மரித்தவர்கள் இடையில் வாழ்ந்ததான
என் நாள்கள் கழிந்தன.
என்னைச் சுற்றிலும் எங்கெல்லாம்
இந்த - திட்டமேதும் செய்யா
விழிப்பார்வைகள் நோக்கிக் கொண்டிருக்கின்றனவோ -
அங்கெல்லாம் என் ஆத்துமநன்றிக்கா
ஆற்றல்மிக்க அந்த வயதான சிந்தைகள்
சூழ்ந்து கொண்டுள்ளன.
என்றும் என்னைக் கைவிடாத தோழமைகள் அவை.
ஆற்றல் நிரம்பிய முதிர்ந்த சிந்தைகளான அவற்றோடுதான
நாள்தோறும் உரையாடியவண்ணம் இருக்கிறேன்.
இன்பத்திலும் செழுமையிலும் அவர்களோடு
ஆனந்தமாகப் பங்கேற்கிறேன்.
துன்ப துயரங்களில் விடுவிப்பையும் தேடுகிறேன்.
எண்ணமாழ்ந்த நன்றியுணர்வுடன் கூடிய கண்ணீர்ப்பனித்துளிகள்
அடிக்கடி என் கன்னங்களை நனைக்கின்றன -
எவ்வளவு அவர்களுக்கு நன்றிக்கடன் நான் பட்டுள்ளேன் என்ற
புரிந்துகொண்டு உணரும்பொழுது......
கடந்தும் கழிந்தும் போன ஆண்டுகள் பலவற்றில
மரித்தவர்களோடு என் எண்ணங்கள் உலவுகின்றன.
அவர்களின் அறவுணர்வுகள் அன்புசெய்கின்றன;
குற்றங்கள் கண்டிக்கின்றன;
அவர்களின் நம்பிக்கைகள் - அச்சங்களில் பங்கு கொள்கின்றன.
அவர்கள் உற்ற படிப்பினைகள் / பாடங்களிடமிருந்த
எளிமையான மனங்கள் மட்டுமே பிறப்பிக்கக்கூடிய
ஆலோசனைகளைப் பெறுகின்றேன்.
ஆம், என் நம்பிக்கைகள் மரித்தவர்களோடுதான்;
அவர்களுடனான என் இருப்பு அறியப்படாததாகவே நிகழும்.
எதிர்வின் எல்லாமுடனும் அவர்களோடுதான
நான் பயணம் செய்யப் போகிறேன்;
இருந்தாலும் இங்கே ஒரு பெயரை விட்டுவிட்டுத்தான் -
என்பதென் நம்பிக்கை.
புழுதியில் அப்பெயர் அழிந்து போகாது.

-கலா பசுபதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.) 

Pin It