவர் வயதில் மூத்தவராக இருந்தாலும், பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார். மற்றவர்கள் அவ்வப்போது ஏதாவது உடல் நலப்பிரச்சினைகள் ஏற்படுவதாகக் கூறுகின்றனர். அவர்களின் முகம், கண்கள், தோல் போன்றவற்றில் ஏதோ சோர்வும், வறட்சியும் உள்ள மாற்றம் காணப்படுகிறது. இந்த சர்க்கரைநோய் பற்றிய முக்கியமான விவரங்கள் ஆலோசனைகளைக் கூறுங்கள் டாக்டர். - இ. மகேஷ், கோவை.

     பொதுவாக உடலுழைப்பு, உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை, அதிகமாக உணவு உண்ணுதல் அதிலும் கண்ட கண்ட உணவுகளை உண்ணுதல், இனிப்பு வகைகளை அளவுக்கதிகமாக உண்ணுதல், உடல் எடை அதிகரித்தல், எதிலும் தேவையற்ற பதட்டம், பரபரப்பு, மனஅழுததம், அடிக்கடி உணர்ச்சி வசப்படுதல் போன்ற காரணங்களாலும், கருத்தடைக்கும், ஆஸ்துமாவிற்கும் பயன்படுத்தும் சில ஆங்கில மருந்துகளாலும், Cortisone மற்றும் Steroid மாத்திரைகளாலும் சர்க்கரை நோய் வரலாம். பரம்பரையாகவும் வரலாம்.

இந்தியாவில் சுமார் 4 கோடிக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். வசதியானவர்களுக்கு நிறைய சாப்பிடுவதாலும் உடலுழைப்பே இல்லாததாலும் இந்நோய் வருகிறது. ஏழைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைவால் வருகிறது (Mal nitrous Diabetes) - இது தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் அதிகம். சரியான உணவு அமையாமல் கணையத்தில் கல் சேர்ந்து, இன்சுலின்சுரப்பு குறைந்து விடுவதே காரணம்.

நீரிழிவில் கண் விழித்திரை பாதிப்பு ஏற்பட்டு பார்வையே பறிபோகிற ஆபத்து உள்ளது. பார்வை இழப்பவர்களில் 65% பேர் இந்த Diabetic Retinopathy என்ற நோயினால்தான் இழக்கிறார்கள். கண்ணுக்குள் ரத்தக் கசிவு ஏற்பட்டு பார்வை மங்கிக்கொண்டே போய்.... ஒரு கட்டத்தில் பார்வை பறிபோகிறது.

ரத்தத்தில் சர்க்கரை கலப்பதன் காரணமாக ரத்தக் குழாய்களும் பழுதடைகின்றன. இருதய வீக்கமும், இருதயத் தாக்கும் ஏற்பட வாய்ப்புண்டு.

சர்க்கரை நோயாளிகளில் 25% பேர்களுக்கு சிறுநீரகம் மோசமாகப் பாதிக்கப்படுகிறது. சிறுநீரில் ஆல்புமின் இருப்பதை வைத்தும், ரத்தத்தில் Urea,Creatinine அளவு அதிகரிப்பதை வைத்தும், அல்லது ஆரம்ப கட்டத்திலேயே Microalbuminurea என்ற பரிசோதனை மூலமும் இதனைக் கண்டுபிடித்து விடமுடிகிறது. ஆனாலும் ஆங்கில மருத்துவத்தில் DIALYSIS என்ற செயற்கை முறை ரத்த சுத்திகரிப்பு எனும் சித்திரவதைச் சிகிச்சையைத் தவிர வேறு வழியில்லை. அதுவும் சாதாரண மக்களால் (அரசு மருத்துவமனைகளில் Dialysis வசதி இல்லை என்பதால்) தனியார் மருத்துவமனைகளின் கிடுக்கிப்பிடி வசூலுக்கு ஈடுகொடுத்து தொடர் சிகிச்சை பெறமுடியாது.

