கடைசியில்
மழைபெய்தே விட்டது

வேப்பமரத்தின்
கிளைவரை
பெருகியது நீர்

பேராசை கொண்ட
மரம்
கிளைநுனியில்
தண்ணீர் குடிக்கிறது

பஞ்சிட்டானின்
சிறகு
மாதமொன்றாகியும்
உலரவில்லை

சிறகு கோதியே
களைத்தன
புள்ளினங்கள்

வொவ்வொரு
சொட்டையும் விடாமல்
பருகினவென் கண்கள்

மழைநீரில்
காகிதக் கப்பலென
கிளம்பி விட்டன
அவை

குளத்தில் மிதக்கிறது
என் சடலம்

பிணத்தை
விரைவில்
அப்புறப்படுத்தாவிடில்
நான்
குளத்தைத் தூர்த்துவிடுவேன்


வே. ராமசாமி
Pin It