புறநானூறு,  ‘எவ்வழி நல்லவர் ஆடவர்
  அவ்வழி நல்ல வாழிய நிலனே’ என்று மனிதனின் வாழ்வில் மண்ணின் மைந்தர்களின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றது. மண்ணுக்கும் அம்மண்ணில் பிறந்த மனிதனுக்கம் உள்ள தொடர்பு, உடலுக்கும் உயிருக்கும் இருக்கின்ற தொடர்பைப் போன்றது. இத்தகய தொடர்பின் தாக்கத்தால் உருவான கவிதைத் தொகுப்பே சிற்பியின் ‘ஒரு கிராமத்து நதி’ யாகும். இந்த பிறந்த மண்சார்ந்த படைப்புச் சிறப்பிற்காகவே இந்நூல் 2003-ல் சாகித்ய அகாடமி விடுதலைப் பெற்றது என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.
 
 பாலக்காட்டுக் கணவரியன் தெற்குத் தாழ்வாரத்தில் அமைந்த ஆத்துப் பொள்ளாச்சி கிராமம் சிற்பியின் பிற்நத மண்ணாகும். சுpற்பி, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் எத்தகைய அகப்புற மாசுகள் படியாத சூழலில், தன் வாழ்வு அரங்கேறிய ஊரை – ஊரை வாழ்வித்த நதியை – வளம் சேர்த் இயற்கையை – சரித்திரச் சுவடுகளை – தன் மனதில் பதிவான அம்மண்ணின் மைந்தர்களை மண்ணியப் பற்றோடு பதிவுசெய்கிறார். இப்பதிவை, மானிடவியல் பார்வையில் ஆராயும்வகையில் இக்கட்டுரை அமைகின்றது.
 
நதியை நேசித்தல்

 சிற்பி தன் கிராமத்தைச் சார்ந்து ஓடிய நதியை அதன் தொப்புள் கொடியாகப்பார்க்கின்றார். தனக்கும், அந்நதிக்கும் இடையிலான தொடர்பை அவர்,
  “தானும் உணவாகி
  மீனும் உணவாகி
  இந்த நதிக்கு
  நானும் உணவானேன்” (ஒ.கி.ந.ப.6)
என்று விளக்கிக் காட்டுகின்றார்.
 
 நதிகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது. அதனுடைய இயற்கையான ஓட்டம் மானுடத்திற்குத் தடையின்றிச் சொந்தமாக வேண்டும் என்று சிற்பி விரும்புகின்றார். அணைகளின் நீர்த்தேக்கம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் பயனைத் தருகின்றது. இந்தத் தேக்கத்தைக் கூட சிற்பி விரும்பாத தன்மையை,
 
  “அணைகளை உடையுங்கள்
  ஆறுகள் பாடட்டும்” (ஒ.கி.ந.ப.7)
 
ஏன்று சொல்கிறார். இயற்கையை நேசிக்கும் சிற்பி தன் கிராமத்து நதியையும் தாயாக நேசிக்கிறார். தன் கிராமத்தை வளத்தோடு வாழவைக்கும் நதியுடன், தானும் சங்கமம் ஆகத்துடிக்கும் தவிப்பை,
 
  “இது என் உதிரத்தின் உப்பு
  இது என் தாய்ப்பால்”(ஒ.கி.ந.ப.10)
 
என்ற வரிகள் தெரியபடுத்துகின்றன. நதிக்கும் தனக்கும் உள்ள தொடர்பை, நதிப்படுகை’, தாய்வீடு’, கோரைப்பாய்’, வீணை’, பள்ளியறை’, துயரங்களின் வடிகால், சந்தோஷத்தின் சங்கமம்’ என்று பட்டியலிட்டுத் தருகின்றார்.
 
 பூமித்தாயின் மாராப்பாகத் திகழும் அந்நதியே ஆத்துப் பொள்ளாச்சியின் வாழ்வுக்கும், வளத்திற்கும் அடிப்படை என்பதை,
 “ஆடிஆடி நகரும்
 நடனக்கார நதி
 இல்லாவிட்டால்
 சபிக்கப்பட்ட
 இந்தக்கிராமதத்தை
 யார் சீண்டுவார்கள்?” (ஒ.கி.ந.ப.12)
என்று கூறவதில், சிற்பி நதிக்குத் தரும் மரியாதையைக் காணமுடிகின்றது.
 
