elu kundavarஇந்தியாவில் ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்ட காலத்திலிருந்தே அதை எதிர்த்துப் பெரும் போராட்டங்கள் இம்மண்ணில் நடைப் பெற்று வந்துள்ளன.. அந்த போராட்டங்களில் இந்திய அளவில் பழங்குடி இன மக்களின் பங்கு ஆரம்பத்தில் இருந்தே இருந்துள்ளது.

தேசத்தின் மீது உண்மை பற்று பழங்குடிகளுக்கு இருப்பதில் ஆச்சரியம் படுவதற்கு இல்லை... மண்னாசை பொன்னாசை இவர்களுக்கு இயல்பாகவே குறைவு என்பதே காரணம்.

ஆங்கிலயே ஆதிக்கத்தை எதிர்த்த சூயார்பழங்குடிகள் ஏழாண்டுகள் தொடர்ச்சியாகக் கிளர்ச்சி ஏற்படுத்தி உள்ளனர். வில் அம்புகளை வைத்து மட்டுமே பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடியவர்கள் சந்தால் மற்றும் முண்டா பழங்குடிகள்.. ஆங்கிலேய ஆதிக்கம் வேகமாக வேரூன்ற முடியாதபடி தடுத்ததில் பழங்குடிகளுக்கு முக்கியமாகக் உண்டு..

அவர்களின் வணிக வாகனங்கள் மலைகளுக்கு இடைபட்ட கணவாய்ப் பகுதிகளைக் கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டன. ஆம் வாகனங்கள் மறித்து சூறையாடியதோடு ஆயுதங்களையும் கொள்ளையடித்தனர்.

அதனுடைய நீட்ச்சியாக 1857 ல் ஆரம்பித்த சிப்பாய் கலகம் தொடங்கி இந்திய விடுதலை போராட்டம் 1919 - முதல் 1947 - வரை படிப்படியாக தேசம் முழுவதும் ஆங்கிலேய எதிர்ப்பு குரல் முழங்கியது..

அதில் காந்தியடிகள் அகிம்சை வழியில் அகில இந்திய அளவில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட்-8 தேதி அன்று மும்பையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

1942 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்த இயக்கம் தான் இந்திய சுதந்திர போராட்ட வரலாற்றில் கடைசி அத்தியாயமாக எழுச்சி உடன் அமைந்தது..

‘நாம் இம்மண்ணிற்கு சுதந்திரம் பெற்றுத்தருவோம் இல்லையேல் செத்து மடிவோம்’ என்று முழக்கமிட்டு அடிமைத் தனத்தை அகற்றாது அதைப் பார்த்துக் கொண்டு வாழ முடியாது என்று கூறிய காந்தியடிகள், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு முழக்கமிட்ட சொல் ‘செய்து முடி அல்லது செத்துமடி..’ என்கிற மகத்தான சொல்..

இந்த சொல் தேசமெங்கும் சுதந்திர போராடத்தில் தன்னை அர்ப்பணித்து விடுதலைக்களத்தில் இருந்த வீரர்களை மிகவும் கவர்ந்தது. மற்றும் பலரை பங்கேற்க வைத்தது. இந்த இயக்கம் வளர்ந்து இந்திய விடுதலைப் போரில் ஓர் திருப்பு முனையாக அமைந்தது.

இப்போராட்டம் பிரிட்டிஷ் ஏகாதிப்பத்திய வெள்ளயர்களுக்கு பெரும் ஆத்திரத்தை மூட்டியது. ஆகஸ்ட் புரட்சி (வெள்ளையனே வெளியேறு இயக்கம்)தீவிரம் அடைந்து தமிழகத்திலும் தீ போல் பரவியது.

கோவையில் விமான தளத்தை கிளர்ச்சியாளர்கள் தீயிட்டு அழித்தார்கள். இராணுவ முகாம் ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டு, அகற்றினார்கள், ஊரெங்கும் ஆங்கிலேயர்களுக்கு எதிர்ப்பாக போராட்டக்காரர்கள் குரல் மேலோங்கி இருந்தது.

