மௌனத்தைப் போல அதிகாரத்தை வலிமைப்படுத்துவது வேறு எதுவும் இல்லை – லியோனார்டோ டாவின்சி

ஓராண்டுக்கும் மேலாக வீரியத்துடன் நடைபெற்று வரும் நம் காலத்தின் மகத்தான போராட்டம் குறித்தும் தொடர்ச்சியாக போராடி வரும் மக்கள் குறித்தும் களத்திலிருந்து விலகியிருக்கும் சமூக வெளியில் சிறு வெளிச்சம் பாய்ச்சுவதே இந்த ஆவணப்படங்கள் திரையிடலின் நோக்கம். மக்கள் போராட்டத்தின் வெவ்வேறு கட்டங்களை, வெவ்வேறு வடிவங்களை இந்த திரையிடல்கள் மூலம் பதிவு செய்யவும், அந்த மக்களின் குரல்களை பரவ செய்யவும் முடியும் என்று நம்புகிறோம்.

அவர்களின் குரல்களோடு உங்களது குரல்களையும் இணைக்க வாருங்கள். ஏனெனில் மௌனம், அதிகாரத்தை மட்டுமே வலுப்படுத்தும்.

எங்கு: காட்சித் தகவலியல் அரங்கு, லொயொலோ கல்லூரி

எப்போது: டிசம்பர் 10 (மனித உரிமைகள் தினம்), மாலை ஆறு மணி.

ஆவணப்படங்கள் குறித்து பகிர்பவர்கள்:

எழுத்தாளர் ஜோ.டி.குருஸ்
இயக்குனர் சீனு ராமசாமி
இயக்குனர் ராம்
இயக்குனர் ரஞ்சித்
எழுத்தாளர் பாஸ்கர் சக்தி
எழுத்தாளர் அஜயன் பாலா.

தொடர்புக்கு: 98410-31730

Pin It