girl_243உனக்கு

இணையத்தைப் பற்றி

தெரியவில்லை என்பதில்

பெரிய வருத்தமில்லை..

உனக்கு

என் இதயத்தையே

புரிந்து கொள்ள முடியாத போது

எதைத் தேடி

எதைக் கண்டடைந்து

என்னாகப் போகிறது.. ?

---------------------------

 

உன்னில்

விழுந்து கிடக்குமென்

இதயத்தின் கதறலே

உன் செவியில்

விழாத போது

எந்த சிம்பொனி

உன் காதுகளை எட்டும்?

---------------------------

 

உன்னைச் சுற்றி

வருமென் நினைவுகளை

புறந்தள்ளி

என் நேசத்திற்கு

பெரும்கொள்ளி

வைத்துவிட முயல்கிறாய்

ஒருக்காலும்

நீயளித்த நம்பிக்கை

வார்த்தைகளுக்கு முன்னால்

தோற்று திரும்பாதென் நேசம். 

- இவள் பாரதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It