எனது நிழலாய் வருகிற உன் மேல்
நான் கொள்ளும் வெறுப்பையும்
அதையும் மீறிய உன் நேசமும்
இணையும் நேர்கோடுகளில்
உயிர்த்திருக்கிறது நம் நட்பு
...
வாளெடுத்து சொற்களாய் வீசும்போதெல்லாம்
லேசாய் சிரித்து அதிர வைக்கிறவன் நீ
...
நானோ வெறும்காற்றில் கைகளை வீசி
என்னையே வீழ்த்திக்கொள்கிறேன்
..
உன்னைப் புதைத்துவிட்டு உனதன்பை மட்டும்
பெறமுடியுமென குழி வெட்டி காத்திருக்கிறேன்
...
மஞ்சள் பூக்கள் உதிர்ந்த சாலையில்
கண்கள் பனிக்க விடைபெற்றாய்
..
இன்னும் அலைகிறேன் நல்லதொரு நட்பிற்க்காக
..
- சரவணன்.பெ (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- வேளாண் விளைபொருள்கள் விலைக்குச் சட்ட ஏற்பு வழங்கு!
- கலைஞர் நூற்றாண்டு: மறுவாசிப்பில் கலைஞரின் ‘நளாயினி'
- சனாதனம் குறித்த உயர்நீதிமன்றத்தின் முறையற்ற தீர்ப்பு!
- இறகுகளுக்காக ஒரு நூலகம்
- எதிர்மறை அலைகள்
- நான்
- பாரதத்தை எதிர்த்து இந்தியா பக்கம் நிற்பது ஏன்?
- தோல்வி பயத்தில் தரம் தாழ்ந்து பேசும் நரேந்திர மோடி!
- ஆரிய மாடலும், திராவிட மாடலும்!
- தோழர் சங்கீதாவை தாக்கியவர்களுக்கு பிணை மறுப்பு!
- விவரங்கள்
- சரவணன்.பெ
- பிரிவு: கவிதைகள்
RSS feed for comments to this post