ஒரு பறவையின் சிறகு
உதிர்ந்து கிடக்கிறது.
உயரங்களில் ஊர்வலம் போன
மலரும் நினைவுகளில்
ஆழ்ந்தபடி...
பறவைக் கூட்டம்
கண்களை விட்டு மறைகையில்,
வானம் மட்டுமல்ல
மனசும் வெறுமையாகி விடுகிறது.
அந்திக்குக் கூடு திரும்பும் பறவை
பகலின் கடைசியழகு,
சிறகசைத்து விடைபெறுகிறது.
பறவைகள்
சுதந்திரத்தின் குறியீடு
அவற்றை மாமிசப் பார்வை பார்க்கிறது
அசைவ மனசு
மேகங்கள் வானத்தின்
அக அழகு,
பறவைகள் அதன்
புற அழகு.
உயரப் பறப்பதை எந்தப் பறவையும்
சாதனையாகக் கூறிக்கொள்வதில்லை
அதுவே அதன் இயல்பு.
இரையும் குடிநீரும்
தேடிக் களைத்த பறவைக்கு
இளைப்பாற வெயில் விரிந்த
கட்டிடங்களே இன்று மிச்சமிருக்கிறது
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
கருக்கல் விடியும் - ஜூலை 2012
- விவரங்கள்
- கோ.அருணகிரி
- பிரிவு: கருக்கல் விடியும் - ஜூலை 2012