கூரை வீடு பிடிக்குமெனக் கேட்ட ஷிவனிதா
அதன் உச்சியில் எப்போதும் ஒரு சேவலை
நிற்கச் சொல்லி
வளைந்திருந்த வாலின் மீது வானவில்லை தீட்டுகிறாள்.
தென்னை ஓலைகளின்
பின்னலை
தன் ஒற்றை ஜடையை ஒத்ததென உள்ளங்கைகளில்
செல்ஃபி எடுத்து
ஒளித்துக் கொள்கிறாள்.
பனையோலை குடில்களை கொஞ்சிவரும் வரை
அவற்றை பத்திரமாக்கும் பொறுப்பு என்
சட்டைப் பையினுடையது.
ஒற்றை நிலவை
நட்சத்திரங்களாய் சிதறச்செய்யும்
கூரையின் ஓட்டைகளை அதிசயிப்பவள்
சூரியனை மட்டும்
மொழிபெயர்க்க வேண்டாமென
அவ்வப்போது கோபித்துக் கொள்கிறாள்.
அணில் விளையாடும் விட்டத்திலிருந்து
தவறி விழுமென
குருவிக் குஞ்சுகளுக்கான பிரார்த்தனைகளை
சுமந்தபடியே பள்ளி செல்பவள்
பருவத்துக்கு ஏற்றபடி மறக்காமல் வேண்டிக் கொள்வாள்..
மழையில் நனையாதிருக்க ஒரு கூரையையும்
கூரை எரியாதிருக்க ஒரு மழையையும்.
- ந.சிவநேசன்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அண்மைப் படைப்புகள்
- நேர்காணலா? நேர்மையற்ற காணலா?
- 'குலத்தொழிலை' தொடருங்கள்! - மோடி
- வாழ்விலிருந்து எனது இலக்கியம்
- மழை நாள்
- தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைக் குற்ற வழக்கு திரும்ப பெறப்பட்டு குற்றவாளிகள் விடுதலை
- தீபாவளி - முட்டாள்தனம்
- பெரியார் முழக்கம் செப்டம்பர் 21, 2023 இதழ் மின்னூல் வடிவில்...
- வீழட்டும் ஆரியம், எழட்டும் திராவிடம், வெல்லட்டும் தமிழ்த் தேசியம்!
- ஒப்பீட்டு நோக்கில் வள்ளுவமும் ஆத்திச்சூடியும்
- ஒவ்வொரு பெட்டியிலும் ரயில் இருக்கிறது
- விவரங்கள்
- ந.சிவநேசன்
- பிரிவு: கவிதைகள்