     நீரிழிவு நோயில் பரவலாகக் காணப்படும் மற்றொரு முக்கிய பிரச்சினை கால்களிலுள்ள ரத்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்து, உணர்ச்சிகள் (Neuropathy) பாதிக்கப்படும்.காயம் ஏற்பட்டால் விரைவில் ஆறாது. சிறுபுண்கூட சீழ்பிடித்து பெரிதாகி ஆங்கில மருத்துவ மேற் பார்வையில் இருந்த போதிலும் காலையே துண்டித்து விடுமளவு போய்விடுகிறது.

     நீரிழிவு நோயாளிகளுக்கு இரண்டு முக்கிய ஆலோசனைகளை முன் வைக்கிறோம்.

1. எந்தச் சூழ்நிலையிலும் விருந்து போல அதிகம் (Feasting) உண்ணாதீர்கள்; எந்த நாளிலும் பட்டினியோ, விரதமோ (Fasting)இருக்காதீர்கள்.Fasting & Feasting இரண்டும் வேண்டாம்.      கொழுப்பு மற்றும் இனிப்பு உள்ள உணவுப் பொருட்களைத் தவிருங்கள்.

2. எளிய உடற்பயிற்சி, யோகா பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இவற்றுடன் அனுபவமிக்க மூலிகை மருத்துவர், சித்தா, ஆயுர்வேத மருத்துவரிடம் சிகிச்சை பெறலாம். நீரிழிவை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், கண் முதல் பாதம் வரை ஏற்படும் பல பாதக விளைவுகளைத் தவிர்க்கவும். ஹோமியோபதி, அக்குப்பங்சர் சிகிச்சை எடுக்கலாம். இச்சிகிச்சையில் நீரிழிவு நோய் கட்டுப்படுவதோடு, கண்பாதிப்பு, இருதய-ரத்த நாள பாதிப்பு, பாத எரிச்சல் - மதமதப்பு - உணர்ச்சிக் குறைபாடு போன்றவற்றில் பெருமளவு நிவாரணம் பெறமுடியும். சிறுநீரகம் செயலிழந்த நிலையில் Dialysis இல்லாமல் Urea,creatinine அளவுகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரவும், சிறுநீரக செயல்திறனை மேம்படுத்தவும் ஹோமியோபதி மருத்துவம் மூலம் நோயாளியின் வாழ்நாளை நீட்டிக்கவும் முடியும்.

என் தோழி தன் வீட்டுப் பிரச்சினைகளை தன் உடல்நலப் பிரச்சினைகளை என்னிடமோ மற்றவர்களிடமோ மனம் திறந்து பேசுவதேயில்லை. அவள் உம்மணாம்மூஞ்சி கேரக்டரும் இல்லை. கலகலப் பேர்வழி. ஜாலியாகப் பேசுவாள்; பாடுவாள்; ஜோக் அடிப்பாள். ஆனால் அவளது      எந்தப் பிரச்சினையையும் நெருக்கமான தோழிகளிடம் கூடப் பேசமாட்டாள். ஒரு முறை கடுமையான சுரத்தில் விடுதி அறையில் படுத்திருந்தாள். யார் விசாரித்தாலும் தன் உடல்நிலை பற்றி எதுவும் பேசாமல்... வழக்கம்போல சினிமா பற்றியும் வேறுவிஷயங்கள் பற்றியும் பேசிக் கொண்டிருந்தாள். இவள் என்ன அதிசயப் பிறவியா? அல்லது இது ஒரு மனநோயா?

 -M.சுபைதா, வேலூர். 

 “உள்ளே அழுகிறேன்; வெளியே சிரிக்கிறேன

 நல்ல வேஷந்தான் ...வெளுத்து வாங்குறேன்” என்ற சினிமாப் பாடல் வரிகள் உங்கள் தோழிக்குப் பொருந்தும். இது போன்ற மனநிலை உள்ளவர்களுக்கு பிரிட்டனைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பாச் அவர்கள் கண்டறிந்த மலர்   மருந்துகளில் ஒன்றான ‘Agrimony’ என்ற மலர் மருந்துதான் மிகவும் ஏற்றது.

