modern art 470கபில மலையில்
உதிர்ந்த கற்கள்
மாஸ்கோ வீதிகளில்
உருண்டோடியது
கூழாங்கற்களாக

மார்க்ஸ்க்குப் பிடித்த ஒன்றை
மறுபடியும் எடுத்து
உறங்கியபோது
கல்லறையில் சிக்கி
கடினத்தைக் கொடுத்தது.

தேவாலயக் கதவுகள் திறந்து
விடிவெள்ளியைத் தேடிய பொழுது
சிறகசைத்து பறவைகள்
வானில் மறைந்தது.

எப்பொழுதும் போல
இரு வேறு கருத்துக்களின்
அனலில் சிக்காத உலகம்
அதன் போக்கில் போனது.

கபில மலையில் பெய்த மழை
காவிரியில் கரை புரண்டு ஓட
மூலதனக் காகிதத்தில் செய்த
கப்பலை மூழ்காமல் விட
முயற்சிக்கும் சிறார்களை
வண்ணத்துப் பூச்சிகள்
அழைத்த வண்ணம் இருந்தது.

வசந்தமாக வாழ்க்கை மாறி
தோழமை கொள்ள
சூரியனும் சந்திரனும்
சுயாதீனமாக சுற்றுவதாக
நம்பிய மனம்
பூமியை மறந்து
புலம்பித் தவிக்கிறது.

- ரவி அல்லது

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.