இயற்கையை நேசித்தல் :

 சிற்பி, தன் கிராமத்தில் மக்களுக்கு நிழல்தரும் அத்திமரத்தை ஊர்காக்கும் காவலனாகப் பார்க்கின்றார். அம்மரத்தின் சிறப்பை,
 
 “அந்த அத்திமரமும்
 கெத்து கெத்தென்று
 ஆற்றங்கரைக் கொரு
 நிரந்தரக் காவலனாக” (ஒ.கி.ந.ப.18)
 
நிற்கின்றது என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றார். அந்த அத்திமரம் இன்று வெட்டப்பட்டு அந்த ஞாபகம் மட்டும் எஞ்சி இருப்பதை,
 
 “நாற்பது இலையுதிர்காலம்
 கடந்து போனபின்
 ஆற்றங்கரை யோரம்
 காவல் இருந்தது
 ஒரு ஞாபகம் மட்டும்” (ஒ.கி.ந.ப.19)
 
என்று தாயாகக் காவலானாக, அம்மாவின் முத்தம் போல் குளிர்ச்சி தந்த மரம் இன்றில்லை என்பதை ஆதங்கத்துடன் புலப்படுத்தகின்றார்.
 
காற்றை நேசித்தல்

 சிற்பி, மாசு சூழ்ந்த இந்த இயந்திரச்சூழலில் மனதைச் சுகமாகத் தாலாட்ட சுத்தமானக் காற்றைச் சுமந்துவர நதியை அழைக்கின்றார். மலையாளக் காற்று தேக்குமரக் காடுகளில் பாய்ந்து, தென்னை மரங்களைத் தடவி, மிளகுக் கொடிகளை வருடி, தாழம் மடல்களை அசைத்து,
 
 “இளங்காலைப் பொழுதில்
 தெருவே மனக்கவரும் பூக்காரி போல்
 வாசனை நடை போட்டு வா” (ஒ.கி.ந.ப.40)
என்று அழைக்கின்றார்.
 
மண்ணின் மைந்தர்களை நேசித்தல்

 சிற்பி, தன் கிராமத்து மக்களின் எளிய வாழ்வு, களங்கமற்ற பேச்சு, இயல்பான அணுகுமுறை, தொடர்புடைய நிகழ்வுகள் ஆகியவற்றைப் பிறந்த மண்ணின் மேல் கொண்ட ஆசையின் தாகத்தோடு அசைபோடுவதைக் கவிதைகள் புலப்படுத்துகின்றன.
 
 சிற்பி, இன்றைய முதலாளித்துவச் சமுதாயத்தில் தீவுகளாக வாழ்கின்ற நகரியசூழலை ஒருபுறம் ஒதுக்கிவைத்து, தன் கிராம மக்கள், நின்று பேசி சாவகாசமாய் வாழும் போக்கைச்சுட்டிக்காட்டுகின்றார்.
 
 ஊரையே உறவாக நேசிக்கும் மாமனிதர் பாட்டைய்யா, கதை எடுக்காத பீமனான ஊமையன்: இளம்பருவத்தோழன் ஆறுமுகம்: ஓருக்கெல்லாம் உதவும் அங்கம்மா: ஆண்டுதோறும் தன் தலைமையில் தெருக்கூத்தை அரங்கேற்றும் மயில்சாமிக் கவுண்டர்: பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் பிரியமான மாப்பிள்ளைக் கவுண்டர்: ஆட்டுக்கல் கொத்தும் பறவை பழனியப்பன்: ஆசாரி தங்கப்பன்: ஊருக்கெல்லாம் மருத்துவம் பார்க்கும் வெள்ளைச்சாமியார் என்று அக்கிராமத்தில் பாரம்பரியப் பண்பாட்டுச் சின்னங்களாக உலாவந்த மக்களை அவர்தம் செயற்பாட்டுப் பிண்ணனியோடு சிற்பி சித்தரிக்கின்றார்.
 
