periyarists meeting

பாஜக - ஆர்.எஸ்.எஸ் ஆட்சியின் அடக்குமுறைகள் எல்லை மீறிக் கொண்டிருக்கின்றன. ஒற்றை மொழி, ஒற்றை தேசம், ஒற்றைக் கலாச்சாரம் என்ற பாசிச இந்துத்துவ அரசியலை தீவிரமாக முன்னெடுத்து இந்திய ஒன்றியத்தில் வாழ்கிற அனைத்து தேசிய இனங்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து வருகிறார்கள். தமிழர்களின் அரசியல், பொருளாதார, பண்பாட்டு உரிமைகளைப் பறித்து வருகிறார்கள்.

அதன் வெளிப்பாடாகத்தான் திருக்குறள் மனு சாஸ்திரத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது என்று புத்தகம் வெளியிடுவதும், சமஸ்கிருதம், ஹிந்தி போன்ற மொழிகளைக் கட்டாயமாக்குவதும் செய்கிறார்கள். தமிழர்களின் வளங்களை (நிலக்கரி, பெட்ரோல், மீத்தேன்) வரைமுறையின்றி சூறையாடி பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கிறார்கள். கீழடி வரலாற்றினை மறைக்கிறார்கள். நீட் தேர்வைத் திணித்து கல்வி உரிமையை அழிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் எதிர்த்து தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக ”சாதி” எனும் நஞ்சினை திட்டமிட்டு தமிழகத்தில் இந்துத்துவ கும்பல்கள் பரப்புகின்றன‌. சாதிய அமைப்புகளைத் திரட்டி கூட்டங்கள் நடத்துகிறார்கள்.

”காவி எங்கள் நிறமல்ல, கருப்பே எங்கள் நிறம்” என்று காட்ட வேண்டிய தருணம் இது. மனிதநேயம் காக்க, தமிழினத்தின் உரிமை மீட்க தமிழ்ப் பெருங்கூட்டம் ஒன்று திரண்டு நிற்க வேண்டிய தருணம் இது.

நமது உரிமைகளுக்காக, நமது சுயமரியாதைக்காக தனது வாழ்நாள் முழுதும் போராடிய தலைவர் தந்தை பெரியார் அவர்களுடைய நினைவு நாளை முன்னிட்டு திசம்பர் 23-ம் தேதி பெரியாரிய உணர்வாளர்கள் அனைவரும் திருச்சியில் லட்சம் பேராய் ஒன்று கூடுகிறோம். அனைத்து பெரியாரிய இயக்கங்களும், தோழர்களும், படைப்பாளிகளும், தமிழ் உணர்வாளர்களும், இளைஞர்களும் திரள்கிறார்கள்.

தமிழின உரிமை மீட்போம்!
கருஞ்சட்டைப் பேரணி 23.12.2018
திருச்சி உழவர் சந்தை

அழைக்கிறது: பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு.

இந்த மாநாட்டிற்கான நன்கொடை அளித்திட வேண்டுமென பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கையினை முன்வைக்கிறோம். மாநாட்டு நன்கொடை அளிப்போர் கீழ்க்கண்ட வங்கி கணக்கு எண்ணிற்கு அனுப்பி மாநாடு வெற்றி பெற ஒத்துழைப்பு அளியுங்கள்.

Account Name: Aranga gunasekaran
Accout No: 1827173000000950
IFSC code: KVBL0001827
Bank: KARUR VYSYA BANK
Branch: Thanjavur RR Nagar

Pin It