இன்று முதல் முதலாக என்னை
அழைத்துச் சென்றனர் வெளியே
சூரிய வெளிச்சத்தில்.
வாழ்வில் முதன்முறையாக
திகைத்து நின்றேன்
வானம்
இவ்வளவு உயரம்
இத்தனை நீலம்
எத்தனை விரிவு !
பயபக்தியோடு உட்கார்ந்தேன்
தரையில் சம்மணமிட்டும்
முதுகை சுவற்றில் சாய்த்தும்.
இந்தக் கணத்தில்
வீழ்வதற்கு வலையொன்றும் இல்லை
போராட்டம் எதுவொன்றும் இல்லை
மனைவியும் இல்லை.
பூமியும் சூரியனும் நானும் தான்.
நான் மிக்க மகிழ்வோடிருக்கிறேன்.
மூலம் : Letters from a Man in Solitary, 1938
Nazim Hikmet.
- புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- புதுவை ஞானம்
- பிரிவு: கவிதைகள்