நீயும் நானும் யாரோ யாரோ
நிஜத்தில் கலந்தோம் பாலுடன் நீராய்!
உனக்கும் எனக்கும் உறவு சொல்ல
உறவோ பகையோ ஒன்றும் இல்லை!
பெற்ற தாய்களும் உறவுகள் அல்லர்;
பிறந்த நாமோ உயிரில் கலக்க!
எநதன் தந்தையும் உந்தன் தந்தையும்
எங்கோ பிறந்தனர்; இடமாறி வாழ்ந்தனர்!
இப்படி இருந்தும் எப்படிச் சேர்ந்தோம்?
ஈருடல் ஓருயிராய் இணையும் வணணம்!
செம்மண் நிலத்தில் மழையைப் போல
சேர்ந்து கலக்கும் காலம் போச்சு!
இணையம் வழியாய் இதயம் நுழையும்
இக்காலக் காதல் புதுமையே ஆச்சு!

ரா விமலன் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
Pin It