அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் கொழும்பில் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு ஒன்று நடப்பதாக பரபரப்பான செய்திகள் வெளிவருகின்றன. தமிழகத்தில் இருந்தும் பிரதிநிதிகள் அழைக்கப்படுவதாக அறிகின்றேன். அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்கான பின்னணி என்ன? ஓர் இனத்தினதும் மொழியினதும் மனச்சாட்சியாகவும், அவர்களுடைய விடுதலைக் குரலாகவும் ஒலிக்கும் தகைமையர் படைப்பாளிகள். அத்தகையவர்கள் ஏன் தரந்தாழ்ந்தார்கள்?
கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக, தமிழ் ஈழரின் படைப்பிலக்கியத்திற்கு நிறை பங்களித்துள்ளவன் என்கிற முறையிலும், கடந்த இரண்டு தசாப்தங்களாக புலம்பெயர்ந்தோர் படைப்பு தமிழ் இலக்கியத்தில் புதிய பரிமாணமும் கூறும் என்பதை இலக்கிய ஆய்வாளர்கள் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஊழியம் செய்தவன் என்கிற உரிமையிலும் என் சந்தேகங்கள் சிலவற்றை தமிழ்ப் படைப்பாளர்கள் முன்னர் சமர்ப்பிக்கும் கடமை எனக்கு உண்டு என நினைக்கின்றேன்.
அண்மையில் இலங்கை நாடாளுமன்ற தமிழ்ப் பிரதிநிதிகள் சிலர் தில்லியிலுள்ள அரசியல் தலைவர்களையும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் அவர்களையும் சந்தித்து ஈழத் தமிழனத்தின் சோகங்களுக்குப் பரிகாரம் தேடித் தருமாறு மன்றாட்டமாகக் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்கள் தரும் தகவல்கள் தமிழ் ஈழரை மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழர்களையும் மிகுந்த கவலைக்குள்ளாக்கியிருக்கின்றன. தமிழ் ஈழரின் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு அறிவித்து ஓராண்டு காலத்துக்கு மேலாகிவிட்டது. தமிழ் ஈழரின் புனர்வாழ்வுக்கும் மீள்குடியேற்றத்துக்கும் இந்தியா கொடுத்துள்ள 500 கோடி ரூபாயும் தமிழ் இனத்தைத் தமிழ் மண்ணிலே நிரந்தர அடிமைகளாக்குவதற்கு ராஜபக்சே அரசு செலவு செய்துள்ளதாக இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியிருக்கின்றார்கள். இதுவரை நான்கு லட்சம் சிங்கள இராணுவக் குடும்பத்தினர் தமிழ் மண்ணிலே குடியேற்றப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சம் சிங்கள இராணுவத்தினர் தமிழ்ப் பகுதிகளில் நிரந்தரமாகக் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.
தமிழ்ப் பெண்கள் தாம் பிறந்த மண்ணிலே தமது மானத்தையும் கற்பையும் காப்பாற்றி வாழ முடியாத அவல நிலை நிலவுகிறது. இந்த அவலம் தொடர்கதை என்பதுதான் சோகத்தின் உச்சம்.
‘இரத்தம் சிந்தி மீட்கப்பட்ட தமிழ் ஈழருடைய மண் சிங்களருக்குச் சொந்தமானது' என்று ராஜபக்சே கொக்கரிப்பதாகவும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குமுறினார்கள். தமிழ் ஈழர் நிரந்தரமாக அடிமைகளாக்கபட்டுள்ள ஒரு சூழலிலே உலகத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பில் மாநாடு நடத்துவது அவசியமானதா? உண்மையான படைப்பாளி தன் இனத்தின் தூங்கா மனச்சாட்சியாகவும், இனத்தின் சுதந்திரத்திற்காக மூர்க்கங் கொண்ட விடுதலை வெறியனாகவும் வாழ்தல் அவசியம். அவற்றை எல்லாம் தொலைத்து விட்டு, இலங்கையில் தமிழர்கள் அமைதியாக வாழ்கிறார்கள் என்று போக்குக் காட்டுவதற்காகவா இந்த உலக தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பில் நடத்தப்படுகிறது?
புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளுக்கு அண்மையில் சென்று திரும்பியுள்ள தமிழ்ப் படைப்பாளிகள், அங்கு வாழும் தமிழர்கள் மத்தியில் ராஜபக்சே அடாவடிகளுக்கு எதிராகக் குரலும் குமுறலும் கேட்பதாகச் சொல்லுகிறார்கள். தமிழ் ஈழருடைய இழந்துபோன உரிமைகளை மீட்டெடுக்கும் பணியிலே புலம்பெயர்ந்த தமிழர்கள் வீறுமிக்க அக்கறை கொண்டவர்களாக வாழ்வதாகவும் சாட்சியம் கூறுகின்றார்கள். இத்தகைய சூழலிலே ஒரு மாநாடு கொழும்பில் ஏன் நடத்தப்படுகிறது என்ற கேள்வி தமிழ்ப் படைப்பாளிகள் அனைவர் மத்தியிலேயும் எழுதல் நியாயமானது.
1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்கில் குடியேறினார்கள். அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்களோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியது.
சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினையும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்காவா இந்த மாநாடு?
மனித உரிமை மீறல்களும், யுத்த தர்ம மீறல்களும் சிங்கள ராணுவத்தினரால் ஏராளமாக நிகழ்த்தப்பட்டதற்கான ஆதாரங்கள் பலவும் இப்பொழுது வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ராஜபக்சே சகோதரர்களை நீதியின் முன்னர் நிறுத்தி விசாரிக்க வேண்டுமென்று உலக மாந்த நேயர்கள் கூறிவருகிறார்கள். இந்நிலையிலே தான் ராஜபக்சே அரசு இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தினை முரட்டுத்தனமாகத் தாக்கி உள்ளார்கள். சர்வதேச சமூகத்துகே சவால்விடும் சிங்கள இனவாத அநாகரிகத்தினைக் கண்டு உலகின் மாந்த நேயர்களும் அறிவுஜீவிகளும் வெட்கித் தலை குனிந்துள்ளார்கள். இத்தகைய அவலச்சூழலிலே, சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கொழும்பிலே மாநாடு கூடுதல் நியாயமானதா? அதுவும் மிக அவசர கதியில்?
சர்வதேச சமூகம் இலங்கையில் நடைபெற்ற இன சங்காரத்துக்கும், நரபலி வெறி யாட்டத்திற்கும் எதிராக இலங்கைமீது பொருளாதாரத் தடைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஆலோசித்து வருகிறது. இலங்கையின் முக்கியமான வருவாய், சுற்றுலாப் பயணிகளின் மூலமே கிடைக்கின்றது. சர்வதேச சமூகத்தின் குற்றச்சாட்டினால் இந்தச் சுற்றுலா வருவாய் பெரிதும் குறைவதற்கு வாய்ப்பு உண்டு. தடித்த சிங்கள அரசு இந்த இழப்புகளைச் சந்திக்கக் கூடாது என்கிற அவசரத்தில் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிப்பது போல தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கொழும்பிலே நடத்தப்படுகிறது என்று எழும் சந்தேகமும் நியாயமானதே.
சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் தமிழ்ப் பகுதிகளில் நடைபெறும் சிங்கள ராணுவமயமாக்கலைத் தடுத்து நிறுத்த முடியுமா? தமிழ் ஈழருக்கு இலங்கையில் சாதாரணமான மனித உரிமைகளை வென்றெடுத்துத் தரமுடியுமா? அன்றேல், இன்றும் கொலை வெறித் தாக்குதனின் இரத்தத்தினால் கறை படிந்து கிடக்கும் இலங்கை ஆட்சியாளரின் மனநிலையில் அற்ப மாற்றத்தையாவது ஏற்படுத்த முடியுமா? இவை சாத்தியப்படாவிட்டால், கொழும்பில் நடத்தப்பட இருக்கும் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மகாநாட்டினால் யாது பயன்?
ராஜபக்சே சகோதரர்களுடைய அராஜகத்தைக் கொழும்பிலே தட்டிக் கேட்கக்கூடிய ‘தில்' உள்ள தமிழ்ப் படைப்பாளிகள் யார் கொழும்பிலே கூடுகிறார்கள்? ‘சிங்கள அரசு பற்றி எத்தகைய விமர்சனமும் செய்ய மாட்டோம்' என்கிற உறுதிமொழி வழங்கித்தான் மாநாடு நடத்துவதற்கான அனுமதியே பெறப்பட்டதாகவும் நான் அறிகிறேன்.
