ஒரு மதயானையின் நிழல்
என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது
விளக்குகளுக்கிடையே அகப்பட்ட ஸ்படிகமாய்ச்
குழப்பமடைந்திருந்த நாளில்
தீயசகுனங்களால் சப்தித்தது
தனது வாலைச் சுழற்ற
அதிர்ந்த நட்சத்திரங்கள் உதிர்ந்தன
மெளனம் வேய்ந்த உச்சிவேளைகளில்
பாறைகளை அலறச் செய்தது
விடாய் தீர்க்கப் போகையில்
நதியையே பருகித்
தன்மாமிசம் குலுங்கக் கொக்கரித்தது
தாமரைகள் பூத்த குளத்தையும்
கனவுகள் பூக்கும் இரவினையும்
வண்ணமிழக்கச் செய்தது
இன்று காலைதான் அம்மதயானை
என்னுள்ளே புகுந்தது
நிழல் கரைந்தது
- குட்டி ரேவதி
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை
- விவரங்கள்
- குட்டி ரேவதி
- பிரிவு: கவிதைகள்
செய்யுள் அப்படினு சொல்லக்கூடிய ஒன்னு என்றால் அது இது தான்
எனக்கு கவிதை அப்படினு சொல்லுறதில் உடன்பாடு இல்லை
மண்ட காய்ஞ்சு போய் இன்னைக்கு ஒரு நல்ல செய்யுள படிச்சிறமாட்டோம ா அப்படினு சல்லட போட்டு தேடினேன்
இப்ப நிம்மதியா போய் உறங்குவேன்
நன்றி
RSS feed for comments to this post