 சிற்பி, அம்மக்களுள் தன் தாயைப் தனியே பிரித்துப்பார்க்கிறார். தன் குடும்பத்தைப் போலவே ஊர்மக்களையும நேசித்துவாழ்ந்த தன் தாயைப்பற்றி அவர்,
 “நேசிப்பு நேசிப்பு
புருஷனைப் போலவே
 பண்ணையத்தையும்
 குழந்தைகள் போலவே
 எருமைகளையும்
 உறவுகளைப் போலவே
 அக்கம் பக்கத்தையும்..” (ஒ.கி.ந. ப.29)
நேசித்த, அழித்து எழுதமுடியாத சித்திரம் போன்றவள் என்று பெருமைப் படுத்துகின்றார்.
 
விழாக்களை நினைவு கூர்தல்

 சிற்பி கிராமதேவதையான மாகாளி அம்மனுக்கு எடுக்கப்படும் பண்டிகையைக் குறிப்பிடுகின்றார். மக்கள், மழைபெய்யத் தவறும் காலங்களில் அம்மனுக்கும், விநாயருக்கும் மழை வேண்டி விழா எடுப்பார். விழா எடுத்தவிதத்தைச் சிற்பி,
 “மாகாளி கோயில் முன்
 கொடும்பாவி எரித்தனர்
 மழைக்கஞ்சி காய்ச்சி
 மக்கள் எல்லாம் குடித்தனர்
 …….
 விநாயகருக்குக்
 குடம் குடமாய்
நீராபிஷேகம் செய்தனர்” (ஒ.கி.ந.பக.86-87)
என்று விளக்குகிறார்.
 
சரித்திரச் சுவடுகள்

 சிற்பி, தன் கிராமத்தின் சரித்திரச் சுவடுகளைப் பற்றிப் பெருமிதத்துடன் பகிர்ந்து கொள்கிறார். ஆற்றுப்படுகைகளில் கிடைத்த சங்ககால காசுக்கள், திகம்பரச் சமணர் கற்படுக்கைகள், தீர்த்தங்கள் சிலைகள் என்று சரித்திரச் சின்னங்களை அவர் பட்டியலிட்டுத் தருகின்றார். (ஒ.கி.ந.பக.58-59)
 
பறைச்சிற்பங்கள்

 சிற்பி, நதியோரம் கிடந்த பாறைகள் மேல் நதியின் நீரோட்டம் ஏற்படுத்திய இயற்கைச் சிற்பங்களை ரசத்து எழுதுகின்றார். அப்பாறைச் சிற்பங்களை,
 
 மைக்கேல் ஏஞ்சலோக்கனின்
 கர்வத்தை அடக்கும்
 சிற்பக் கலைக்கூடம் (ஒ.கி.ந.ப.22)
என்று மகிழ்ச்சியுடன் வருணிக்கிறார்.
 
நிறைவாக

 சிற்பியின் ஒவ்வொரு கவிதையிலும் தான் பிறந்த மண்சார்புடைய அனுபவம், பாதிப்பு தாக்கம், நேசிப்பு ஆகியவை அழுத்தமான முத்திரையாக் பதித்துள்ள்மையைக் காணமுடிகின்றது.
 
 சிற்பி, நிகழ்வுகளை, செய்திகளை வெறும் கவிதைப்பதிவுகளாகத் தராமல், அவற்றை தன் உயிருடன், நாடிநரம்புகளுடன் தொடர்புகொண்ட உயிர்ப்புடன் வெளிப்புடுத்துகின்றார்.
 
 இன்று, இயந்திரக்கதியில் இயங்கும் மக்கட்கூட்டம், தனித்தனித் தீவுகளாக அந்நியப்பட்டு வாழ்ந்துவருகின்றது. இச்சூழலில், இந்த இருத்தல் மாற வோண்டும். ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணை நேசிக்க வேண்டும்: அம்மண்ணின் மக்களோடு உறவுகொண்டு வாழவேண்டும் என்ற சிற்பியின் ஆதங்கத்தை- எதிர்ப்பார்ப்பை அவருடைய ஒரு கிராமத்து நதி’ அறிவுறுத்தகின்றது. இந்த அறிவுறுத்தைல வழிமொழிந்து கட்டுரை நிறைவடைகின்றது.
 
முதன்மைச்சான்று நூல்

சிற்பி,    ஒரு கிராமத்து நதி,     கோலம் வெளியீடு, பொள்ளாச்சி,    முதல்பதிப்பு, டிசம்பர் 1998
 
சுருக்க விளக்கம்

1. ஓ.கி.ந.   ஒரு கிராமத்து நதி
2. ப.    பக்கம்
3. பக்.    பக்கங்கள்

Pin It