கடந்த ஒரு வாரமாக பாலஸ்தீனத்தின் மீது ரவுடித்தனமாக தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இஸ்ரேலுடனான தூதரக உறவை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தியும் தமுமுக சார்பில் எதிர்வரும் 23.11.2012 (வெள்ளி) அன்று மாலை 4 மணிக்கு சென்னை மெமோரியல் ஹால் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

இஸ்ரேலின் பயங்கரவாதத்தைக் கண்டித்தும், இஸ்ரேலுடனான தூதரக உறவை மத்திய அரசு துண்டிக்க வலியுறுத்தியும் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுமுக மாநிலத் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் தலைமை ஏற்க உள்ளார்கள்.

மனித உரிமைகளில்  அக்கறை  உள்ள அனைத்து கட்சியனரும், இயக்கத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

- தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

Pin It