அன்புத் தோழர்களே!

அக்டோபர் 2ம் தேதி கோவையில் நடக்கவிருக்கும் விடியல் சிவா அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு அனைவரையும் அழைக்கிறோம்.

இந்நினைவேந்தல் நிகழ்வின்போது விடியல் சிவா அவர்களின் கனவு திட்டமான மாவோ படைப்புகள் பற்றிய கருத்தரங்கு  இரண்டாம் அமர்வில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

விடியல் சிவா அவர்களின் நினைவேந்தி, பதிப்பக உலகத்தில் அவர் விட்டுச்சென்ற பதிவுகளை தொடர்ந்து தக்க வைக்கவும் மேலும் தொடரவும் நம் கரம் இணைப்போம்.

நாள்: 02.10.2012 (செவ்வாய்)

நேரம்: காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை. (மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது)

இடம்: S.N.அரங்கம், அல்வேனியா பள்ளி எதிரில், திருச்சி சாலை, ராமாநாதபுரம், கோவை-45.

நண்பர்களுடன் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
பொன்.சந்திரன்.
விடியல் சிவா நினைவேந்தல் குழு சார்பாக.

Pin It