Poor motherதான் பெத்த
நாலு பையன்களுக்கும்
சர்க்கார் உத்தியோகம்

யார் கேட்டாலும்
பெருமையாகச் சொல்லும்
செல்லம்மாளுக்கு
ஒரு பையனும்
ஊத்தவில்லை
ஒரு வேளை கஞ்சி.

பசியோடு வந்தவளைப்
பார்த்து
“ஒரு வாய் சாப்புட்டு
போம்மா” என்கிறாள்
பப்பாளி விதைக்கும்
கள்ளிப்பாலுக்கும் தப்பிய
அவளது பெண் பிள்ளை.

கோவி. லெனின்இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It