காற்றினுள் சிறு கீற்றெனப்
பறந்து சென்றது மாலைவேளை

Sun setவார்த்தைகள் இறுகிக்கிடந்தன
வீழ்ந்த எரிநட்சத்திரம் குளிர்ந்ததைப்போல்

உணர்வுகள் பேதலித்துத் தவித்தன
பாத்திரத்திற்குள் தவறி விழுந்த பல்லியினும்
அதிகமாய்

பிரபஞ்சத்தின் இறுதிமலரைப் போன்ற
பாவனையுடன் உதிர்ந்தது
அம்மலர்

இப்படியாக நெருங்கும் இரவின்
அசைவைப் பார்க்கையில்
காலம் ஒரு சிறகெனக் கனக்கிறது

குட்டி ரேவதி

Pin It