பேருந்து பயணத்தின்
இரைச்சல் இடையே
பயணிகளுக்குள் பயணித்து
விட்டுச் சென்ற பாடநூலை
பெற்றுச் செல்வதிலும்,
தெரு சந்திப்பின்
வெட்டிப்பேச்சு மாநாட்டிலும்,
நீர் நிரம்பிய குடங்களுடன்
நெஞ்சம் நிரம்பாத மங்கையரிடமும்
என்மேல் ஏற்படாத
உன் காதல்
"வதந்தி"களாக
வாழ்ந்து செல்கிறது

செல்வா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It