ஏழ்மையின் தவிப்புகளை
கூரைபிய்க்கும் அடைமழையிடம்
புரியவைக்க போராடுகிறது
சேரிச் சிறுமியின் முனகல்
சப்தம்..
அழிக்கப் பிறந்த மழைத்துளிகள்
வெள்ளமென பெருக்கெடுத்து
அழித்துப்போனது அவளின் ஓட்டுவீடு
கனவுகளை...
விடியலில் முள்செடியொன்றில்
காய்ந்துகொண்டிருந்தது அச்சிறுமியின்
சடலம்.
சொல்லமுடியாத வலிகளை
காற்றில் எழுதிப் பறக்கிறது
ஒற்றைக்குயிலொன்று.
இலையுதிர்காலத்தின்
கடைசி இலை சத்தமின்றி
மெதுவாய் உதிர்கிறது
சேரிச் சிறுமியின் கேட்கப்படாத
முனகலென.
- நிலாரசிகன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ஆரியப் பார்ப்பனியப் பாசிசக் கருத்துகள் பொசுங்கட்டும்!
- குளிரூட்டும் ஆடைகள்
- பெண்களின் சமஉரிமைக்குத் தொடரும் போராட்டம்
- சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்
- காலம் காட்டும் மேஜிக்
- மாறுவேடம்
- ஜஸ்டிஸ் பத்திரிகையின் நிர்வாகம்
- பா.ஜ.கவின் வீழ்ச்சியை வழிமொழியும் வட இந்தியா!
- பாலாற்று நீரில் தமிழ்நாட்டின் உரிமையைத் தடுப்போம்!
- பத்தாண்டுகளுக்குப் பின் பேரா. சாய்பாபா விடுதலை