குருதிப்பெருவழியே வந்த என்னின்
பெருகும் உதிரத்திரை விலக்கி - எனக்கு உவந்த
முதல் முத்தம் என் கூடல்களின் உச்சங்களை
விட இனிது.
என் சிரிப்பில், முறைப்பில், களிப்பில் உன்னவனை
தேடிக்கண்டபின் காதலனாக்குவாய் - குறும்பில்
அழுகையில், பிடிவாதத்தில் உன் பிள்ளை கண்டு
மகிழ்வாய்,தூங்கும் வசத்தில் ,இடதுகை பழக்கத்தில்
உந்தை கண்டு சேயாவாய்.
முகம்பார்க்கும் ஆவலுக்கு ரசம் போன கண்ணாடி
தடையில்லை என நீ என்னுள் உன் உறவுகளை - தேடித்
தேடி கண்டெடுத்தாய். உன் காதலானாய்
தந்தையாய், மகனாய் உன் முந்தானை பிடித்தலைந்த
இந்தப் பேரனை விட்டு ஏன் கிழவி? செத்துப்போனாய்..........
- நா.செந்தில் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- நா.செந்தில்
- பிரிவு: கவிதைகள்