தமிழ் ஈழர் அனைத்து உரிமைகளையும் இழந்துவிட்டார்கள். தமிழச்சிகள் தங்கள் கர்ப்பப் பைகளில் சிங்களக் குழந்தைகளைச் சுமக்கும்படி வற்புறுத்தப்படுகிறார்கள். சொந்த மண்ணில் அநாதைகளாகவும், அடிமைகளாகவும் ஆக்கப்பட்டிருக்கிறார்கள். மீன்பிடி, விவசாயம் ஆகிய சகல ஜீவாதாரங்களும் தமிழர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. கல்வி கேள்விக்குறியாக உள்ளது. இந்நிலையிலே சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு கூட்டி தமிழர்களுக்கு இலவச கதைப் புத்தகங்கள் கொடுக்கப் போகிறோம் என்று வலைச் செய்திகள் பரப்புவது எவ்வளவு கேலிக்குரியது?
பிரான்சு நாட்டு ராணி ஒருத்தி அகங்காரத்துடன் கேட்டாளாம், "தின்பதற்கு ரொட்டியில்லாவிட்டால் கேக் சாப்பிட வேண்டியதுதானே' என்று! எல்லாம் இழந்து பரிதவிக்கும் தமிழ் ஈழச் சிறாருக்கு குச்சி ஐஸ் கொடுப்பதற்கா இந்த மாநாடு நடத்தப்படுகிறது?
காட்டுபிராண்டிகள் வாழும் ஆப்பரிக்காக் கண்டம் என்று சொல்வார்கள். நைஜீரியாவில் இபோ இன மக்கள் தனி நாடு கோரிப் போராடினார்கள். அந்த விடுதலைப் போராட்டம், இபோ மக்களுக்கு தோல்வியில் முடிந்தது. ஆனால் ஓராண்டுக்கிடையில் போரினால் ஏற்பட்ட அனைத்து கசப்புகளும் மறக்கப்பட்ட நைஜீரியாவில் இவர்கள் இப்பொழுது தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள். புத்தர் பெயரால், நீச ஆட்சி நடத்தும் ராஜபக்சே ஆட்சி நிலவும் வரையில் இலங்கை யுத்தக் குற்றவாளிகள் வாழும் ஒரு மயான பூமி என்று வெறுத்து ஒதுக்கப்படுவதுதான் தர்மம்.
இந்த ஆட்சியினரால் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை என்ன? எழுத்துச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் ஆட்சிக்கு எதிராகக் கருத்துச்சொன்னது என்பதற்காக சிங்களனுக்குச் சொந்தமான ஓர் ஒளிபரப்பு நிலையமே சாம்பலாக்கப்பட்டுள்ளது. காட்டாட்சி நடக்கும் மயான பூமியிலே, ஏன் அவசரமாகச் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்களின் ஒன்று கூடல்?
இலங்கையில் வெளிவரும் தினசரிகள் இராஜபக்சே புகழ்பாடுவதினால் மட்டுமே உயிர் வாழ்வதாகவும் நான் அறிகின்றேன். ஏன் சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் இவற்றைக் கவனத்தில் கொள்ளவில்லை? புகழ் ஆசையா, பதவி ஆசையா, அன்றேல் தனக்கு ஒரு மனித முகம் அருள வேண்டுமென்று ராஜபக்சே கொடுத்துள்ள லஞ்சத்தின் மீதுள்ள ஆசையா? மாநாடு கூட்டுவதற்கு முன்னர், இதனை உலகப் படைப்பாளிகள் சமூகத்திற்கு விளக்க வேண்டிய தார்மீகக் கடமை அந்த மாநாட்டினைக் கூட்டும் அமைப்பாளருக்கு உண்டு. தங்கள் பக்கத்து நியாயங்களை ஏனைய தமிழ்ப் படைப்பாளிகள் மத்தியில் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் முன்வைக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் தமிழ் ஈழருடைய மூத்த படைப்பாளி என்கிற உரிமை கோரலுடன் முன் வைக்கின்றேன்.