     அக்ரிமோனி நபர்கள் வெளியில் மட்டும்தான் மகிழ்ச்சியாக இருப்பார்கள்; உள்ளுக்குள் ரணம் இருக்கும்; காட்டிக் கொள்ளவே மாட்டார்கள். ‘இடுக்கண் வருங்கால் நகுக’ என்ற வள்ளுவப் பெருந்தகை வார்த்தைப்படி வாழ்பவர்கள். இவர்களுக்கு நோய் வந்தால் நோயைக் கூட கேலி செய்து ஜாலியாகப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

     இத்தகைய மனநிலை உள்ளவர்களுக்கு ‘அக்ரிமோனி’ என்ற மலர்மருந்தை (மாத்திரை வடிவில்) தினம் 3 வேளை வீதம் ஓரிரு மாதம் கொடுத்தால் போதும். நல்ல மாற்றம் பிறக்கும். மனத் தடைகள் நீங்கும். இனி உண்மையான மகிழ்ச்சி ஏற்படும். மகிழ்ச்சியாக இருப்பதுபோல நடிக்க மாட்டார்கள். பிரச்சினைகளை திறனுடன் எதிர்கொள்வார்கள். மனம்தான் மனித உடலின் பல்வேறு முக்கிய நோய்களுக்குக் காரணம் என்பதை தெளிவாக நிரூபிக்கும் மருத்துவமே பாச் மலர்மருத்துவம்.

சில வருடங்களாக மலச்சிக்கலால் பெரும் அவதிக்கு ஆளாகி இருக்கிறேன். மலமிளக்கி மாத்திரைகள் சாப்பிடாமல் மலம் கழிக்க இயலாது. இடையிடையே எனிமாகொடுக்கவேண்டியதும் ஏற்படும். மாற்றுமருத்துவங்களில் நல்ல நிவாரணம் கிடைக்குமா?

 -M.R.சோலையப்பன், மயிலாடுதுறை. 

சாப்பிட்ட உணவுப் பொருட்கள் நன்கு செரிக்கப்பட்டு அதன் கழிவுப் பொருட்கள் 24 மணி நேரத்திற்குள் மலமாக வெளியேறிவிடவேண்டும். இல்லையேல் சிக்கல்தான். உடலின் பல பாகங்களில் ஏற்படும் சிக்கல்கள் இந்த ஒரு சிக்கல் தீர்ந்தால் குறைந்து மறைந்துவிட வாய்ப்புள்ளது. 

உணவு மெல்லப்பட்டு உமிழ்நீருடன் கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. பின் இரைப்பையிலுள்ள அமிலங்களுடன் நன்கு கலக்கப்பட்டு சிறுகுடலை நோக்கிப் பயணிக்கிறது. இரைப்பைக்குள் அமிலத் தன்மை அதிகமிருந்தால் ஜீரணம் பாதிக்கிறது. Acidity நெஞ்சு எரிச்சல் ஏற்படுகிறது.

     சிறுகுடலுக்குள் வந்துவிட்ட உணவு அமிலத்தன்மை உள்ளதாக இருப்பினும் கல்லீரலிலிருந்து பித்தநீரும், கணையத்திலிருந்து கணைய நீரும் (இவை காரத் தன்மை உள்ளவை) சிறுகுடலிலேயே சுரக்கும் என்சைம்களும் கலந்து உணவு அமிலத்தன்மை இழந்து நடுநிலைத் தன்மை அடையும். சிறுகுடலில் உணவின் சத்துக்கள் உட்கிரகிக்கப்படும்.மீதமுள்ள கழிவுகள் / சக்கைப் பொருட்கள் பெருங்குடலுக்குள் அனுப்பப்படுகிறது.

