இரவல் வாங்கிய
கைக் குழந்தையோடு
“இரவல் தாய்”
வேடமிட்டாள்
பெண் ஒருத்தி!

இரவல் குழந்தையை
அலற வைத்து
அவள் நடத்தியதோ
“யாசித்தல்”!.

இரவல் குழந்தையின்
உதடுகள் அழுதாழும்
உள்ளம் மட்டும்
சிரித்தது.

நடைபயிலாத
நாம் கூட
இரண்டு குடும்பங்களுக்கு
உதவி செய்கிறோமே!
கட்டாய நடிப்பினால்
அது போதுமென்று!


முத்துக்குமார் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It