எல்லாம் முடிந்ததென நீ
மொழிபுரியாத தேசத்தின்
மலையின் அப்புறத்திலான
தனித்த வீட்டில் மீண்டும் ஏகினாய்
ஆர்ப்பரித்தபடியே
கைபற்றிவரும் குழந்தைபோலான
நேற்றைய நினைவுகளை
உதறி நடக்க எனக்குத் திராணியில்லை
நீ முதன்முதலாய் மீட்டிவிட்ட
என் நரம்பு மெல்லிசை பரப்பி
அதிர்ந்துகொண்டேயிருக்க
நினைவின் திசைகளிலெல்லாம்
பிரவாகமெடுக்கும்
உன் பிரியத்தின் கூறுகளை
ஒவ்வொன்றாய் அச்சுக்கோர்க்கிறேன்
இன்று உணர்வற்றுக்கிடப்பினும்
நாளைய உயிர்த்தெழலில்
நம்பிக்கை எனக்கு!
- கோகுலன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
கீற்றில் தேட...
அண்மைப் படைப்புகள்
- ‘குடிஅரசு’க்கு வயது 100
- இடஒதுக்கீட்டின் எதிரி ஆர்எஸ்எஸ், பாஜக அடிபணிந்தது!
- நிலை தடுமாறும் நீலகிரி
- திருப்பூர் சங்கீதா மீது பொய் வழக்கு - குற்றவாளிகளுக்கு துணைபோகும் காவல் ஆய்வாளர்
- கௌரவ விரிவுரையாளர்கள் வாழ்வு, விடியலைப் பெறுமா?
- “திராவிட புரட்சிக் கவி” பாரதிதாசன்
- பிராகிருத நாடகத்தில் தென்னிந்தியக் குறிப்புகள்
- பிரளயம் தோன்றிடுமே!
- பார்ப்பன பத்திரிகைகளும் சர். ஷண்முகமும்
- பெரியார் முழக்கம் மே 02, 2024 இதழ் மின்னூல் வடிவில்...