Indian brideதினமும் காலை
தாமதமாக எழுகையில்
திட்டும் அம்மாவிடம்
"எம்பொண்ணு ராஜகுமாரி
அவளத் திட்டாதே"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

உயிர்வாங்கும் பரிட்சை
நாட்களில் புத்தகம் நடுவில்
முகம் புதைத்து நான்
தூங்கிப்போனால்
"எழுந்திரிடா செல்லம்
கட்டில்ல படுத்து தூங்குடா"
என்று இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

கதவிடுக்கில் விரல்
சிக்கி காயத்துடன் நான்
சாப்பிட தவித்த நேரம்
சோற்றைப் பிசைந்து
பாசம் ஊட்டி
"நல்லா சாப்பிடுடா" என்று
இனி சொல்லமுடியாதப்பா
உங்களால்...

இவை எதுவுமே சொல்ல
முடியாவிட்டாலும்
நீங்கள் சுறுசுறுப்பாய்
ஓடுகின்ற
இந்த திருமண கூட்டத்தில்
மேடையில் அமர்ந்திருக்கும்
என் விழிகளைத் தொட்டுச்
செல்லும் உங்கள் பாசப்பார்வை
சொல்கிறதப்பா
"நல்லா இரும்மா" என்று.


நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It