Man in darkகடலா.. நீ நதியா

கால் நனைத்து
அலையில் நிற்பதா
தலை நனைத்து
மூழ்கி குளிப்பதா

இடைவெளிகளின் மவுனம்
இம்சையானது
சொல்
கடலா நீ நதியா

நதியென்றால் பரிசலாக
கடலென்றால் பாய்மரமாக
இயலுமெதுவும் என்னால்

பூடகமான நீர்த்திடலே
எதுவாயினும்
முகத்துவாரத்தை கண்டுபிடி
முக்கியமாய்.

அன்பாதவன், மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It