அபயமெனக் கேட்டிருந்தால்
Brahminsதசையறுத்து புசிக்கக் கொடுத்திருப்போம்
ஆனால்
ஒரு அகதிக்குரிய நேர்மையை
ஒருபோதும் கைக்கொண்டதில்லை அவர்கள்

நட்சத்திரஒளி பொழியும்
இரவுகளின்மீது இருள்கவித்து
கன்றுகாலிகளையும் தவசங்களையும்
களவாடிப்போனதை
வயிற்றுப்பிழைப்புக்கான
திருட்டென மன்னித்திருக்கையில்
ஆயுதமுனையில் அடிமைகளாக்கி
வியர்வையின் ஆவிமேவிய
எமது மண்ணை
அவர்கள் அபகரித்த
வரலாற்றை திசைகளறியும்

பால்குடிமறவா எமது
பெண்சிசுக்களின் மார்பிலும்
பதிந்தன அவர்களது பற்குறிகள்
விஷமாகிக் கலந்த அவர்களின் ரத்தத்தால்
சீழ்கட்டி இன்றும் அழுகும் நாளங்கள்
எல்லாவகையிலும் களங்கமாக்கிய பின்
தூய்மைபேசி ஒதுக்கினர் எம்மை

உழைப்பின் நரம்புகள்
புடைத்துக் கொழுத்த
எமது ஏர்க்காளைகளை
யாகங்களில் பொசுக்கித்தின்று விட்டு
எம்மையேப் பூட்டினர் நுகத்தில்
நஞ்சேறியப் பாம்பென
நெளியும் புரிநூல் தரித்து
நாடெங்கும் நத்திப் பரவிய பின்
துகள்களாய் தூக்கிவந்து
கரையான் கட்டியப் புற்று
பாம்புப் புற்றென ஆனதுபோல்
இப்போது சொல்கின்றனர்
அவர்களுடையதாம் இந்நாடு.

ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It