- எஸ்.பொ.
தொடர்புக்கு: +919176333357
பணத்திற்கு பீ திண்கின்ற கூட்டம் இன்னும் உள்ளது என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு ... இப்பேற்பட்ட பொறுக்கித் திண்பவன் எல்லாம் தமிழ் எழுத்தாளர்களா? வெட்கமாக உள்ளது....
"மன்னனும் நீயோ வளநாடும் உனதோ?" என்று வினவியோரின் அறச் சீற்றம் எங்கே போனது....
9443761307
our tamil writers will not attend to the sri langa conferenc
நேற்று மயூராபதி அம்மன் பர்குட பவனியில் குடம் சுமந்து வந்த பக்தைகள் திருமதி ராஜபக்ஷ வழிபாடு (?) செய்து முடிக்கும் வரை கோவிலுக்குள் நுழைய விடாமல் நெடுநேரம் காத்திருக்க விடப்பட்டனர் . இதுதான் கொழும்பின் இன்றைய நிலைமை. அந்தோணி ஜீவா, டொமினிக் ஜீவா, தெளிவத்தை போன்றவர்களுக்கு இவை சாதாரண விடயங்கள் தான். ஞானம், மல்லிகை போன்றன அமைச்சர் அஸ்வரின் புகழ் பாடுவதில் காலத்தைச் செலவிடுகின்றன. இவ் விழாவினை தன்மானமுள்ள தமிழ் பேசுபவர்கள் பகிஸ்கரிக்க வேண்டும்.
எல்லாம் சுமுகமாக இருக்கிறது எனக்காட்டவே இந்த மாநாட்டை ஒழுங்குசெய்துள் ளனர்;. நிச்சயம் அரசின் அமைச்சர்கள் இதில் பங்கெடுப்பர்: பாசிச அரசாங்கம ;துதிபாடப்படும் ! இந்தத் ‘தமிழ்த்; தேசிய எதிர்ப்பாளர’களு டன் ‘ஞானம்’இதழ் ஆசிரிpயர், தெளிவத்தை யோசப் போன்றவர்களும் பின்னணி பற்றிய விளக்கமின்றி கருணாநிதியின் ‘செம்மொழி மாநாட்’டைப் போலவே ஒரு திசைதிருப்பும் சூழ்ச்சிதான் இந்த மாநாடு : ;எனவே, உணர்வுள்ளவர்கள் இதனைப் புறக்கணிக்கவேண் டும்!
- சாமானியன், கோப்பாய்.
மேலும் எஸ்.பொ. அவர்கள் மேற்படி ஒன்று கூடலை மட்டும் எதிர்க்கக் கூடாது. அண்மைக் காலத்தில் இலங்கை அரசால் நடாத்தப்பட்ட இலக்கிய விழாக்கள் பற்றிய செய்திகள் பல அவ்வப்போது ஈழத்துப் பத்திரிகைகளில் , சஞ்சிகைகளில் வெளிவந்திருக்கி ன்றன. பிரபல எழுத்தாளர் செங்கை ஆழியான் கூட சாகித்திய இரத்தினா என்ற விருதினை ஜனாதிபதி மகிந்த இராஜபக்சவிடமிரு ந்து பெற்றுக் கொள்ளும் புகைப்படங்களையெ ல்லாம் பத்திரிகைகளில் பார்த்த ஞாபகமுண்டு. அது போல் கவிநாயகர் கந்தவனம் கூடக் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் மகவம் கலைஞர் வட்டம் புனிதக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவுடன் நடாத்திய இலக்கியச் சந்திப்பொன்றில் 29.11.2009 அன்று கலந்து கொண்டு 'கனடாவில் கலை இலக்கிய முயற்சிகள்' பற்றிக் கட்டுரை வாசித்துள்ளார். இன்னுமொரு கனடிய எழுத்தாளர் சந்திரபோஸ் மலையகத்தில் நடந்த இலக்கியச் சந்திப்பொன்றில் கலந்து கொண்டிருக்கின்ற ார். இலங்கை அரசால் வழங்கப்படும் சாகித்திய விருதுகளைப் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் (எழுத்தாளர் உதயணன் உட்பட) பெற்றுள்ளதாகக் கருதுகிறோம். மேலும் இவை தவிர இன்றைய சூழலில் ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் ஈழத்துத் தமிழர்கள் இலங்கையில் இந்தக் கணத்தில் தங்களது பயணத்தை மேற்கொண்டிருக்க ின்றார்கள். பல்வேறு முதலீடுகளைச் செய்துகொண்டிருக ்கின்றார்கள். இன்னும் சிலர் அண்மைக்காலமாக வடபகுதிக்கு அதிகரித்த எண்ணிகையில் விஜயம் செய்யும் தென்னிலங்கை மக்கள் தங்குவதற்கு இருப்பிட வசதிகளை அங்கிருக்கும் தமது இருப்பிடங்களை மாற்றி வருவதாகவும், இதனால் ஏற்கனவே அவ்விருப்பிடங்க ளில் வாடகைக்குக் குடியிருந்த மக்களை வெளியேற்றிவருவத ாகவும் இணையத்தளமொன்றில ் வாசித்த ஞாபகம். உண்மையில் எஸ்.பொ. இதயசுத்தியுடன் கண்டிப்பதாகவிரு ந்தால் இவற்றையெல்லாம் கண்டிக்க வேண்டும்.