பெருங்குடலில் கழிவுகளிலுள்ள நீர் உறிஞ்சப்பட்டு மலம் மட்டும் மலக்குடல் வழியே வெளியேற்றப்படுகிறது.

     மனித உடலின் ஜீரணம் வாய், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் என்ற 4 இடங்களில் 4 நிலைகளில் நடைபெறுகின்றன. இவற்றில் எந்த இடத்தில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் ஜீரணம் பாதிக்கப்படும் - மலச்சிக்கல் ஏற்படும்.

வேறுசில முக்கிய விஷயங்களும் கவனத்திற்கொள்ள வேண்டும். தேவையானளவு குடிநீர் அருந்தாமல் மலச்சிக்கல் ஏற்படுவதுண்டு. காலை வெறும் வயிற்றில் ஓரிரு டம்ளர் நீர் அருந்தலாம். மாறாக எந்திரமயமாக தினம் காலை 2 லிட்டர் நீர் அருந்துவது உடலியற்கைக்குப் புறம்பானது; இதன் மூலம் சிறுநீரகங்கள் விரைவில் திறன் குறையும்; பாதிக்கப்படும். நரம்புகளைத் தூண்டச் செய்யும் செயல்களாலும் மிகுந்த செக்ஸ் ஈடுபாடுகள்       காரணமாகவும், மலச்சிக்கல் ஏற்படலாம். கேக், பிஸ்கட், ஜாம், கிரீம், துரித உணவுகள், டின் உணவுகள் போன்றவற்றில் நார்ச்சத்து ஏதுமில்லை. நார்ச்சத்து இல்லாத எந்த உணவானாலும் மலச்சிக்கலில் முடிவது திண்ணம். கீரை, காய்கறி, பழங்களில் நார்ச்சத்து போதுமானளவு உள்ளது.

வயதிற்கேற்ற உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, யோகாசனப் பயிற்சிகள் செய்வது ஜீரணத்தை மேம்படுத்தும்; மலச்சிக்கலைக் குறைக்கும.மளமிளக்கி மாத்திரைகளால் குடல் பலவீனம் ஏற்படும். இதனால் உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் ஆற்றல் குறைந்துவிடும். கல்வி, நாகரிகம் என்ற பெயரிலும்,    அலோபதி மருத்துவத்தின் தவறான திசைவழிகளாலும் நம் சமுதாயம் மலச்சிக்கல் போன்ற சாதாரண வியாதிகளைத் தீர்க்கும் எளிய வழி முறைகளைக் கூட சிந்தித்துக் கடைப்பிடிக்க முடியாமல் திணறுவது வேதனைக்குரியது.

நாட்டு வாழைப்பழம் மட்டுமின்றி, விதைகளுடன் கொய்யாப்பழமும், அத்திப்பழமும், பப்பாளி பழமும் கூட மலச்சிக்கலைத் தீர்க்கும் பழங்களாகும். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் மூன்றையும் தூளாக்கி கலந்த திரிபலா சூரணம் மலச்சிக்கலைத் தீர்க்கும். மலச்சிக்கலுக்கு ‘கொள்ளு’ சிறந்தது. சட்னியாக, கஞ்சியாகச் சாப்பிட்டு வந்தால் குணம் கிடைக்கும்.

     ஹோமியோபதியில் சல்பர், நக்ஸ்வாமிகா, பிளம்பம், ஓபியம், அலுமினா, பிரையோனியா, நேட்ரம்மூர், லைகோபோடியம், கிராஃபைடிஸ், பிளாட்டினா, சிலிகா போன்ற பல மருந்துகள் மலச்சிக்கலுக்குப் பயன்படுகின்றன. தகுதிமிக்க அனுபவமிக்க ஹோமியோபதி மருத்துவர்களை அணுகி ஆலோசனை மற்றும் சிகிச்சை பெற்று முழுதீர்வு காண்க.

எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். இரண்டாவது மகளின் வயது 13. இன்னும் வயதுக்கு வரவில்லை. சரியாகச் சாப்பிடுவதில்லை. மிகவும் மெலிந்து ஒல்லியாக இருக்கிறாள். சிலநாட்களில் சுத்தமாகப் பசியே இல்லை என்று கூறுவிடுவாள். அவளுக்குப் பசி எடுக்கவும், ஓரளவாவது எடை அதிகரிக்கவும் ஏதேனும் மருந்துகள் கூறுங்கள்! -M.பவித்ரா, சூளைமேடு. 

சகோதரியே! தங்கள் கவலை அர்த்தமுள்ளது. Alafalfa,Gentiana,Sulphur,Nuxvomica,Alumina போன்ற ஹோமியோபதி மருந்துகள் ஜீரண மண்டலச் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்திப் பசியைத் தூண்டும். Calcarea Carb,Calcarea Phos,Bacillinum,Pulsatilla,Oleum Jecoris போன்ற மேலும் சில ஹோமியோ மருந்துகள் பசியைத் தூண்டுவதற்கும், உடல் எடை அதிகரிப்பதற்கும் தங்கள் மகளுக்கு நிச்சயம் உதவும். அருகிலுள்ள ஹோமியோபதி நிபுணரின் ஆலோசனை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் மருந்துகள் அளிக்கவேண்டும். ‘Alfalfa’ எனும் ஹோமியோ மருந்து ‘டானிக்’ அல்லது ‘மால்ட்’ வடிவில் ஹோமியோபதி மருந்துக்கடைகளில் கிடைக்கும். தினமும் 3 வேளை எடுத்துக்கொண்டால் பசியும் எடையும் நிச்சயம் கூடும்.

குழந்தைகளுக்கும் கொலஸ்டிரால் பிரச்சினை ஏற்படுமா? நல்ல கொலஸ்டிரால் (HDL) எனப்படும் கொழுப்புச் சத்தை அதிகப் படுத்த என்ன செய்யவேண்டும்? (எனக்கும், என் மனைவிக்கும் மொத்த கொலஸ்டிரால் அளவு கூடுதலாக உள்ளது!)

 -S.முருகவேல், ஸ்ரீவைகுண்டம். 

குழந்தைகளுக்கு 170 mgm% வரை இயல்பாக இருக்கும். 170 முதல் 199 mgm% வரை நடுத்தர அளவாக இருக்கும். 200mgm%க்கு மேல் இருந்தால் உயர்ந்த அளவு என அறிந்து கொள்ளுங்கள். கொலஸ்டிரால் அதிகமானால் குழந்தைகளின் இதயத் தமனிகளிலும் அடைப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு

     குடும்ப பாரம்பரியம், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல், உடற்பயிற்சி, விளையாட்டு ஏதுமின்றி ‘படிப்பு, படிப்பு’ என்று உட்கார்ந்த இடத்திலே ஆண்டுகளைக் கழித்தல் காரணமாகவே குழந்தைகளுக்கும் கொலஸ்டிரால் பிரச்சினை ஏற்படுகிறது. இது பெற்றோரின் விழிப்புணர்வு இன்மை, பொறுப்புணர்ச்சியின்மை, தவறான உணவுப் பழக்கங்களுக்கு நவ நாகரிகம் எனும் பெயரில் குழந்தைகளை பழக்கி விடுதல் காரணமாக ஏற்படும் விளைவு.

     நல்ல கொலஸ்டிரால் அதிகரிக்க குழந்தையின் உடல்சார்ந்த செயல்பாடுகளையும், உடற்பயிற்சிகளையும் ஊக்கப்படுத்தி, காய்கறிகள், பழவகைகள், அனைத்து கீரைவகைகள் போன்றவற்றை உண்ணப்பழக்குங்கள்.

