மரணம்
நிகழ்ந்த வீட்டில்
முதல் சிரிப்பு யாருடையது
*
சுவற்றுக் கற்பனையோ
கோட்டோவியத்தில்
மறுநாள் துளிர் விட்ட செடி
*
கிளையில் அசையும்
காற்றைக் கவனி
காதலில் இருக்கிறது
*
விளை நிலம் விலை நிலமானது
நீரின்றியும் மலர்கின்றன
ஜேசிபிகள்
*
மனிதனின் மலிவான
மகத்துவம்
கோபம்
*
பொய் தானாக நகராது
உண்மையும் பிடித்திழுக்கும்
அரூபத் தேர் அது
*
எந்த மழைக்கும்
கருப்புக் குடை காட்டுவதில்லை
காளான் கூட்டம்
*
கழுகுக்குத் தப்பிய மீனை
அவசரமாய்த்
தழுவிக் கொள்கிறது கடல்
*
பின்னிரவு சாலை
மூட்டை சுமந்த முதுகு
மூச்சு மறந்து உறங்குகிறது
*
முறுக்கிக் கொண்டு திரிவதெல்லாம்
உடைந்து விடும்
முறுக்கைப் பார்
- கவிஜி