1. பலவேறு நாடுகளில் வாழும் தமிழ் எழுத்தாளர்களோ, மக்களோ இன்றைய சூழலில் இலங்கைக்குச் செல்லக்கூடாது. அகதிகளாக ஈழத்தமிழர்கள் அன்னிய நாடுகளுக்குக் கப்பல்களில் படையெடுக்கும் சூழலில் அவ்விதம் செல்வது சரியானதல்ல. நீங்கள் இலங்கை சென்று இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வது அங்கு இயல்பான நிலை இருப்பதை வெளிப்படுத்தும் . ஏற்கனவே அவ்விதம் அங்கு சென்ற எழுத்தாளர்களுக் கு இலங்கை அரசு ஏதாவது பண உதவி செய்துள்ளதா என்பது பற்றி ஆராய வேண்டும்.
2. இலங்கை அரசு கொடுக்கும் விருதுகளை, இலக்கிய விழாக்களை எழுத்தாளர்கள், கலைஞர்கள் புறக்கணிக்க வேண்டும். ஏற்கனவே அவ்விதம் தற்போதுள்ள அரசிடமிருந்து விருது பெற்றவர்கள் தங்களது விருதுகளைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
3. மேலும் அங்கு இலங்கையில் வாழும் தமிழ் எழுத்தாளர்களுக் கெல்லாம் கொழும்பில் இவ்விதமான சந்திப்புகளை நடத்துவதைக் கண்டித்து தனது எதிர்ப்பினை எஸ்.பொ. தெரிவிக்க வேண்டும்.
இவற்றிற்கெல்லாம் தனது கண்டனக் குரலினைக் கொடுத்துவிட்டு எழுத்தாளர் முருகபூபதியின் மேலும், ஞானம் ஆசிரியர் ஞானசேகரன் மீதும் (இவர்கள் இருவரும் தான் மேற்படி ஒன்று கூடலின் பிரதான ஏற்பாட்டாளர்கள் ) மீதும் தனது குற்றச்சாட்டுகள ை எஸ்.பொ. வைப்பாரென்றால் அது நேர்மையான செயலாகவிருக்கும்.
மேலும் எஸ்.பொ.வின் மேற்படி ' கொழும்பு சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு - சில சந்தேகங்களும் சில ஆதங்கங்களும் ' என்னும் கட்டுரையில் எஸ்.பொ. அவர்கள் கூறும் பின்வரும் கருத்துகளைப் பார்ப்போம்.
1. அவசர அவசரமாக இந்த மாநாடு கொழும்பில் நடத்தப்படுவதற்க ான பின்னணி என்ன? [இணைய, பத்திரிகைகள் மற்றும் சஞ்சிகைகள் செய்திகளின்படி மேற்படி கலந்துரையாடல் பற்றிய முயற்சிகள் ஆரம்பமாகி ஒருவருடத்திற்கு ம் மேலாகி விட்டன். அவசர அவசரமாக என்று கூறமுடியாது.]
