நான் உளிகள் உருவாக்கிய
காயங்களின் அழகான
தழும்பு...

வலிகளை இன்னும் தழும்புகள்
நினைவில் கொண்டிருப்பது பற்றி
காயங்களுக்கு என்ன கவலை...

என்னையன்றி வலிகளால் மட்டும்
என்னாகிவிடப்போகிறது...

நானிருப்பது எங்கு பிடித்தமில்லையோ
அங்கு தொடங்குகிறது போராட்டத்தின்
முதல் படி... 

 - ராம்ப்ரசாத், சென்னை (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It