எனக்கு நீண்ட நாள் சந்தேகம் உடலுறவுஎன்பது ஆண் பெண் இருவர் சம்பந்தப்பட்டது. ஆனால் ஆண் மட்டும் உடலுறவின் எல்லா நிலைகளிலும் செயல்படுகிறவனாய் இருப்பது ஏன்? பெண்ணின் கிளிட்டோரிஸ் எனப்படும் பிறப்புறுப்பு மொட்டுப் பகுதி உடலுறவில் உணர்ச்சிப் பூர்வமான பெரும்பங்கு வகிப்பதாய் கூறுவது முழு உண்மையா? உடலுறவை சில பெண்கள் விரும்பாததால் அதிகமாக வெட்கப்படுவது போல் நடிக்கிறார்களா?

 - R.N.நாதன், சென்னிமலை. 

சரியான சந்தேகப் பிராணி நீங்கள்! பரிணாம வளர்ச்சியில் மனித இனத்துக்கு கீழ்ப்பட்ட நிலையிலுள்ள உயிரினங்களில் கூட ஆண்இனம் தான் வலியச் சென்று பெண்ணை நாடும். மனித இனத்திலும் கூடப் பெண் இயற்கையாகவே நாணம் கொண்டவளாக இருக்கிறாள். அவளைக் காதலித்து, பழகி, நாணத்தைப் போக்கி, அதன் பிறகே ஆண் அவளுடன் உறவு கொள்கிறான். செக்ஸ் விஷயத்தில் பெண்ணின் நாணம் ஒரு பெரிய தடை அல்ல.

தாங்கள் சந்தேகிப்பது போல, ஒரு சில செக்ஸ் நிபுணர்கள் இந்த நாணம் உண்மையானது அல்லவென்றும், ஆணைக் கவர்வதற்கு என்றே ஏற்பட்டது என்று கருதுகின்றனர். ‘மாரோ’ எனும் சிந்தனையாளர் “பெண்களின் காதலை நிதானப்படுத்தும் நாணம் காந்தம் போல் தோற்றத்தில் அமைதியானதே தவிர கவர வேண்டிய பொருளைத் தன்னிடம் விரைவாக இழுக்கும் ஆற்றலும் உள்ளது” எனக் குறிப்பிடுகிறார். ‘ஓவிட்’ எனும் எழுத்தாளர், “நாணத்தை மிகுதியாக வெளிப்படுத்தும் பெண்ணின் செக்ஸ் உணர்ச்சியைச் சோதித்துப் பார்த்தால் கொதிக்கும் தணல் போல் அவளது உணர்ச்சி இருப்பதை அறிய முடியும்” என்கிறார்.

‘கிளிட்டோரிஸ்’ பற்றியும் சந்தேகம் எழுப்பியுள்ளீர்கள். பெரும்பாலான பாலியல் நிபுணர்களும்,           உடற்கூறு ஆராய்ச்சியாளர்களும் இப்பகுதி “ஓர் உணர்ச்சி மையம்” என்பதை ஒப்புக்கொள் கின்றனர். ஆணுறுப்பின் மொட்டுப் பகுதியில் உணர்ச்சி நரம்புகளின் திரட்சி உள்ளது போல பெண் குறியின் ‘கிளிட்டோரிஸ்’ பகுதியிலும் உள்ளது. ‘பிரையன் ராபின்சன்’ எனும் ஆராய்ச்சியாளர் இதை மின்சார மணியை ஒலிக்கச்செய்யும் ஸ்விட்சுக்கு ஒப்பிடுகிறார்.“இந்த ஸ்விட்சை அழுத்தினால் பெண் உடலின் நரம்பு மண்டலம் முழுதும் இனிய மணியோசை ஏற்படும்” என்று சுட்டிக் காட்டுகிறார்.

