இந்திய அரசின் பன்னிரெண்டாவது அய்ந்தாண்டுத் திட்டத்தில் ரூபாய் 1350 கோடி நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டு தமிழகத்தின் தேனிக்கு அருகில் பொட்டிபுரத்தில் இந்தியன் நியூட்டிரினோ ஆய்வகம் அமைய உள்ளது. இதன் புவிஅமைவிடம் (GPS) 79 டிகிரி 172 5.323E 9 டிகிரி 562 46.203 N என்பதாக உள்ளது.

nuetrino land 404

இவ்வாய்விடம் தரையிலிருந்து பூமிக்குள் கீழே ஒரு கிலோ மீட்டர் ஆழத்தில் அரை கிலோ மீட்டர் வரையிலுள்ள சுற்றுப்புறங்க்ளில் பரந்து விரிந்து அமைக்கப்பட இருக்கிறது. புவிக்குள் ஆய்வகத்தை உருவாக்க 800,000 டன் எடை கொண்ட பாறைகளைப் பெயர்த்தெடுக்க 1000 டன் அளவிற்கான ஜெலாட்டின் வெடி மருந்துகொண்டு 800 நாட்களில் வெடி வைத்து தகர்க்க இருக்கிறார்கள்.

இச்செயல்களை மேற்கொள்வதால் உருவாகும் பெரும் சத்தம், புழுதித் துகள் மூட்டங்கள், வெடி மருந்தின் வேதி நச்சுப் பொருட்கள், தகர்த்து குவிக்கப்பட உள்ள 800,000 டன் பாறைப் பொருட்கள் என்பனவற்றால் ஏற்பட இருக்கும் சுற்றுச் சூழல் சீர்கேடுகளால் தாவர, விலங்கு மற்றும் மனிதர்களுக்கு உருவாக இருக்கும் கேடுகள் கவனத்திற்குரியன.

மேற்குத் தொடர்ச்சி மலையின் இப்பகுதி நீராதாரம், சூழலியல் உணர்வு நுட்பம் மற்றும் நீரழுத்த நிலநடுக்கம் போன்றவற்றால் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதால் யுனெஸ்கோ இப்பகுதியில் தொழில் தொடங்க தடை செய்யப்பட்ட மண்டலமாகவும் அறிவித்து உள்ளது.

இந்தக் கட்டுரையின் நோக்கமான நியுட்ரினோ பற்றிய ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருப்பதற்குக் காரணமாக அமைந்தது 2012 இல் கண்டுபிடித்ததாக அறியப்பட்டுள்ள “ஹிக்ஸ் போசான்“ அல்லது “கடவுள் துகள்“ ஆகும். இந்தத் துகள் ஜெனிவாவில் செர்ன் (cern) ஆய்வுக் கூடத்தில் பெரும் ஹேட்ரான் மோது கலனில் (LHC) ஆய்வின் போது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நுட்பமான துகள் பிரபஞ்சம் உருவான பெருவெடிப்பு நிகழ்சசியில் ஒரு நானோ வினாடி (ஒரு வினாடியில் நூறு கோடிப் பகுதியில் ஒரு பகுதி) இருந்து மறைவுற்றதாகவும் அத்துகளின் மறைவின்போது உருவான பேராற்றலே (10,000 கோடி எலக்ட்ரான் வோல்ட்) இப்போது நாமும், புவியும், சூரிய மண்டலமும், விண்மீன்கள் அண்டமும், பிரபஞ்சமும் என்பதாக வான்வெளி ஆராய்ச்சியாளர்களின் கொள்கை முடிவு. ஆகவே தான் ஹிக்ஸ் போசானும் அதனுடன் தொடர்புடைய நியுட்ரினோவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. நியூட்ரினோ துகள்களை உருவாக்கும் தொழிற்சாலைகள் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சப்பான், சீனா என நீள்கிறது. நியூட்ரினோக்களைக் கண்டுபிடிக்க ஒரு சாதனம் 50 டன் எடை கொண்ட மின்காந்தத்தை உள்ளடக்கியதாக இருக்கிறது.

இவை ஒருபுறமிருக்க வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த பின்வரும் செய்தி கவனிக்கத்தக்கது. அதாவது இரண்டாவது உலகப்போரின் போது அறிவியல் மேதை அய்ன்ஸ்டீன் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டிற்கு எழுதிய கடிதமொன்றில் அவர்களுடைய ஆய்வான யுரேனியத்தில் அணு உட்கருத் தொடர்வினை நிகழ்த்த அபரிமிதமான சக்தி மற்றும் ரேடியம் பேற் புதுவகைப் பொருட்கள் தேவைப்படுகிறது. என குறிப்பிட்டிருந்தார். அய்ன்ஸ்டீன் குறிப்பிட்டிருந்த ஆய்வானது அவர்களை அணுகுண்டு தயாரிப்பதற்கு இட்டுச் சென்றதும் அவ்வாறு தயாரிக்கப்பட்ட அணுகுண்டு 2 ஆகஸ்டு 1939 அன்று சப்பானிலுள்ள ஹிரோசிமா, நாகசாகி நகரங்களில் வீசப்பட்டு பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியானதும் அப்பாவி மக்கள் சொல்லொணாத் துயரங்களை எதிர்கொண்டதும் அனைவரும் அறிந்ததே.

