Loverநீ என்னிடம் தந்துபோன
சிலமுத்தங்களும்
புன்னகைகளும்
மட்டும் எனக்குப்
போதுமானதென்று
உனக்கு யார் சொன்னது...?

என் ஆயுளைத் தின்கிற
உன்
நினைவுகளின் காலடி
ஓசையற்று நகர்கிறது
தொலைவிற்கு...

உனக்கான கடிதங்கள்
எழுதப்படாமலேயே
எனக்குள் இறந்தன
கவிதைகளும்...

நீளும் தொலைவுகளை
நெருக்கத் திராணியற்று
நெளியும் என் வாழ்வு..

இப்போது
உன் காலடிகளையும்
தொலைவிற்கு
செலுத்துகிறது காற்று

மழையைப்போல
நிரந்தரமற்றிருக்கும்
நமது பிரிவு
அதைப்போலவே
அழுத்தமானதும்
கவனிக்கச்செய்வதும் கூட

த.அகிலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It