பேரரசு முழுமைக்கும்
நன்னெறியை நிலைநாட்ட
விழைந்த முன்னோர்கள்
முன்னதாக
தங்கள் மாநிலத்தை நெறிப்படுத்தினார்கள்
மாநிலத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் குடும்பத்தை நெறிப்படுத்தினார்கள்
குடும்பத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் ஆளுமையை நெறிப்படுத்தினார்கள்
ஆளுமையை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் இதயத்தை நெறிப்படுத்தினார்கள்
இதயத்தை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் சிந்தனையை நெறிப்படுத்தினார்கள்
சிந்தனையை நெறிப்படுத்த விரும்பியவர்கள்
முன்னதாக
தங்கள் அறிவை விரிவுபடுத்தினார்கள்
அந்த அறிவின் விரிவாக்கமே
அனைத்தையும் ஆராய்ந்து உணர்வதுதான்.
அனைத்தையும் ஆராய்ந்து உணர்ந்ததனால்
அறிவு முழுமை பெற்றது
அறிவு முழுமை பெற்றதனால்
சிந்தனை தூய்மையுற்றது
சிந்தனை தூய்மையுற்றதனால்
அறிவு நெறிப்படுத்தப்பட்டது
அறிவு நெறிப்படுத்தப்பட்டதனால்
ஆளுமை வளர்ச்சியுற்றது
ஆளுமை வளர்ச்சியுற்றதனால்
குடும்பம் நெறிப்பட்டது
குடும்பம் நெறிப்பட்டதனால்
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டது
மாநிலம் ஒழுங்காக ஆளப்பட்டதனால்
பேரரசு முழுமைக்கும்
அமைதியும் மகிழ்ச்சியும் தவழ்ந்து நிலவியது.
.
மூலம் : கன்பூசியஸ் , சீனா.
தமிழாக்கம் : புதுவை ஞானம்
புதுவை ஞானம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...
- விவரங்கள்
- புதுவை ஞானம்
- பிரிவு: கவிதைகள்