பிரியாணி பொட்டலத்துக்கு
படுத்துக் கொள்கிறாள்
ஒருத்தி

பெருஞ் செல்வத்தை விட்டு
நொண்டிப் பயலோடு
ஓடிப் போகிறாள்
ஒருத்தி

ஒரு புள்ளையும் தன்
புருசனுக்கு பெறவில்லையாம்
ஒருத்தி

ஊரூறாய் மேய்ந்தாலும்
வீடு வந்து அடைகிறாள்
ஒருத்தி

பிள்ளைகள் பசியாற
பசி மறக்கிறாள்
ஒருத்தி

சந்துக்கு ஒருத்தனோடு
சம்போகம் செய்கிறாள்
ஒருத்தி

மற்றொருத்தியை
பிடித்தில்லை
ஒருத்திக்கு. 

மதியழகன் சுப்பையா, மும்பை இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 

Pin It