‘ஆட்லர்’ எனும் உளவியல் ஆராய்ச்சியாளர் “ஆணும் பெண்ணும் நேருக்கு நேர் உறவு கொள்ளும் போது கிளிட்டோரிஸின் முழு இன்பத்தையும் ஒரு பெண் பெறமுடிவதில்லை என்றும் இந்த விஷயத்தில் இருவரும் சிறப்புக் கவனம் செலுத்துவது அவசியம்” என்றும் அறிவுறுத்துகிறார்.சந்தேகம் தீர்ந்ததா சார்?

என் மகளுக்கு சிறுவயது முதலே சின்னஞ்சிறு தவறுகள் செய்தால்கூட, யாரும் பெரிதுபடுத்தாத போதிலும், அதிகளவு குற்ற உணர்ச்சி கொள்கிறாள் - இதனால் அவளது இயல்பான சந்தோசம், செயல்பாடுகள், உடல்நலமும் கூட பாதிக்கப்படுகிறது. மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல முயற்சித்தேன். வர மறுக்கிறாள் - என்ன செய்வதென்றே தெரியவில்லை!

 -I.ஜரீனாபேகம், அரக்கோணம்.

கவலையை விடுங்கள். ‘PINE’ என்ற பாச் மலர் மருந்தின் மூலம் தங்கள் மகளின் மனநிலையை நிச்சயம் மாற்றமுடியும். தினமும் 3 வேளை வீதம் ஓரிரு மாத காலம் கொடுத்தால் போதும். எத்தனையோ மனநலச் சிக்கல்களை, எதிர்மறை மனிநிலைகளை, மனபலவீனங்களைக் குணப்படுத்த ‘பாச் மலர் மருத்துவம்’ எனும் இயற்கை      முறை மனநல மருந்துகள் இருக்கும்போது இதற்கெல்லாம் மனநல மருத்துவரை நாடவேண்டிய அவசியமில்லை! கலந்தாய்வும், வீணாக ஆரோக்கியத்தைக் கெடுக்கும் அலோபதி மருந்துகளும் தேவையுமில்லை! 

நான் அக்குப்பங்சரில் M.D.(Acu) தகுதி பெற்றுள்ள டாக்டர். தனியே இன்னும் கிளினிக் துவங்கவில்லை. ஆனாலும் தெரிந்தவர்களுக்கு, உறவினர்களுக்கு அக்குப்பங்சரில் சிகிச்சை அளித்து வருகிறேன். எனது சிகிச்சையில் நோய் நிவாரணம் குறைவாக உள்ளது. பக்கவாதத்தில் இடது கை கால் அல்லது வலது கை கால் பாதிக்கப்பட்டால் சிகிச்சை அளிக்கவேண்டிய முக்கியப் புள்ளிகளை கூறுங்கள்.

 -T.பொன்மீனா, சென்னை -16.

அன்புச் சகோதரியே! மாற்றுமருத்துவத் துறைக்குள் தாங்கள் வருகை தந்ததும், அக்குப்பங்சர் முறையைக் கற்றதும், பயிற்சி செய்து வருவதும் சிறப்பான முயற்சிகள்! பாராட்டுக்கள்! தாங்களும் தங்களைப் போன்ற ஏராளமான அக்குப்பங்சர் பயின்ற, பயின்று கொண்டிருக்கிற  சகோதர, சகோதரிகளும் முதலில் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய விஷயங்கள் ...

2003 நவ 21-ல் இந்திய நடுவண் அரசின் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட ஆணையின் படி (எண்.R-140-15/2/96-u-H(R) (P-T) 25-11-2003) இந்தியாவில் அக்குப்பங்சர் மருத்துவத்தில் சான்றிதழ் பயிற்சி மட்டுமே தகுதியானது. Bachelor Master பட்டங்கள் செல்லாது. மேலும் இந்தியரசு அக்குப்பங்சர் மருத்துவத்தை ‘Mode Of Therapy’ ஆக மட்டுமே அங்கீகரித்துள்ளது முழுமையான மருத்துவமுறையாக ஏற்கவில்லை. அக்குப்பங்சர் சான்றிதழ் பயிற்சி பெற்ற எவரும் Therapist ஆக செயல்படலாமேயொழிய ‘Doctor’ ஆக செயல்பட முடியாது.

