இரைதேடி தரை கிளறும்
கோழியைப் போல்
Jayalalitha and O.Pannerselvamகவிழ்ந்து கிடக்கிறது தலை

வறண்ட நிலத்தின் வெடிப்புகளென
பயனற்றதாய் போய்விட்டது
மனிதர்களின் மானமும் சுயமரியாதையும்
மவுனத்தின் கரைகள்மேல் நின்று
மக்கள் பார்க்கின்றனர் கூத்துகளை

அவமானம் குறித்தோ
அடிமைத்தனம் குறித்தோ
கவலைகள் ஏதுமற்றவர்கள்
மதிநலம் மிக்க மந்திரிகள்

முன்னாள் முதல்வரெனினும்
டயரடி மண்போற்றும் தகுதிபோதும்
வீரத்தமிழக அரசியலுக்கு

கானல் நீர் பாய்ந்த
கண்ணுக்குத் தெரியாத புற்களை
மானங்கெட்டு மேயப்போயிருக்கின்றன
மயிர்நீப்பின் உயிர்நீக்கும் கவரிமான்கள்

-யாழன் ஆதி

Pin It