2. 1983-ஆம் ஆண்டிற்குப் பின்னர் மடை திறந்த வெள்ளம் போல் பல வெள்ளைத்தோலர் நாடுகளில், உலக அநுதாபத்தைச் சாதகமாக்கிக் கொண்டு தமிழ் ஈழர் பல்லாயிரக்கணக்க ில் குடியேறினார்கள் . அவர்களுள், வாழ்வாதாரங்களை இழந்த விடுதலை வெறியர்கள் மட்டுமல்லாமல், பொருளாதார நாடோடிகளும் இருந்தார்கள். இவர்களிலே பலர் ஈ.பி.ஆர். எல்.எவ்., புளட் போன்ற போராட்டக் குழுக்களில் இருந்தவர்களும் அடங்குவர். இருபத்தைந்து ஆண்டுகள் பணம் சம்பாதித்த பின்னர் மீளவும் ஈழத்தில் கால்பதிக்கும் அவசரத்தில் இந்த மாநாடு கூடுவதற்கு உடந்தையாகச் செயற்படுகிறார்க ளோ என்று எழும் சந்தேகம் நியாயமானது. இவர்கள் மார்க்சிய சிந்தனையுடன் உறவாடியவர்கள் என்பதும் கவனத்திற்குரியத ு [விடுதலைப்புலிக ளுட்படச் சகல போராட்டக் குழுக்களிலிருந் தவர்கள் என்பதே சரியான கூற்றாகவிருக்க முடியும். எதற்காக மேற்படி தற்போது இலங்கை அரசுடன் இயங்கும் ஒரு சில அமைப்புகளின் பெயர்களை மட்டும் எஸ்.பொல் குறிப்பிட்டிருக ்கின்றாரோ? இவ்விதமான தந்திரமான கூற்றுகள் மிகவும் ஆபத்தானவை. பிழையான உணர்வுகளை வாசிப்பவர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடும ் வலிமை மிக்கவை.]
3. சீன கம்யூனிஸ்ட் ஆதரவு நிலைப்பாட்டினைய ும், உள்ளூர இந்திய எதிர்ப்பு மனோபாவத்தையும் கொண்டுள்ள ஆட்சியாளருக்கு உதவும் அவசரமே இந்த மாநாட்டின் பின்னணியில் மேலோங்கி நிற்பதாகவுந் தோன்றுகிறது. இன்று இந்திய வெளியுறவுக் கொள்கை இலங்கையிலே தோற்றது போல, எல்லா இடங்களிலும் சீனக்கொடிகளும் சீனர்களின் கட்டுமானப் பணிகளும் நடைபெறுகின்றன. இந்தச் சீன ஆக்கிரமிப்பின் மான்மியத்தைப் பறைசாற்றுவதற்கா வா இந்த மாநாடு? [இதனை எதற்காக எஸ்.பொ. கூறினாரோ அவருக்கே வெளிச்சம். முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கு ம் முடிச்சுப் போட முனைந்திருக்கின ்றார். ]
எம்மைப் பொறுத்தவரையில் மேற்படி சந்திப்பானது இலங்கை அரசின் எந்தவித ஆதரவுமற்ற , எழுத்தாளர்கள் முருகபூபதி, 'ஞானம்' ஞானசேகரன் ஆகியோரின் தனிப்பட்ட முயற்சிகள் வழியாக நடைபெறவுள்ளதொரு சந்திப்பே; கலந்துரையாடலே. அவ்விதமானதொரு தீர்மானத்தைத்தா ன் ஊடகங்களிலிருந்த ு எமக்குக் கிடைக்கப்பெறும் செய்திகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடிகிறது. அவ்விதமில்லாமல் இலங்கை அரசின் ஒத்துழைப்புடன், இலஞ்சப்பணத்தில் நடைபெறும் சந்திப்பு என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எஸ்.பொ.விடம் இருக்குமென்றால் அவற்றை உடனடியாக வெளியிட வேண்டும். அவ்விதம் வெளியிடுவதன் மூலம் மாத்திரமே எஸ்.பொ. தனது வாதத்திற்கும், சந்தேகங்களுக்கு ம் வலுச் சேர்க்க முடியும்.