இதுபோல இப்போது மேற்கொண்டிருக்கும் ஆய்வில் புதுவகையான பெரும் அழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென்பது உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவின் போர் வெறிக் கனவு. இதன் மூலம் அனைத்து உலக நாடுகளையும் தனது காலடியில் கொண்டுவர வேண்டும் என்பது அமெரிக்கப் பேராசை.

பேராசைக்குத் தீனி போடும் விதமாக குவாண்டம் சக்தி (வெற்றிடச் சிதைவு நிகழ்ச்சி) என்பதான மந்திர வித்தை மூலம் பிராந்தியங்களை நாசமாக்கி மரியமாக்கும் (கருந்துளை) தன்மை படைத்ததாக நியூட்ரினோ/போசான் குண்டுகள் விளங்கலாம் என துகள் இயற்பியல் வல்லுநர்களால் கொள்கை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது ஆதாரமாக உள்ளது.

இவ்வாறாக நியூட்ரினோ ஆய்வு முக்கியத்துவம் பெற்றிருக்க நமக்குள் எழும் பின்வரும் சிந்தனைகள்/ அய்யங்கள்/ கேள்விகளைக் காண்போம்.

இப்போது ரூபாய் 60,000 கோடி மதிப்பிடக்கூடிய ஜெனீவாவில் இயங்கும் செர்ன் ஆய்வுக் கூடத்திலுள்ள பெரும் போது கலனின் செயல்பாட்டை மதிப்பிடவும், சோதிக்கவும், கண்காணிக்கவும் தனித்தன்மை கொண்ட சுதந்திரமான ஆய்வுமுறை மற்றும் ஆய்வமைப்புகள் இல்லாத நிலை மற்றும் மோதுகலன் நிறுவப்பட்ட 1998 இலிருந்தே சீரான செயல்பாடு இல்லை எனக் கூறப்படும் நிலை.

பிரபஞ்சம் உருவாகக் காரணமாக இருந்த பெரு வெடிப்புக் கொள்கையே இப்போது கேள்விக்குள்ளாகியுள்ள நிலை.

இவ்வாறான மேற்கூறப்பட்ட நிலைகளில் நியூட்ரினோ ஆய்வு ஒரு வெத்து வேட்டு ஆய்வா (Hulla bahoo research)?

இந்த வெத்து வேட்டு ஆய்வை ஆரவாரத்துடன் அலங்காரப்படுத்தி அவ்வாராய்ச்சி முகமூடியின் மூலம் கூடங்குளம் போன்ற இந்தியா மற்றும் ஆதிக்க நாடுகளின் அணுஉலைக் கதிர்வீச்சுக் கழிவுகளைப் பூமிக்கடியில் புதைப்பதற்கான புதைக்கூடமா?

குவாண்டம் சக்தி கொள்கை மூலம் தயாரிக்கப்பட்ட நியூட்ரினோ குண்டுகளை உலக நாட்டாண்மைக்கார நாடான அமெரிக்கா தனக்குப் பணிய மறுக்கும் நாடுகளை குவாண்டம் யுத்தம் (Quantum wars) என்ற புதுவகை நாசகரமான யுத்தங்களை மேற்கொள்ள வழிவகை செய்ய அமெரிக்காவிற்கு உதவும் அடிவருடிகளின் சேவைக் கூடமா? என்பதாக இருக்க தமிழகத்தில் நெய்தல், நிலப்பகுதியை கூடங்குளம், கல்பாக்கம் அணு உலைகளால் கதிரியக்க நாசப்பகுதியாகவும் மருதநிலப்பகுதி ( தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம்) மீத்தேன் திட்டம் மூலம் வறண்ட பாலைவனப் பகுதியாகவும், குறிஞ்சி மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி நியூட்ரினோ ஆய்வு என்பதாக கதிரியக்க கழிவுப் புதைகூடமாகவும் ஆக்கி தமிழ் மண்ணும் மக்களும் சூறையாடப்பட்டு பஞ்சை பராரியாக்கி தமிழ் மக்களை அகதிகளாக்கி துரத்தி தமிழ்நாட்டுக்கு சமாதி கட்ட வேண்டும் என்பதற்கான இந்து இந்தி மயமாக்கும் கபடத்தனமான இந்திய அரசின் குள்ளநரித் தந்திரத்தில் விளைந்த தமிழ் மக்களுக்கான பலிபீடங்களுள் ஒன்றுதான் தேனி பகுதியில் அமைய இருக்கும் நியூட்ரினோ ஆய்வுக்கூடம்.

Pin It