குறிப்பாக மதுரை, திருச்சி, இராமநாதபுரம் மாவட்டங்களில் கிளர்ச்சிகள் தீவீரமடைந்தது. மண்ணின் பூர்வகுடிகள் மீது போடப்பட்ட பல கொடுஞ்சட்டங்களும் இம்மாவட்டங்களில் போராட்டம் தீவிரமடைந்ததிற்கு ஒரு காரணம்.

இப்படி பல்வேறு கிளர்ச்சியின் ஒரு பகுதியாகதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் ஆகஸ்ட் புரட்சி மிக தீவிரமடைந்தது. இந்த மாபெரும் இந்திய விடுதலைப் போராட்ட புரட்சியில் தமிழகத்தில் முதன்மையான பங்கை இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியில் அரங்கேறிய போராட்டம் பெற்றது. இது போராட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.

அப்போராட்டத்தில் நாட்டு விடுதலைக்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட மக்கள் போராட்டகாரர்களாக தன்னையே அர்ப்பணித்தார்கள்.

அதில் குறிப்பாக தமிழினத்தின் தாய்குடியான குறிஞ்சி குறவர் பழங்குடியினத்தைச் சார்ந்த ஏழு குறவர்கள். இப்போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்று கிளர்ச்சி செய்தனர். இது திருவாடானை போராட்டத்திற்கு பெரும் வலுவூட்டியது.

கிளர்ச்சியில் ஈடுபட்ட ஏழுபழங்குடியினர்

1) பெரியாம்பிளை குறவனார்

2) சுந்தரகுறவனார்

3) இருளாண்டிகுறவனார்

4) ஆறுமுககுறவனார்

5) காளிமுத்துகுறவனார்

6) கொட்டயகுறவனார்

7) ரங்ககுறவனார்

ஆகிய எழுவரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் அவர்களின் அடக்குமுறைக்கு எதிராகவும் போரடினார்கள்.

1942 யில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொலைத் தொடர்பு சாதனங்களுக்கு பெறும் சேதம் ஏற்பற்படுத்தினார்கள். ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில் இருந்த திருவாடனை காவல் நிலையத்தைக் கைப்பற்றிய கிளர்ச்சிகாரர்கள் சிறைக் கதவுகளை உடைத்து ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபட்டதிற்காக கைது செய்து அடைக்கப்பட்ட மற்ற போராட்டகாரர்களை விடுதலை செய்தார்கள்.

ஆங்கிலேயர்களின் விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மீறிய கிளர்ச்சிகாரர்களான அந்த எழுவர் உள்பட பங்கெடுத்த அனைத்து போராட்டகாரர்களையும் ஒடுக்குவதற்கு தங்களால் முடியாது என்று உணர்ந்த ஆங்கில அரசு இராணுவத்தினரை அழைத்தனர். ஆனால் இராணுவத்தினருக்கும் சுதந்திர போராட்ட வீரர்கள் கட்டுபடவில்லை.

ஆத்திரமடைந்த இராணுவத்தினர் கிளர்ச்சியில் ஈடுப்பட்டவர்களின் கிராமங்களில் அவர்கள் குடியிருந்த குடிசைகளை தீயிட்டு கொளுத்தினார்கள். போராட்டகாரர்களை கைது செய்யமுடியாத இராணுவம் போராட்டகாரர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்களை கழுதையின் மேல் ஏற்றி ஊர்வலம் வரச்செய்து அவமானப் படுத்தினார்கள்.

பெண்கள் / குழந்தைகள் என்று பாராமல் அனைவரையும் கொடுமைப்படுத்தினார்கள் துன்புறுத்தினார்கள். இது எரிகிற நெருப்புக்குள் மீண்டும் எண்ணெய் ஊற்றுவது போல கிளர்ச்சியாளர்களின் மன நிலைக்கு இருந்ததே ஒழிய அடங்கிவிடவில்லை. மேலும் இந்நிகழ்வு போராட்டகாரர்களை ஆத்திரம் மூட்டியது. போராட்டங்கள் எரிமலை போல் எழுந்தது.

