ரோஜாபூப் போல இருக்கிறது அதனாலேயே
உன்னை நான் அடிக்கடி
அழவைத்துப் பார்க்கிறேன்
பூவே இத்தனை அழகென்றால்
ரோஜா பழுத்தால் அதன் நிறமும் சுவையும் மணமும்
எப்படி இருக்கும்
சாறூறிய உனது உதடுகளை
யாருக்குத் தின்னத் தருவாய்
மகளே
என் ரோஜாப் பழமே
- மாலதி மைத்ரி இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.