பெயருக்கு முன்னால் ‘Dr’ என்று அச்சிட்டு வழங்கப்படும் எந்த நிறுவனம் வழங்கிய சான்றிதழானாலும் எந்த நாடு வழங்கிய சான்றிதழனாலும் இந்திய அரசின் ஆணைப்படி இந்தியாவிற்குள் அது தகுதியற்றது. சட்டத்திற்குப் புறம்பானது. தண்டணைக்குரியது. இதனைப் பொருட்படுத்தாமல் தமிழகத்தில் சில அக்குப்பங்சர் கல்வி நிறுவனங்களும் சில அக்குப்பங்சர் மருத்துவர்களும் ‘M.D.-Acu’ உள்நாட்டு, வெளிநாட்டுப் பட்டங்களை வணிக ரீதியாக தொடர்ந்து விற்பனை செய்துவருவதும், அவர்களிடம் அக்குபங்சர் ஆர்வலர்கள் சட்டவிரோதமான பயனற்ற, சான்று களைப் பெற பல ஆயிரம் ரூபாய்களை விரயம் செய்து வருவதும் வேதனைக்குரியது. இத்தகைய உண்மை நிலையைத் தெரிந்து கொண்டு தங்கள் நிலையைச் சரிசெய்து கொள்ளுங்கள்.

சரி. இனி தங்கள் கேள்விக்கான பதிலுக்கு வருவோம். பக்கவாதத்தில் இடது கை கால் அல்லது வலது கை கால் பாதிக்கப்பட்டால் தூண்ட வேண்டிய முக்கிய புள்ளிகள் :

DU- 20: (இது அனைத்து சக்தி ஓட்டங்களையும் கட்டுப்படுத்தும் தலைமைப் புள்ளி     

GB - 34 : (தசை மற்றும் தசைநார் இயக்கத்தை சீர்படுத்தும்புள்ளி.)

LU - 9: (ரத்த நாளங்களில் ஏற்படும் அசாதாரண விபத்துக்களின் பாதிப்புகளை                     சரிசெய்து நாளங்களின் சுவர்களை பலப்படுத்தும்)

UB – 17 : (மூளையினுள் ஏற்படும் ரத்தக் கசிவைநிவர்த்தி செய்யும்.)

Paraplegia எனப்படும் கைகளில் மட்டும் பக்கவாத பாதிப்பு இருந்தால்.... LI-4, LI-11, LI-14, LI-15, SI-6, SI-9, SI-10, TW-3,TW-5,EXTRA 28 ... (இவற்றில் 3, 4 புள்ளிகள் ஒரு முறை சிகிச்சைக்குப் போதும்.)

     கால்களில் மட்டும் பக்கவாத பாதிப்பு இருந்தால் .... UB-36 முதல் 40 வரை மற்றும் UB-60,UB-62,GB-29,GB-30,GB-34, GB-40, ST-31, ST-32,ST-36, ST-41, ST-49 (ஒவ்வொருமுறை சிகிச்சைக்கும் 3, 4 புள்ளிகளே போதுமானவை)

     Scalp Acupunture தாங்கள் கற்றிருந்தால் Motor Area வில் 2 / 5 பகுதியில் (பக்க வாதத்திற்கு) சிகிச்சையளிக்கவேண்டும். நரம்பியல் சார்ந்த நோய்களுக்கு Neuro Acupuncture எனப்படும் Scalp Acupuncture ன் பயன்பாடு சிறப்பானதுBody Acupuncture வுடன் இதையும் இணைத்துக் கொண்டால்... துரிதமாக நலம் கிடைக்கும். இது உலகளாவிய அக்குப்பங்சர் நிபுணர்களின் அனுபவங்களிலிருந்து நாம் அறிய வேண்டிய விஷயம்.

Pin It