கொலை ஒன்று நிகழும்
பயத்தோடு காத்திருகின்றன நாம்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்!
முறைத்து கொண்டிருகிறது அன்று
நீ இருந்த அதே இருக்கையிலிருந்து
ஒரு முற்றுப்புள்ளி
இரக்கமற்று!

உன் பதில்களற்ற என் மடல்களில்
காத்திருக்கிறது
காதல் காமம் நட்பு இரத்த அடையாளங்கள்
ஏதுமற்ற 'யாரோ' வின் அன்பு
கவனிப்பாரற்று!

இரவின் இரகசியங்களை
தன்னுட்படுத்தி
சிறு அலைகளினூடே நிலையாய்
நகரும் ஆற்றின் மௌனத்தோடு
கடந்து செல்கிறாய்
உன் திசை நோக்கிய பாதையின்
நீளத்தோடு என் நிழல் பரப்பி
காத்திருக்கிறேன்!

பாம்பை கண்ணுற்ற
அனிலின் சப்தமென
தொடர்கிறது
'இறுக சாத்தப்பட்ட கதவொன்று'

இலக்குமணராசா இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It