என் வீட்டு ஜன்னலில்
வானத்தை காணவில்லை
எதிர்பட்டவை எல்லாம்
தூக்குமாட்டி தொங்கும்
வட்டுடைகளும்
வர்ணம் இழந்த ஜட்டிகளுமே...
வே(ர்)றெங்கோ..
இலை
உதிர்கிறது
காற்றிடம்
கொண்ட கலவியிலே
கசங்கிப் போயிருக்கவேண்டும்
அங்கும்
இங்கும் ஓடி..
மண்ணிலே மக்குகிறது
வளர்த்த மரம்விடுத்து
வே(ர்)றெங்கோ..
- பாண்டித்துரை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.