கால் நனைத்து
அலையில் நிற்பதா
தலை நனைத்து
மூழ்கி குளிப்பதா
இடைவெளிகளின் மவுனம்
இம்சையானது
சொல்
கடலா நீ நதியா
நதியென்றால் பரிசலாக
கடலென்றால் பாய்மரமாக
இயலுமெதுவும் என்னால்
பூடகமான நீர்த்திடலே
எதுவாயினும்
முகத்துவாரத்தை கண்டுபிடி
முக்கியமாய்.
- அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.