மேலும் முள்ளிவாய்க்கால ில் ஆயுதங்கள் மெளனித்ததன் பின்னர் இலங்கை அரசிடமிருந்து விருதுகள் பெற்ற எழுத்தாளர்களை மேற்படி விருதுகளைத் திருப்பி அனுப்பும்படி எஸ்.பொ. கண்டிக்க வேண்டும். அத்துடன் அடிக்கடி இலங்கை சென்று இலக்கிய நிகழ்வுகள், நூல் வெளியீடுகளென்று கலந்து கொள்ளும் எழுத்தாளர்களை அவர் கண்டிக்க வேண்டும். அவ்விதமான பிரயாணங்களை அவர்கள் தவிர்க்க வேண்டுமென்று அவர் வலியுறுத்த வேண்டும். அவ்விதம் அவர் செய்யாது விட்டால் அவரது தற்போதைய குற்றச்சாட்டுகள ெல்லாம் அர்த்தமற்றவையாக ப் போய்விடும்.
எம்மைப் பொறுத்தவரையில் இதுவரை காலமும் போர்ச் சூழல்களினால் பெரிய அளவில் ஈழத்துப் படைப்பாளிகளும், ஏனைய நாடுகளில் வாழும் படைப்பாளிகளும் சந்திப்பதற்கான வாய்ப்புகள் குறைவாகவிருந்தன . தற்போது அதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருப்பதால் தனிப்பட்டரீதியி ல் எழுத்தாளர்கள் சந்திப்பதில் தவறில்லை. ஏனெனில் மேற்படி சந்திப்பானது அரசின் ஆதரவுடன், அரசின் அமைப்புகளினூடு நடாத்தப்படுமொரு சந்திப்போ அல்லது விழாவோ அல்ல. வெளிநாடுகளில் இருந்து கலந்து கொள்ளும் எழுத்தாளர்கள் இலங்கையின் உண்மை நிலவரத்தை அறிவதற்கு இதனையொரு வாய்ப்பாகக் கருத முடியும். தமிழகத்திலிருந் து திருமாவளவன் செல்லவில்லையா? அந்தச் சந்திப்புடன் ஒப்பிடும்பொழுது இந்தச் சந்திப்பு அரசியல்ரீதியில் அஞ்சும் வகையிலானதல்ல.
தேவையற்ற சந்தேகங்களை வெளியிட்டுத் தமிழ் எழுத்தாளர்கள் மத்தியில் பிளவுகள் ஏற்படுவதை எஸ்.பொ. தவிர்க்க வேண்டும். அதே சமயம் அரசியல் பேச மாட்டோமென்று மேற்படி சந்திப்பின் ஏற்பாட்டாளர்கள் அடம் பிடிக்க கூடாது. மேற்படி ஒன்று கூடலில் தற்போதுள்ள ஈழத்தின் நிலைமைகளையிட்டு நியாயமான தமது கண்டனங்களை எழுத்தாளர்கள் வெளியிட்டு இறுதியில் அறிக்கை வெளியிட வேண்டும். வடகிழக்கின் அத்து மீறிய அரசின் குடியேற்றத் திட்டங்கள், இராணுவமயமாக்கல் , தடுப்பு முகாமகளில், சிறைச்சாலைகளில் வாடும் மக்கள், மீளக்குடியேற்றப ்பட்டவர்களின் ஆதரவற்ற நிலை, பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... இவை பற்றியெல்லாம் தங்களது கருத்துகளை எழுத்தாளர்கள் வெளியிட அனுமதிக்க வேண்டும். யுத்தக் குற்றங்கள் பற்றிய நியாயமான சர்வதேச, உள்ளூர் விசாரணைகளை வலியுறுத்த வேண்டும். இவ்விதம் செய்யாமல் ஒருவரையொருவர் சந்திப்பதற்காகத ்தான் இந்தக் கலந்துரையாடலென் றால் அதற்கு அர்த்தமேயில்ல
மாயவனுக்கு நன்றிகள்.
தமிழக எழுத்தாள நண்பர்களே... (ஏனையோருக்கும் ) சில வேளைகளில் நீங்கள் இது விடயத்தில் அவசரப்பட்டு அணுகுவதை சிறிது கவனித்துக்கொள் ளுங்கள்... சரிபார்த்துக்கெ ாள்ளுங்கள்....
RSS feed for comments to this post