வெள்ளையர்களுக்கெதிரான போராட்டத்தில் தன் மீது ஆங்கிலேய துப்பாக்கி குண்டுகள் நெஞ்சை துளைத்தாலும் பரவாயில்லை என உறுதியேற்று வந்தே மாதரம் என்கிற முழக்கம் வானதிர முழங்கி மீண்டும் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் திருவாடானையில் மீண்டும் போர் ஏற்பட்டது.

அடக்குமுறை செய்த ஆங்கிலேயர்களையும் ஆங்கிலேய உதவியாளர்களையும் எதிர்த்தார்கள் / தாக்கினார்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இயங்கிய காவல்நிலையங்கள் / சிறைச்சாலைகள் தீயிட்டு கொளுத்தினர்.

இந்நிலையில் இராணுவத்தினர் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வரவழைத்து போராட்டகாரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் பலர் சுட்டு கொல்லப்பட்டார்கள்.

பலர் கொடுமையான முறையில் தாக்கிக் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களை அலிபுரம் சிறை / மதுரைச்சிறை போன்ற சிறைகளில் அடைக்கப்பட்டனர்.

இப்போராட்டமானது தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மாபெரும் போராட்டமாக இருந்துள்ளது. திருவாடானை கிளர்ச்சி இந்திய சுதந்திர விடுதலை போரில் திருப்புனை ஏற்படுத்தியது. இந்தியா முழுவதுமாக பேசப்பட்டது. போராட்டக்காரர்களின் தியாகம் அனைவரையும் வியப்பை ஏற்படுத்தியது.

1888 ல் பிறந்த ஆறுமுககுறவனார், இவர் தந்தையின் பெயர் குப்பையாண்டி குறவனார், இராமநாதபுரம் திருவாடனைப் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுப்பட்டதால் அவசரச் சட்டம் 6-வது பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டும் இபிகோ 147 - வது பிரிவு மற்றும் இந்தியப் பாதுகாப்புச் சட்டம் (38)5 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டார். 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு. மதுரை மத்தியச் சிறையில் தண்டனை அனுபவித்து வீர மரணம் அடைந்தார்.

திருவாடனை அதே புரட்சியில் பங்கு கொண்ட முனியாண்டி குறவனாரின் மகன் காளிமுத்து குறவனார் 1915 யில் பிறந்த இவர் துப்பாக்கி காயங்களுடன் இபிகோ 147 வது பிரிவு மற்றும் இந்திய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அலிப்புரம் சிறையில் அடைக்கப்பட்டு வீரமரணம் அடைந்தார்.

கண்ணப்பகுறவனார் மகன் கொட்டயகுறவனார் 1906 ஆம் ஆண்டு பிறந்த இவர். சிறு வயதிலிருந்து சுதந்திர வேட்கையை உயிர்மூச்சாக பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்தும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது திருவாடனையில் நடந்த கிளர்ச்சியில் தீவிரம் காட்டிய கொட்டயகுறவனார் மீது இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து 7 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மதுரை மற்றும் அலிப்புரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தும்.

தூக்குதண்டனை பெற்றும் வீரமரணத்திற்க்கு விதையிட்டார். உதயன் குறவனாரின் மகன் ரங்ககுறவனார் கிளர்ச்சி செய்த காரணத்தால் இபிகோ147 -வதுபிரிவின் கீழ் கைது செய்து 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையை துப்பாக்கி காயங்களோடு மதுரை மத்தியச் சிறையில் தண்டனை அனுபவிக்கப்பட்டு. தூக்கலிடப்பட்டார்.

குறிஞ்சி நில தொல் தமிழர்களான ஏழு குறவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்குவகித்து இந்திய விடுதலைக்கு போராடி குறிஞ்சி நில தமிழின தாய்குடி குறவர்கள் தங்கள் பங்களிப்பை செய்து தான் சார்ந்த மண்னையும் மக்களையும் தன் உயிரினும் மேலாக நேசித்துள்ளனர்.

அவர்களுடைய அர்ப்பணிப்பு தியாகத்தையும் நினைவுகூர்ந்து அவர்களை வணங்குவோம்.

- பொ.மு.இரணியன்

Pin It