மாய மந்திரங்கள் மிகைத்த வாழ்வின் சுடரேற்றி வெளிச்சம் தந்த உன்னில் காற்றைத் தூவி அணைத்திடத் துணியா தேங்கிக் கிடக்கும் நீரில் நீராடும் சிறு குருவியொத்த மனதுன் காதல் கலந்து நிறைத்த மொழிகளை எண்ணிச் சிலிர்த்து வாழ்கிறது காதலின் நாளதைக் காவலுக்கு வைத்து நீலத்தினொரு சாயலோடு சிவந்திருக்கும் பொன்னந்தி மாலையொன்றிலுன்னழகிய விரல்கள் கோர்த்து ஒளிரும் வான் தாரகைகளின் தூரம்வரை நாமிருவரும் நடந்தபடி உன்னினிய வார்த்தைகளை மின்னல் துண்டுகளின் பிரகாசத்தோடான சிணுங்கல்களை கேட்டிடும் ஆவலை இன்றும் எழுதிக் காத்திருக்கிறேன் - எம்.ரிஷான் ஷெரீப், மாவனல்லை, இலங்கை. இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- எம்.ரிஷான் ஷெரீப்
- பிரிவு: கவிதைகள்